Support Ads
 ·   ·  968 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

யார் பெரியவர்...?

பெருமாள் பக்தன் ஒருவன், 
தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். 
பெருமாள் சயனத்தில் இருந்தார். 
அருகில், 
லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான். 
பூலோகத்தில், 
அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், 
"பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. 
வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து'' என்றார்.
பக்தன் அவரிடம், 
"பெருமாளே! 
எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. 
ஆனால், 
ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன்'' என்றான்.
"அப்படியா! 
வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, 
சொல்...சொல்..உடனே தீர்த்து விடுகிறேன்'' என்றார்.
"ஐயனே! 
நான் உலகில் வாழ்ந்த காலத்தில், 
நீ பெரியவனா? 
நான் பெரியவனா? 
என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன். 
பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! 
உண்மையைச் சொல்லுங்கள். 
பூலோகத்தில் உயர்ந்தவர் யார்?'' என்றான். 
பெருமாள் சிரித்தார். 
"பக்தனே! 
மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே!'' என்றார்.
"சுவாமி! 
உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது. 
கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். 
புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். 
கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான். 
நிலைமை இப்படியிருக்க, 
இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! 
பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. 
எனவே, 
பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை. 
பகவானாகிய தாங்களே பெரியவர்" என்றான்.
"இல்லை...இல்லை... 
நீ சொல்வது சரியல்ல. 
உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். 
அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! 
அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர்'' என்று பதிலளித்தார் பெருமாள்.
"எப்படி?'' 
என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், 
"தாங்கள் சர்வ வியாபி. 
வாமன அவதாரம் எடுத்த போது, 
பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். 
விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். 
அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்?'' என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். 
அதன் முன்னால், 
அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.
"பக்தனே! 
அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார்'' என்றார்.
பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். 
ஏனெனில், 
பகவான் அவனது மார்புக்குள் சிறு அளவில் குறுகி நின்றார்.
"பார்த்தாயா! 
உலகையே அளந்த என்னை, 
உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டை விரலளவாக மாற்றி வைத்துக் கொண்டாயே! 
எனவே நீ தான் பெரியவன்,'' என்றார்.
பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். 
அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்
  • 116
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்