- · 5 friends
-
I
இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல வேண்டுமா?
இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும். இந்த காதுகளை அடைப்பில் இருந்து விடுவிக்கும் மந்திரம் தான் அர்ஜூனா அர்ஜூனா என்று வாய்விட்டு அழைப்பது. எப்படி என்கிறீர்களா? இதற்கும் விளக்கம் உண்டு.
அர் என்று சொல்லும் போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜூ என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. னா என்னும் போது வாய் பகுதி முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகிறது. இந்தமாதிரி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதனால்தான் அர்ஜூனாவை துணைக்கு அழைக்கிறார்கள் முன்னோர்கள்.
*கிருஷ்ணபரமாத்மாவுக்குப் பிரியமானவன் அர்ஜுனன்*. அவன் பெயரை மனதார உச்சரிப்பதால் மனதுக்கு இதமாக இருக்கும். மனதில் ஆன்மிக ஞானம் பெருகும். அதே நேரம் அறிவியல் ரீதியாக இடி இடிக்கும் போது காதுப்பகுதி அடைக்க கூடாது என்பதாலேயே இதில் அறிவியலும் இணைகிறது.
அதனால் மனதுக்குள் மட்டுமே அர்ஜூனா என்று உச்சரிக்காமல் அழுத்தம் திருத்தமாக உரக்க சொல்லுவோம் வாய் விட்டு, கிருஷ்ண பரமாத்மாவின் பிரியத்துக்குரிய அர்ஜூனனுக்கும் கேட்கும்படி, அர்ஜுனா அர்ஜுனா என்று இடி இடிக்கும் சமயத்தில்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·