<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>News of sivam RSS</description><lastBuildDate>Sat, 05 Sep 2026 12:12:56 GMT</lastBuildDate><item><title><![CDATA[தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/s6efv9]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/s6efv9]]></guid><description><![CDATA[<p>மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவை கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிக  தடை விதித்துள்ளது.இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது.நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/s6efv9">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/3c9yusldfqaq9rh84c9baanqqrngj985.png" />]]></description><pubDate>Sat, 05 Sep 2026 12:12:56 GMT</pubDate></item><item><title><![CDATA[விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் – ஏர் கனடா ஊழியர்கள் இருவர் கைது ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/f98nn4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/f98nn4]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ... <a href="https://tamilpoonga.com/view-news/f98nn4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/gv32tm3n6lvj83fhfmzpcdagakmede2a.png" />]]></description><pubDate>Thu, 27 Aug 2026 11:22:29 GMT</pubDate></item><item><title><![CDATA[என் மகனைக் கொல்ல சதி; அச்சத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/evp7lc]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/evp7lc]]></guid><description><![CDATA[<p>தனது மகன்களில் ஒருவரைக் படுகொலை செய்ய ஈரான் அரசுத் திட்டம் தீட்டித் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலின் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதன்போது யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ஈரானிய அமைப்புகள் என் மகனை இலக்கு வைத்து அவரைக் படுகொலை செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். 35 வயதான நெதன்யாகுவின் மூத்த மகன் யாயிர் நெதன்யாகுவே (Yair Netanyahu) இந்தச் சதியில் இலக்காக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி பகுதியில் தங்கியிருந்த யாயிர் நெதன்யாகுவை ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததை இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ (Shin Bet) உளவுத்துறை கண்டறிந்து அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.இந்த ஆபத்தான தகவலைத் தொடர்ந்து, உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் யாயிர் நெதன்யாகு தனது உடமைகளைக்கூட எடுக்காமல் உடனடியாகப் புளோரிடாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில், அனைத்து முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிரி நாடுகள் தங்களது சதித்திட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என்றும் நெதன்யாகு இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.மறுபுறம், ஈரானிய ஊடகங்கள் சமீபத்தில் அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் இலக்கு வைக்கும் விடியோக்களை வெளியிட்டு அச்சுறுத்தி வருகின்றது.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகனுக்கும் இத்தகைய ஆபத்து நேர்ந்துள்ள தகவல் இரு நாடுகளுக்கும் இடையேயான உளவுத்துறைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.  ... <a href="https://tamilpoonga.com/view-news/evp7lc">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/w8kzwsyagkpuwg5jvdeu2hlbn92d59bd.jpg" />]]></description><pubDate>Thu, 27 Aug 2026 11:03:48 GMT</pubDate></item><item><title><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1hih7eu]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1hih7eu]]></guid><description><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.... <a href="https://tamilpoonga.com/view-news/1hih7eu">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/njxqbkw5tdyrghhruwz6v8ve4qa3dwud.jpg" />]]></description><pubDate>Wed, 26 Aug 2026 15:46:46 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் விமானம் மோதி ஊழியர் படுகாயம் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1e3gblb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1e3gblb]]></guid><description><![CDATA[<p>மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை தெரிவித்துள்ளது.மாலை 7:30 மணியளவில், விமான நிலையத் தாரைத்தளத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மோதியதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.தகவல் கிடைத்ததும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்த விசாரணை, கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு இடையிலும் விமான நிலையத்தின் இயல்புச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், பயணிகள் தங்களது விமானங்களின் நிலையைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மொண்ட்ரியால் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1e3gblb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/nywgzkbq8jwiisrk56iqbylt39mys94s.png" />]]></description><pubDate>Tue, 25 Aug 2026 13:34:17 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது - இஸபெலா ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/enbr9d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/enbr9d]]></guid><description><![CDATA[<p>கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய... <a href="https://tamilpoonga.com/view-news/enbr9d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wfs66vt9chet3h5tukqzzs8nxsretyjh.jpg" />]]></description><pubDate>Tue, 25 Aug 2026 13:10:37 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1gfyhvt]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1gfyhvt]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒண்டாரியோ மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-news/1gfyhvt">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/bp5mnbbfttzuzsxptmwm6aniwprw3rnz.png" />]]></description><pubDate>Thu, 20 Aug 2026 13:37:33 GMT</pubDate></item><item><title><![CDATA[3 நாட்களுக்கு கனடா மீதான புதிய வரிகளை நிறுத்திய டிரம்ப் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/2f0741]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/2f0741]]></guid><description><![CDATA[<p>கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன.இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை நிறுத்தி வைத்துள்ளேன் என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.சுமார் 20 பில்லியன் டொலர் (28 பில்லியன் கனேடிய டொலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.வாகனங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் பல கனேடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிக்கிறது.ஆகஸ்ட் 19-ஆம் திகதியை காலக்கெடுவாகக் குறிப்பிட்டு புதிய வரி விதிப்பு குறித்து டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.... <a href="https://tamilpoonga.com/view-news/2f0741">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/uidf8wu67pnwacmymvduqvw4npiekayh.jpg" />]]></description><pubDate>Wed, 19 Aug 2026 12:42:29 GMT</pubDate></item><item><title><![CDATA[கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/z1c649]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/z1c649]]></guid><description><![CDATA[<p>அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-news/z1c649">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/gjcvk3qzw2dzpjsn7waa2txzjr569ipe.png" />]]></description><pubDate>Wed, 19 Aug 2026 12:34:25 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் கைது ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/16eq0tu]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/16eq0tu]]></guid><description><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/16eq0tu">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/azqnffwy7wyfjtep8cqpbdtpx5lgedek.png" />]]></description><pubDate>Mon, 17 Aug 2026 14:26:24 GMT</pubDate></item></channel></rss>