<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>News of sivam RSS</description><lastBuildDate>Sat, 16 May 2026 15:18:03 GMT</lastBuildDate><item><title><![CDATA[வனவிலங்குகளைத் தொந்தரவு செய்தால் பெருந்தொகை அபராதம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vzgbuv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vzgbuv]]></guid><description><![CDATA[<p>கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள 'பைப்பிங் பிளவர்' (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் தொந்தரவு செய்பவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.நாட்டிலேயே மிகவும் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதிய விதிகளின் கீழ் விதிக்கப்படும் அபராத விபரங்கள் பின்வருமாறு:வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை பலகைகளை மதிக்காமல் நடத்தலுக்கு 2000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வசாகா பீச்சின் 'பீச் 1' (Beach 1) பகுதி இந்தப் பறவைகள் ஆண்டுதோறும் கூடுகட்டி முட்டையிடும் முக்கிய இடமாகும். அண்மையில், இப்பகுதியில் உள்ள மணல் மேடுகளை (Dunes) கட்டுமானக் குழுவினர் தவறுதலாகச் சுத்தம் செய்ததால் பறவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டன.இது தொடர்பாகச் சூழலியல் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சட்டத்தை நகர நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1vzgbuv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/awxv9jvvqwmljvzm2jk6ipsluhbk5blx.jpg" />]]></description><pubDate>Sat, 16 May 2026 15:18:03 GMT</pubDate></item><item><title><![CDATA[ஒண்டாரியோவில் பாரியளவில் விஸ்தரிக்கப்படும் சிறைகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/bzqspx]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/bzqspx]]></guid><description><![CDATA[<p>ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 2,500 புதிய படுக்கை வசதிகளை (beds) உருவாக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரி செலுத்துவோரின் பணம் 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் என்று மாகாண சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் தெரிவித்துள்ளார்.வியாழக்கிழமை இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் கெர்ஸ்னர், மாகாண அரசு புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கவுள்ளதுடன், தற்போதுள்ள சிறைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.வால்கர்டன் மற்றும் பிராம்ப்டன் (Brampton) பகுதிகளில் ஏற்கனவே மூடப்பட்ட சில சிறைச்சாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. படுக்கை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் மாதத்திற்குள் 255 இடங்கள் சேர்க்கப்படும். மேலும், 700 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை (Correctional officers) பணியமர்த்தவும் அரசு தீர்மானித்துள்ளது.ஆபத்தான குற்றவாளிகளை வீதிகளில் நடமாட விடாமல் கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருப்பதை உறுதி செய்யவும், சிறைச்சாலை ஊழியர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றத் தேவையான இடவசதி மற்றும் கருவிகளை வழங்கவும் இந்த நவீனமயமாக்கல் அவசியம், என்று கெர்ஸ்னர் குறிப்பிட்டார்.செலவை குறைக்கும் நோக்கில் சில சிறைகள் நவீன கட்டுமானக் கூறுகளைக் (Modular components) கொண்டு கட்டப்படவுள்ளன. அரசாங்கத்தின் தரவுகளின்படி, ஒண்டாரியோ சிறைச்சாலைகள் தற்போது அவற்றின் கொள்ளளவை விட 127 சதவீதம் அதிகமாக நிரம்பியுள்ளன.2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 8,676 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைகளில் சராசரியாக 11,058 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.2020 ஆம் ஆண்டில் 80 சதவீதமாக இருந்த சிறைக்கொள்ளளவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.ஏப்ரல் 1 ஆம் திகதி நிலவரப்படி, சிறைகளில் உள்ளவர்களில் 81 சதவீதத்தினர் இன்னும் விசாரணைக்காக காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.... <a href="https://tamilpoonga.com/view-news/bzqspx">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/lvtucjjwt432fwbz3ue4dnnr2fn24mwa.png" />]]></description><pubDate>Sat, 16 May 2026 15:09:57 GMT</pubDate></item><item><title><![CDATA[2 வயது மகளை கொலை செய்த தாய்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1sasd5t]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1sasd5t]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில், தனது இரண்டு வயது கூட நிரம்பாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக அவரது தாயார் மீது பொலிஸார் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், மிட்லாண்ட் அவென்யூ மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு 911 அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தை ஓரியானா சோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.அக்குழந்தை இன்னும் ஒரு மாதத்தில் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயான 37 வயது சி திங் யாங் (Si Ting Yang) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலை இந்த ஆண்டின் ஸ்கார்பாரோ பகுதியில் பதிவான 8-வது கொலைச் சம்பவமாகும். அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/1sasd5t">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/6s3akxhjhrnjxykwsmlacpvavvsx6pnt.png" />]]></description><pubDate>Thu, 14 May 2026 14:43:13 GMT</pubDate></item><item><title><![CDATA[டொராண்டோவில் 500,000 டொலர் மதிப்பிலான நகைகள் கொள்ளை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1y5bwsn]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1y5bwsn]]></guid><description><![CDATA[<p>டொராண்டோ நகரின் மையப்பகுதியில் வாகனத்தில் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் 500,000 டொலர் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நான்கு மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.காவல்துறையினரின் தகவல்படி, இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் ஸ்படைனா அவென்யூ மற்றும் ப்ரெம்னர் பொலிவார்ட் சந்திப்புப் பகுதியில் அதிகாலை சுமார் 4:50 மணியளவில் நடந்துள்ளது.முகமூடி அணிந்த நான்கு நபர்கள், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அணுகியுள்ளனர். வாகனத்திற்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருந்த விலையுயர்ந்த நகைகளைப் பறித்துள்ளனர்.காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு அரை மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நான்கு பேரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களின் அடையாளங்கள் முழுமையாகத் தெரியவில்லை.கொள்ளையர்கள் திருடப்பட்ட உரிமத் தகடு கொண்ட நீல நிற நிசான் ரோக் காரை பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய வாகனத்தைக் கண்டாலோ உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ... <a href="https://tamilpoonga.com/view-news/1y5bwsn">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/2gbzyk24cmjhggvxfsksjzftjnqqu5bj.png" />]]></description><pubDate>Wed, 13 May 2026 16:21:14 GMT</pubDate></item><item><title><![CDATA[பெரும்பான்மை நிரூபித்த தவெக]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/4mcfo9]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/4mcfo9]]></guid><description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது.இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், " மனசாட்சியுள்ள மக்களாட்சியை இந்த அரசு தரும். எதிர் தரப்பில் பேசியவர்கள் இது சிறுபான்மை அரசு என்றார்கள். ஆம் இது சிறுபான்மை அரசு தான். இது சிறுபான்மை மக்களுக்காக செயல்படும் அரசு தான். எவரையும் வெறுக்கும் அரசு இல்ல.எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலனே முக்கியம். இது அதிகாரம் காட்டும் அரசு அல்ல. அரவணைக்கும் அரசு.துள்ளி எழுந்து பதில் சொல்வதைவிட எதிலும் துணிச்சலாக செயலாற்றும் அரசு. மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி." என்று தெரிவித்திருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-news/4mcfo9">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/mvkewudwqaqnrmvj8svzyflbpn5iaexx.jpg" />]]></description><pubDate>Wed, 13 May 2026 16:10:27 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் 86,000 டாலர் வங்கி மோசடி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/19kh5tf]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/19kh5tf]]></guid><description><![CDATA[<p>ஒண்டாரியோவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தனிநபர் மற்றும் வணிக வங்கி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கடன் அட்டைகள், ஒண்டாரியோ ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தியதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.கணவர், வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, புதிய கணக்குகளைத் தொடங்கி டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளார். மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்குள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து அவர் பணத்தை எடுத்துள்ளார்.இவ்வாறு திருடப்பட்ட சுமார் 86,000 கனடிய டாலர் தொகையை, அவரது மனைவி தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நபர் பிராம்ப்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது பிணை நிபந்தனைகளை மீறியது மற்றும் 5,000 டொலருக்கு மேலான மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே வங்கி ஆவணங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவில் இருந்தபோதே இவர் மீண்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். பென்டோவின் மனைவியான இவர் மே 6ம் திகதி கைது செய்யப்பட்டார்.  இவர் மீது குற்றச் செயல்கள் மூலம் சொத்து சேர்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த வங்கி நிறுவனங்கள் இழப்பீடு வழங்கிவிட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தம்பதியினரால் பாதிக்கப்பட்ட இன்னும் பல வாடிக்கையாளர்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ... <a href="https://tamilpoonga.com/view-news/19kh5tf">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/kr5wevvtzpan7pjbum5tvsvc98hsaafs.png" />]]></description><pubDate>Tue, 12 May 2026 16:20:10 GMT</pubDate></item><item><title><![CDATA[தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ahn9b]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ahn9b]]></guid><description><![CDATA[<p>தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/ahn9b">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/ysqvg73qadmmwsvwehip58sfmwdsghhy.jpg" />]]></description><pubDate>Sun, 10 May 2026 15:54:37 GMT</pubDate></item><item><title><![CDATA[விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/15x9t44]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/15x9t44]]></guid><description><![CDATA[<p>தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிடிஆர்.நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.அதேவேளையில், விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3-வது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கினார். அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்ற விஜய், அங்கு அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் விசிகவும் ஆதரவு அளித்துள்ளது. அதன்பின் ஐயூஎம்எல் ஆதரவின் மூலம் தவெக பலம் இப்போது 120 ஆக உயர்ந்துள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-news/15x9t44">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/a8byxlq5gq5suucymwjgnh5ydkukcwgh.jpg" />]]></description><pubDate>Sat, 09 May 2026 13:54:22 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் வேலையின்மை குறித்து வெளியான தகவல் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/dviswt]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/dviswt]]></guid><description><![CDATA[<p>கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி விதிப்புகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியில் கனேடிய வேலைவாய்ப்பு சந்தை கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.ஏப்ரல் மாதத்தில் 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக 17,700 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முழுநேர வேலைவாய்ப்புத் துறையில் 46,700 பணியிடங்கள் பறிபோயுள்ளன.இது பகுதிநேர வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட 29,000 அதிகரிப்பால் ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையில் பலவீனம் தொடர்வதையே இது காட்டுகிறது.பொருட்களை உற்பத்தி செய்யும் துறையில் ஏற்பட்ட 26,800 வேலை இழப்புகள், அமெரிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.அதேவேளை, வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 'பங்கேற்பு விகிதம்' 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதமும் முறையே 6 சதவீதம் மற்றும் 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/dviswt">Read more</a></p><img src="https://tamilpoonga.com/image_transcoder.php?o=mz_news_gallery&h=378&dpx=1&t=1779077173" />]]></description><pubDate>Sat, 09 May 2026 13:50:41 GMT</pubDate></item><item><title><![CDATA[விஜய்க்கு ஏன் சிஎம் பாதுகாப்பு கொடுத்தீங்க? -   தமிழக ஆளுநர் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/18zebvc]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/18zebvc]]></guid><description><![CDATA[<p>விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும், முதல்வருக்கு உண்டான பாதுகாப்புகள் விஜய்க்கு வழங்கப்பட்டன. நேற்று கான்வாய் வாகனங்கள் உள்பட வீட்டின் முன் நிறுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்லேகர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை நேரில் அழைத்து எதன் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.மேலும் அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவிகளும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர் செல்லும் இடங்களில் முதல்வருக்கான கான்வாய் உடன் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், முதல்வருக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுமோ அதுபோன்ற பாதுகாப்புகள் அளிக்கப்பட்டன.இந்த பாதுகாப்புடன் கடந்த இரு தினங்களாக விஜய் வலம் வந்தார். இதற்கிடையே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததையடுத்து நேற்று இரவோடு இரவாக அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. விஜய் கேட்டுக் கொண்டதால்தான் நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக த.வெ.க. இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார். ஆனால், விஜய் முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்லேகர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை அழைத்து விஜய்க்கு ஏன் முதல்வருக்கான பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்ற கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக ஆளுநர் - டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமை செயலர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது விஜய்க்கு எதன் அடிப்படையில் முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. உளவுத்துறை சில எச்சரிக்கைகள் கூறியிருந்தது. அது தொடர்பாக எ... <a href="https://tamilpoonga.com/view-news/18zebvc">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/taicxphwcnxet2dkt3yymg6ky3r22qv4.jpg" />]]></description><pubDate>Thu, 07 May 2026 15:07:17 GMT</pubDate></item></channel></rss>