Support Ads
Main Menu
 ·   · 844 posts
  •  · 5 friends
  • I

    9 followers

சென்னைக்கு அருகிலேயே ஒரு ஸ்ரீரங்கம்

சென்னைக்கு மிக அருகிலேயே  ஒரு ஸ்ரீரங்கம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?  


திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்று ஒரு அருமையான கிராமம்.   இது  வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது.  அங்கு எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் இருந்தது.


அடுத்து அடுத்து சென்றபோது  வயல்கள் நடுவிலே வீட்டு மனைகள் வியாபாரம் பலகைகள் நின்றபோது வயிற்றில் பகீர் என்றது.  


ஏனென்றால் இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி  நீளம் அதிகமானவர்.  ஆகிருதியாக சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறாரே.  எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்கவைப்பவர்களும் இல்லையே. இயற்கை சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு  ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.  அருகே அவரை தொடும்  தூரத்தில் நின்று மணிக்கணக்காக அவரோடு பேசலாம், பாடலாம், யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் யாருமே இல்லை. 


தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர்.  பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக  தேவர்கள் சேர்ந்து அளித்த தானம்  இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம்.   சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட  ஆலயம்.  ஆலயம்  வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. வளைந்து வளைந்து வண்டியில் செல்ல  பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னை தொந்தரவு செய் யக்கூடாது என்ற நோக்கத்தோடு தானே  ரங்கநாதர்  இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோவிலை  அடுத்து பெரிய வயதான மரங்கள். நிறைய பக்ஷிகள் அவருக்கு இன்னிசை  பாட கொடுத்து வைத்திருக்கின்றன.  சிறிய சாதாரண நுழைவாசல், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே  பெருமாளை தொழுதபடி  கருடாழ்வார். அப்புறம்  நம் கண் முன்னே பிரம்மாண்டமான  ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம். யோக சயன ரங்கநாதர்.  எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு பதினெட்டு அடி நீளத்தில்  தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.


தாமரைக்கண்ணன். வலது கையை அழகாக மடித்து  தலைக்கு கீழே. இடது காய் நீட்டியபடி.   


ஒரு ஆச்சர்யமான விஷயம். இந்த ரங்கநாதர் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை. திருமேனி  முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது. என்ன வசீகரமான புன்னகை பூத்த ;முகம். அப்பப்பா. நாள் முழுதும் ரசிக்க ஒரே இடம்.  பத்மநாபன்  நாபியில் ப்ரம்ம தேவன்.  தாமரை மலர் கையிலேந்திய  ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய  பூமா தேவி.  கையில் தம்புராவோ வீணையோ கையில் கொண்டு போற்றி பாடும் தும்புரு,  வணங்கிக்கொண்டே இருக்கும் ஆஞ்சனேயர்.  சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால்  அபிஷேகம் இல்லை.  தைல காப்பு. மினுமினுக்கிறார்.  பிரகாரத்தில்  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதி.  ஸ்தல விருக்ஷம் பாரிஜாதம் பூத்து குலுங்குகிறது. பறிப்பதற்கு ஆளில்லையா?  எங்கும் கம்மென்று பாரிஜாத நறுமணம். பெரிய புற்று ஒன்று. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள். 


சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரத்தில் காரில் சென்று அடையலாம்.


மீஞ்சூர்  அல்லது அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ   கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை  தரிசிக்க முடியும்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 118
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – அக்டோபர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  அக்டோபர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 14ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடு
    ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்
    பிரபஞ்ச பேரருளாம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்செய்யும் தொழிலில் வெற்றிகள் பல காண்போம்பிரபஞ்ச ஆசியுடன் நற்பவி அருளட்டும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.10.2023.  சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.49 வரை த
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 13ஆம் திகதி மேஷம்Aries விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 30.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 02.34 வரை பிரதம
    உங்கள் வாழ்க்கை துணை எந்த ஊரிலிருந்து வரப்போறாங்க தெரியுமா?
    ஒரு ஆணுடைய வாழ்க்கை துணையாக வரப்போகிற பெண் எந்த திசையில் இருந்து வரப்போகிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் ஜோதிடம் முடியும் என்று கூ
    எச்சரிக்கை தரும் பதிவு... (அவசியம் படியுங்கள்...உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்)
    கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
    படித்ததில் பிடித்தது
    திருமணத்தில் உணவை பரிமாறும் விதமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அதுதான் தற்போதைய திருமணத்தில் நான் பார்க்கும் மோசமான விஷயமாக கருதுகிறேன் .அந்த காலங்
    12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்
    மேஷ ராசி:மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்."ஷண்முகம் பார்வதீ புத
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 29, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 29, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 12ஆம் திகதி மேஷம்Aries புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.34 வரை பௌர்ணமி
    நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
    கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
    மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
    புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
    இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
    முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
    சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
    கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
    Ads