<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News of srikanth RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/author/5]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/author/5" rel="self" type="application/rss+xml" /><description>News of srikanth RSS</description><lastBuildDate>Thu, 05 Jun 2025 12:20:01 GMT</lastBuildDate><item><title><![CDATA[தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/zg5we1]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/zg5we1]]></guid><description><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்த திரு. சிவஞானம் அவர்கள், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/pbudgmr34ee73kbzrgs9ffpimdwzavke.jpg" />]]></description><pubDate>Thu, 05 Jun 2025 12:20:01 GMT</pubDate></item><item><title><![CDATA[தமிழர் தாயகத்தை தமிழரே ஆழவேணடும் - சிவகுமாரனின் நினைவு நிகழ்வில டக்ளஸ் தேவானந்தா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/தம-ழர-த-யகத-த-தம-ழர-ஆழவ-ணட-ம]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/தம-ழர-த-யகத-த-தம-ழர-ஆழவ-ணட-ம]]></guid><description><![CDATA[<p>தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக முதல் உயிர் தியாகம் செய்த பொன். சிவகுமாரனின் 51 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும், கடந்த காலங்களில் எமது மக்களுக்கு எதிராக தென்னிலங்கை தரப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் அண்ணன் பொன். சிவகுமாரன் போன்றோரை வன்முறை சார்ந்த வழிமுறைக்கு தள்ளியிருந்தது. தொடர்ந்து எம்மைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் அந்த வழிமுறையில் பயணித்திருக்கின்றோம்.நாம் அனைவரும் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் எமக்கு கிடைத்திருந்தது. அதனை முழுமையான தீ்ர்வாக கருதாத போதிலும் ஒரு ஆரம்பமாக கருத முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு தற்போது அனைத்து தமிழ் தரப்புக்களும் வந்திருப்பதை காணமுடிகின்றது.இதனையே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.இ்வ்வாறான பின்னணியிலேயே இன்று அண்ணன் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவு நிகழ்வில் பங்குபற்றி இருக்கின்றோம்.பொன். சிவகுமாரன் என்ன நோக்கத்திற்காக உயிரிழந்தார்?, அவருடைய சிந்தனைகள் எந்தளவு உயர்வானதாக இருந்தன? என்பதை எல்லாம் பலரும் வெளிப்படுத்தி இருந்தனர். எனவே பொன் சிவகுமாரனின் கனவு நனவாக்கப்பட வேண்டும். அந்த கனவு, உள்ளூராட்சி சபைகளில் நடைமுறையாவதை தமிழ் தரப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்பொன். சிவகுமாரன் போன்ற விடுதலை வித்துக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி என்பது அவர்களது இலட்சியக் கனவுகளை வென்றெடுப்பதேயாகும்." என்று தெரிவித்தார்.... <a href="https://tamilpoonga.com/view-news/தம-ழர-த-யகத-த-தம-ழர-ஆழவ-ணட-ம">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/tltfgfemxgexcuugkd3nvsygbcbiuzwe.jpg" />]]></description><pubDate>Thu, 05 Jun 2025 10:03:54 GMT</pubDate></item><item><title><![CDATA[புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் மோசடிகள் - கல்வியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-த-த-க-ம-ணவர-கள-ச-ர-த-த-க-க-ள-வத-ல]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-த-த-க-ம-ணவர-கள-ச-ர-த-த-க-க-ள-வத-ல]]></guid><description><![CDATA[<p>பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன எச்சரித்துள்ளார்.பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் முறைகேடுகள் இடம்பெற்றால் கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுள்ளார்000... <a href="https://tamilpoonga.com/view-news/ப-த-த-க-ம-ணவர-கள-ச-ர-த-த-க-க-ள-வத-ல">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/pdgq2uay8zyktmdqpk6temmbgqb53sld.jpeg" />]]></description><pubDate>Wed, 04 Jun 2025 09:55:30 GMT</pubDate></item><item><title><![CDATA[வேலணை பிரதேச சபை நடவடிக்கை - தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு சிரமதானம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/வ-லண-ப-ரத-ச-சப-நடவட-க-க-த-ச-ய]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/வ-லண-ப-ரத-ச-சப-நடவட-க-க-த-ச-ய]]></guid><description><![CDATA[<p>தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த சிரமதானம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.வேலணை பிரலதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் குறித்த சிரமதான பணி  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.00</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yrhwqzdfejmqnvhcwxkpjcg3ejjzexxd.jpeg" />]]></description><pubDate>Wed, 04 Jun 2025 09:53:55 GMT</pubDate></item><item><title><![CDATA[மனைவியை கொலை செய்து தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - புளியங்குளத்தில் சம்பவம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/மன-வ-ய-க-ல-ச-ய-த-தல-ய-டன-ப-ல-ஸ]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/மன-வ-ய-க-ல-ச-ய-த-தல-ய-டன-ப-ல-ஸ]]></guid><description><![CDATA[<p>வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில்  குடும்பத்தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் புளியங்குளம் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்த கணவன்- தனது மனைவியின் கழுத்தை அறுத்து தலையை மோட்டார்சைக்கிளில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.... <a href="https://tamilpoonga.com/view-news/மன-வ-ய-க-ல-ச-ய-த-தல-ய-டன-ப-ல-ஸ">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/rd78ej2ybnbzqewlkhvtasvtuc7egxrz.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 07:27:22 GMT</pubDate></item><item><title><![CDATA[பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்க யாழ்ப்பாணத்தில் நடைபவனி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-ல-த-த-ன-ப-வன-ய-ம-ற-ற-க-இல-ல-த-ழ-க-க]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-ல-த-த-ன-ப-வன-ய-ம-ற-ற-க-இல-ல-த-ழ-க-க]]></guid><description><![CDATA[<p>இலங்கைத்தீவில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறபுள்ளதாகSAFE LIFE அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைபாளர் சுதர்சிகா தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள் கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது.குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும்.ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை.சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நடைபெறவுள்ளது.இதில் மாணவர்கள் பொதுனல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000... <a href="https://tamilpoonga.com/view-news/ப-ல-த-த-ன-ப-வன-ய-ம-ற-ற-க-இல-ல-த-ழ-க-க">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/6zst8pannpwqauxhgpwket3crbpumlkj.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 06:42:52 GMT</pubDate></item><item><title><![CDATA[பொன்னாலை பாலத்தில் விபத்துக்குள்ளான ஹையேஸ் ரக வாகனம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-ன-ன-ல-ப-லத-த-ல-வ-பத-த-க-க-ள-ள-ன-ஹ-ய-ஸ]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ப-ன-ன-ல-ப-லத-த-ல-வ-பத-த-க-க-ள-ள-ன-ஹ-ய-ஸ]]></guid><description><![CDATA[<p>இன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/mhamxxi7mpqswbatvf7rk44adrye3d24.jpeg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 04:42:55 GMT</pubDate></item><item><title><![CDATA[கொரோனா தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கு முறையானதொரு திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை - பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/க-ர-ன-த-ற-ற-ளர-கள-அட-ய-ளங-க-ண-பதற-க]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/க-ர-ன-த-ற-ற-ளர-கள-அட-ய-ளங-க-ண-பதற-க]]></guid><description><![CDATA[<p>டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இந்தியாவின் கேரள மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.... <a href="https://tamilpoonga.com/view-news/க-ர-ன-த-ற-ற-ளர-கள-அட-ய-ளங-க-ண-பதற-க">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/slaamuhpxrfwx27vyyqjanvtx2ffzs6x.jpeg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 04:38:27 GMT</pubDate></item><item><title><![CDATA[ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு - டிஜிட்டல் பொருளாதார அமைச்சு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ஸ-ட-ர-ல-ங-க-அற-ம-கப-பட-த-த-வதற-க-த]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ஸ-ட-ர-ல-ங-க-அற-ம-கப-பட-த-த-வதற-க-த]]></guid><description><![CDATA[<p>இணையச் சேவை வழங்குநரான ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்குத் தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஸ்டார்லிங்க் இலங்கைக்கு வழங்கியவுடன், அதன் சேவைகள் இலங்கையில் செயற்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து முன்நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீவ் லாங்குடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அங்கீகாரமளித்தமை குறிப்பிடத்தக்கது.000... <a href="https://tamilpoonga.com/view-news/ஸ-ட-ர-ல-ங-க-அற-ம-கப-பட-த-த-வதற-க-த">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/sgrpfb8jl7pwtpmbipxje4k6ymt5ictj.jpeg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 04:36:32 GMT</pubDate></item><item><title><![CDATA[அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ வி{யமாக இலங்கை வருகை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/அவ-ஸ-த-ர-ல-ய-வ-ன-த-ண-ப-ப-ரதமர-ர-ச-சர-ட]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/அவ-ஸ-த-ர-ல-ய-வ-ன-த-ண-ப-ப-ரதமர-ர-ச-சர-ட]]></guid><description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் குழு அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.இவ் விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறைசார் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது000... <a href="https://tamilpoonga.com/view-news/அவ-ஸ-த-ர-ல-ய-வ-ன-த-ண-ப-ப-ரதமர-ர-ச-சர-ட">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/adxggy455dw2ev3vd2kbvnsp3nmzgrj5.jpeg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 04:33:18 GMT</pubDate></item></channel></rss>