<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>News of sivam RSS</description><lastBuildDate>Tue, 31 Mar 2026 14:58:31 GMT</lastBuildDate><item><title><![CDATA[மசூத் அசார் திடீர் மரணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></guid><description><![CDATA[<p>ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.... <a href="https://tamilpoonga.com/view-news/52y35d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yyl9wwsrycgkc4fnvxq3rbgrp7gitqsm.jpg" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 14:58:31 GMT</pubDate></item><item><title><![CDATA[எங்களை தாக்கினால் கைகளை வெட்டுவோம்! - இஸ்ரேலை எச்சரிக்கும் லெபனான்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/waiufq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/waiufq]]></guid><description><![CDATA[<p>லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-news/waiufq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yhy6lff9qsmbik2eelkqd7p8gwbagbpi.jpg" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 14:40:51 GMT</pubDate></item><item><title><![CDATA[சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை - கனடாவில் விவாதம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/c7yud8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/c7yud8]]></guid><description><![CDATA[<p>கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கிறது.கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். எனினும், இது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.மேலும், ஆன்லைன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியம் என்றும், சமூக ஊடகங்களுக்கான “வயது வரம்பு” குறித்த விவாதமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ... <a href="https://tamilpoonga.com/view-news/c7yud8">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/fu4ftuqdrxeerfxbvvg3rwsfxtnwzwav.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:57:20 GMT</pubDate></item><item><title><![CDATA[ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கனடாவில் பிரவேசிக்க தடை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ir3msq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ir3msq]]></guid><description><![CDATA[<p>ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த மறுப்புக்கான உண்மையான காரணம், இஸ்ரேல் நுழைவு மறுப்பு மற்றும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துள்ள வலுவான கருத்துகளே என அவரது கட்சி கூறுகிறது.இந்த வாரம் மான்ட்ரியலில் நடைபெறவிருந்த “பலஸ்தீன ஆதரவு குரல்கள் அடக்கப்படுவது” மற்றும் “வலதுசாரி அரசியல் எழுச்சி” தொடர்பான இரண்டு மாநாடுகளில், ரிமா ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளார். ... <a href="https://tamilpoonga.com/view-news/1ir3msq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/hndxavdtudmekvjmhnre8w8iwljw5yiy.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:39:11 GMT</pubDate></item><item><title><![CDATA[தபால் மூலம் போதைப் பொருள் கடத்தியவர் கைது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m1t8l1]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m1t8l1]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டார்.13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில் (crossbow), போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் மற்றும் வாகன அடையாள எண் (VIN) மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1m1t8l1">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/zp9c6p4xmte6n3wbxxzadkrdud3lgebu.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:26:01 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் மர்மப்பொருள் மீட்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/5uulur]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/5uulur]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மிட்லாந்து பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்தனர்.இரவு சுமார் 11 மணியளவில் டொனால்டா வீதி – ஜான்சன் வீதி அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு இளைஞர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைய இராணுவ ஆயுதத்தைப் போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதை அருகிலுள்ள வீட்டுக்குள் கொண்டு சென்ற பின்னரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டிலிருந்தவர்களையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.மேலும், அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, OPP வெடிகுண்டு அகற்றும் பிரிவும் (Explosives Disposal Unit) அழைக்கப்பட்டது.நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, அந்த பொருள் உண்மையில் வெடிகுண்டு அல்ல; இராணுவ பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சாதனம் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த பொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டது.... <a href="https://tamilpoonga.com/view-news/5uulur">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yycyxygaxquubig8kezxnjvxdfhhxfnn.png" />]]></description><pubDate>Mon, 30 Mar 2026 13:59:11 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் எரிபொருள் விலை உயர்வு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/pi03bh]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/pi03bh]]></guid><description><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை இந்த வாரம் லிட்டருக்கு 2 டொலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் கார் பயணங்களுடன் விமான பயணங்களும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், உலகளவில் எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன.ட்ரூடோ விமான நிலையம் பகுதியில் பயணிகள் செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.“விமான டிக்கெட் விலை அதிகமாக உள்ளது, ஆனால் அதை ஏற்க வேண்டியதே” என சிலர் தெரிவித்தனர்.ஜான் கிரடெக் கூறுகையில், “கார் எரிபொருள் லிட்டருக்கு 40–50 சென்ட் வரை உயர்ந்துள்ளது; விமான எரிபொருள் விலை இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.இதன் தாக்கமாக போர்டர் ஏர்லைன்ஸ் சில விமான டிக்கெட்டுகளுக்கு 40 டொலர் வரை எரிபொருள் கட்டணத்தை அறவிடத் தொடங்கியுள்ளது.இது தற்காலிக நடவடிக்கை என நிறுவனம் தெரிவித்தாலும், இதுபோன்ற கட்டணங்கள் நிரந்தரமாகிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.... <a href="https://tamilpoonga.com/view-news/pi03bh">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wdwwlghkis5nx6t2tgjwmdyypumafajm.png" />]]></description><pubDate>Mon, 30 Mar 2026 13:46:23 GMT</pubDate></item><item><title><![CDATA[95 வயதிலும் தொண்டு செய்யும் மூதாட்டி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1oa7g9j]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1oa7g9j]]></guid><description><![CDATA[<p>கனடாவில் எமிலி கோசாக் என்ற 95 வயதான மூதாட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவையால் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.ஹோலி ஃபாமிலி நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு தனது தாயார் அங்கு வசித்தபோது தொடங்கிய இந்த சேவை, இன்று வரை இடையறாது தொடர்ந்து செய்து வருகிறார்.நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், பிங்கோ விளையாட்டுகளை நடத்துதல், தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.95 வயதிலும் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு, அனைவரின் வாழ்விலும் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.“ஒவ்வொரு நாளும் எனக்கு செய்ய ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கம் பலருக்கும் ஊக்கமாக உள்ளது.முன்னதாக இடுப்பு எலும்பு முறிவு, புற்றுநோய், இதய நோய் தாக்கங்கள் போன்ற சவால்களை சந்தித்திருந்தாலும், அவை எதுவும் அவரது சேவையை தடுக்கவில்லை.தற்போது நடை உதவிக்கருவி பயன்படுத்தினாலும், தனது தொண்டை தொடர்ந்து செய்கிறார்.இந்த நர்சிங் ஹோமின் பராமரிப்பு இயக்குநரான ஸ்டேசி மோர்கன், “எமிலி போன்ற தன்னார்வலர்கள் எங்கள் அமைப்பின் இதயம். அவர் தினமும் வந்து நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்” என்று பாராட்டினார்.மேலும், 60-70 பெண்கள் கொண்ட தன்னார்வ குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எமிலி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். “95 வயதிலும் இவ்வாறு சேவை செய்வது மிக அபூர்வம்” எனவும் அவர் குறித்து கூறப்படுகிறது. “மற்றவர்களும் அதிகமாக தன்னார்வ பணிகளில் ஈடுபட வேண்டும்” என எமிலி கோசாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.சிறிய உதவிகள்கூட பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1oa7g9j">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/fpw4sa5kzqzamwqqpskr98mcqnuut9cu.jpg" />]]></description><pubDate>Mon, 30 Mar 2026 13:42:20 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடா என்.டி.பி கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1rw3aez]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1rw3aez]]></guid><description><![CDATA[<p>கனடாவின் புதிய ஜனநாயகக் (NDP) கட்சியின் புதிய தலைவராக அவி லிவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கூட்டாட்சித் தரத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ள கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமைத் தேர்தலில் 56% ஆதரவு பெற்று, 39,734 உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற லிவிஸ், “எங்கள் கட்சி மீண்டும் எழுகிறது” என உறுதியளித்தார்.புதிய தலைவர் தனது உரையில், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களையும், டிரம்ப் தலைமையிலான உலக அரசியல் சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவின் முக்கிய அரசியல் கட்சிகள் செல்வந்தர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பணக்காரர்களுக்காக அல்ல, பொதுமக்களுக்காக செயல்படும் அரசை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.அவி லிவிஸ் ஒரு அனுபவமிக்க பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1rw3aez">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/aeqmzziiueaifkzc3fnhtjge3edhh7qy.png" />]]></description><pubDate>Sun, 29 Mar 2026 18:27:37 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடா அமெரிக்க எல்லையில் கனடியர் சந்தித்த மோசமான அனுபவம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/so1qwr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/so1qwr]]></guid><description><![CDATA[<p>அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்ட நிலையிலும், கனடியர்களை அமெரிக்க எல்லை அதிகாரிகள் மோசமாக நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.அமெரிக்கா செல்ல முயன்ற கனடியர் ஒருவர், அமெரிக்க எல்லையில் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார். கெவின் லார்சன் (68) என்னும் கனடியர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார். டிரம்ப் நிர்வாகம் கனடியர்களை நடத்தும் விதம் குறித்து தான் நன்கு அறிந்திருப்பதாக தெரிவிக்கும் கெவின், தன்னை அமெரிக்க எல்லை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிடக்கூடும் என்பதைக் கூட தான் அறிந்துவைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.என்றாலும், இப்படி ஒரு மோசமான அனுபவம் தனக்குக் கிடைக்கும் என தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவர்.ஆம், எல்லையில் கெவினை நிறுத்தி கேள்விகள் கேட்ட அமெரிக்க எல்லை அதிகாரிகள், அவரிடம், தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை என கூறும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும்படி கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, கெவினிடம் அவரது DNAவை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்கள் அமெரிக்க அதிகாரிகள்.தான் ஒன்றும் குற்றவாளி அல்ல என்று கூறி DNAவை சேகரிக்க கெவின் அனுமதி மறுக்க, அவரை ஓராண்டு சிறையில் அடைக்கமுடியும் என மிரட்டியுள்ளார்கள் அவர்கள். ஆகவே, வேறு வழியில்லாமல் தனது DNAவை சேகரிக்க அவர்களுக்கு அனுமதியளித்துள்ளார் அவர்.இந்த விடயத்தை அவர் ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேமி ராஸ்கின் (Jamie Raskin) மற்றும் டெபி டிங்கல் (Debbie Dingell) ஆகிய இருவரும் கெவின் நடத்தப்பட்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ட்ரம்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கெவினை நடத்திய விதம் குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார்கள்.அத்துடன், மிச்சிகனைச் சேர்ந்த டெபி டிங்கல், கனடா தங்கள் குடும்பம் என்றும், கனடாவுக்கும் மிச்சிகனுக்குமான உறவு விலையேறப்பெற்றது என்றும், நாங்கள் கனேடியர்களை நேசிக்கிறோம் என்றும் கூறியுள்ளதுடன், கெவின் விவகாரம் குறித்து தாங்கள் விளக்கம் கேட்டுள்ளதாகவும், பதில் கிடைக்கும் வரை விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார... <a href="https://tamilpoonga.com/view-news/so1qwr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/nq3rhxnnfbevuux44qaujbzyxym43pun.jpg" />]]></description><pubDate>Sat, 28 Mar 2026 15:56:10 GMT</pubDate></item></channel></rss>