<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/author/11]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/author/11" rel="self" type="application/rss+xml" /><description>News of sivam RSS</description><lastBuildDate>Tue, 22 Jul 2025 16:54:22 GMT</lastBuildDate><item><title><![CDATA[கனடாவில் 15 வயது சிறுவன் குத்தி கொலை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pqqdac]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pqqdac]]></guid><description><![CDATA[<p>கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன. இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வன்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1pqqdac">Read more</a></p>]]></description><pubDate>Tue, 22 Jul 2025 16:54:22 GMT</pubDate></item><item><title><![CDATA[தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1fzkekj]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1fzkekj]]></guid><description><![CDATA[<p>லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/p3zpgba2ya5gruzbvvwtjbjcd6sryllh.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:45:05 GMT</pubDate></item><item><title><![CDATA[வாகன விபத்தில் மிஸிசாகாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழப்பு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/gmbx3l]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/gmbx3l]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மிஸிசாகா நகரை சேர்ந்த 77 வயதான ஒரு முதியவர், சனிக்கிழமை (ஜூலை 19, 2025) அதிகாலை, பியர்சன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹைவே 401 கிழக்கு வழித்தடத்தில் நடந்து சென்ற போது வாகனமொன்றால் மோதி உயிரிழந்தார் என ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துயரமான சம்பவம் அதிகாலை 5 மணிக்கு டிக்சன் சாலை அருகே ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.முதலில் ஏற்பட்ட வாகன விபத்துக்குப் பிறகு, உயிரிழந்தவர் தன்னுடைய SUV வாகனத்திலிருந்து வெளியேறிய பின்னரே அவர் மோதி வீழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முதியவருடன் இரண்டு பேர் மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது தெரியவில்லை.ஹைவே 401 மற்றும் 427 இல் பெரும் போக்குவரத்து பாதிப்பு விபத்து ஏற்பட்ட பிறகு, காலை 7 மணியளவில் ஹைவே 401 கிழக்குத் திசை, ஹைவே 427 இணைப்பு அருகில் மூடப்பட்டது.வாகன சாரதிகள் மாற்றுவழிகளை தேர்வு செய்யுமாறு OPP கேட்டுக்கொண்டது.   நள்ளிரவு 12:03 மணிக்கு அனைத்து கிழக்குத் திசை வழித்தடங்களும் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ... <a href="https://tamilpoonga.com/view-news/gmbx3l">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/hsw4gzy6kzrwxumsergun6hgtctxqrdz.jpg" />]]></description><pubDate>Sun, 20 Jul 2025 14:15:21 GMT</pubDate></item><item><title><![CDATA[கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1n2hvid]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1n2hvid]]></guid><description><![CDATA[<p>சுமார் இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத் (வயது 36) காலமானார்.இளவரசர் கலித் பின் தலால் “தூங்கும் இளவரசர்” என அழைக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.1990 ஏப்ரலில் பிறந்த அவர், சவூதி பேரரசர் கலித் பின் தலால் அல் சவூத் என்பவரின் மகனும், புகழ்பெற்ற பணக்கார இளவரசர் அல்வலீத் பின் தலாலின் உறவினருமாவார். 2005 ஆம் ஆண்டு, லண்டனில் இராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 15 வயதில், அவர் கடுமையான சாலை விபத்தில் சிக்கினார்.இதில் தலையில் கனமான காயங்கள் மற்றும் உட்புற இரத்தக்கசிவு ஏற்பட்டது. அமெரிக்க மற்றும் ஸ்பெயின் மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சையையும் எதிர்கொண்டும், அவர் முழுமையாக உணர்வில் திரும்பவில்லை. ஆனால், சில சமயங்களில் நுண்ணிய அசைவுகள் காணப்பட்டதால், குடும்பத்தினர் நம்பிக்கையை இழக்கவில்லை.அவரது தந்தை இளவரசர் கலித், உயிர்காப்பு உதவிகளை நீக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனைகளை நிராகரித்து, இறைவனின் மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து, 20 ஆண்டுகள் மகனை அனுதினமும் பராமரித்து வந்தார்.குர்ஆன் ஓதும் சத்தத்துக்கு இளவரசர் அல்வலீத் சற்றே பதிலளிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.  இந்நிலையில், அவர் சவூதி அரேபியாவிலுள்ள சிறப்பு மருத்துவமனையொன்றில் காலமானார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1n2hvid">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/zkf3uqe2m6pxgkw8pujhgwg4ru6aipqz.jpg" />]]></description><pubDate>Sun, 20 Jul 2025 14:10:01 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் விமானம் மோதியதில் உயிரிழந்த சிறுவன் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1yl5gyl]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1yl5gyl]]></guid><description><![CDATA[<p>கனடாவில் விமானம் மோதியதில் 16 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகி கீழே வீழ்ந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சேகொக் படகுத்துறையில் இருந்த சிறுவன் மீது விமானம் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்தில் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகுத்துறையில் தரித்து நின்ற படகு ஒன்றின் மீது விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/eun4rcbn8upfckdcda5qiip3tue78cye.png" />]]></description><pubDate>Sat, 19 Jul 2025 16:06:51 GMT</pubDate></item><item><title><![CDATA[கியூபா அமைச்சர் ராஜினாமா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/172efpw]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/172efpw]]></guid><description><![CDATA[<p>கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார். அவரது கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wsz6eitczv4bfdjnlyazmpeaumautijr.jpg" />]]></description><pubDate>Sat, 19 Jul 2025 15:58:42 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/8bxkph]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/8bxkph]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மார்க்கம் மற்றும் டொரண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை மற்றும் கிளேட்டன் டிரைவ் சந்திப்பில் ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்.மாலை 7 மணியளவில், டொரண்டோவின் கென்னடி சாலை மற்றும் போனிஸ் அவென்யூ அருகே (ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில்) அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற பொலிஸாருக்கும், காரில் இருந்த ஒரே ஆணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதன் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், டொரண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் எந்தவொரு பொலிஸாரும் காயமடையவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/8bxkph">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/vjgnccf6id7wei9fmyn55aepzfcwzpab.png" />]]></description><pubDate>Fri, 18 Jul 2025 14:22:24 GMT</pubDate></item><item><title><![CDATA[கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக கனடிய பிரதமர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/8jwwna]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/8jwwna]]></guid><description><![CDATA[<p>ஈழத் தமிழரும் கனடிய பிரஜையுமான பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/uxwylftghfpx3qtwsafcudukxzdykzgt.jpg" />]]></description><pubDate>Thu, 17 Jul 2025 14:41:44 GMT</pubDate></item><item><title><![CDATA[லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு வென்ற முதியவர்கள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/7lf84b]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/7lf84b]]></guid><description><![CDATA[<p>கனடாவின் கியூபெக்கில் வாழும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்துள்ளது. Montérégieயில் வாழும் Jacques Deschamps மற்றும் மொன்றியலில் வாழும் Wilhelmina Van Leeuwen ஆகிய இருவரும்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.அதாவது, அவர்கள் இருவருமே 70 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை வாங்கியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 35 மில்லியன் டொலர்கள் கையில் கிடைக்க உள்ளது.Jacques, தனது 60 வயதுகளில் இருக்கிறார். சொந்தமாக கட்டுமானப்பணி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் அவர்.லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைக்க உள்ளார் Jacques.Wilhelminaவோ தனது 70 வயதுகளில் இருக்கிறார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.இருவருக்குமே பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை. 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளதால் உங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவீர்களா என Wilhelminaவிடம் கேட்டால், இல்லை என்கிறார். முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை என் சொந்த நாட்டுக்குச் செல்வேன், இனி இரண்டு முறை செல்வேன். அதுவும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்க ஆசை என்கிறார் Wilhelmina! ... <a href="https://tamilpoonga.com/view-news/7lf84b">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/qbias4esfhj3s4zcsbfwqp3rfhnjkhpl.jpg" />]]></description><pubDate>Thu, 17 Jul 2025 14:40:10 GMT</pubDate></item><item><title><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/74uq8o]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/74uq8o]]></guid><description><![CDATA[<p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஒரு காரில் பயணம் செய்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சர்ரே காவல்துறை சேவையின் செய்திக் குறிப்பின்படி, 84வது அவென்யூவின் கிழக்கு வழித்தடத்தில் 140வது தெருவை நெருங்கி வந்தபோது, காரில் பயணித்த நால்வருக்கு அருகில் வந்த வெள்ளை டெஸ்லா காரில் இருந்த மூவர் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த டெஸ்லா காரின் எண் பலகை ஒண்டாரியோ மாநிலத்தைச் சேர்ந்தது எனவும் அதுவும் தெரியாத வகையில் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சந்தேகநபர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கான காரணம் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.... <a href="https://tamilpoonga.com/view-news/74uq8o">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/ftj2ye8nyddsh7dfyeputynjsjcaytlj.png" />]]></description><pubDate>Wed, 16 Jul 2025 14:01:54 GMT</pubDate></item></channel></rss>