Support Ads
 ·   ·  982 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தமிழ் அமிழ்து

காய்கறிக்கடை ஒன்றில்.... 
"கிள்ளிப் பார்க்காதீர்..
 *கிழங்கை* என்றாள்..!
அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை  இளங்கைதான் என்றேன்..!
அவள் முறைப்புக்கு இடையே..!
என்ன இது 
 *கொத்து மல்லி* வாசமே 
இல்லை என்றேன்...
ம்...!
இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை 
எனச் சிரித்தாள்..!
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
 *மல்லி* பூத்திருந்தது
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே..
முத்தம் தரும் காய் உண்டோ...
என்றேன்...
என்ன என்ன என்றதட்டினாள்..
முத்துக்கள் ஒளிந்திருக்கும்
 *வெண்டைக் காயைச்* சொன்னேன்
என்றேன்...
வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா  என்றாள்..!
ஐயயோ அப்படியென்ன காயென்றேன்
 *கத்தரிக்காய்* என்றாள்...!
மழைபொழியும் காயுண்டோ
என்றே மடக்கினேன்..
புரியவில்லை என்றாள்.
 *காரம்(கார் அம்)  பொழியும் காய்* ... என்றேன்
அடையெடுத்த பெயரோடு
அதைத்தடுக்கும்
காயாக வந்துள்ள தென்றாள்..
இப்போது நான் விழித்தேன்..
ஆமாம்
" *குடை " மிளகாய்* என்றாள்..!
இப்படித்தான்  போனவாரம்..!
தித்திக்கப் பேசித்
தேன்காய் என்று *தேங்காய்* விற்றாய்..
வீட்டில் சென்று உடைத்துப்
பார்த்தேன்..
ஒரே  "வழுக்கை" என்றேன்..
இல்லை இல்லை 
 *குடுமியோடுதான்* தந்தேன்
பொய்சொல்லாதீர் என்றாள்...
ஆசையொடு ஆயிரங்காய் தின்றாலும்
மூக்கின் கீழ் மீசைவைத்த 
காயுண்டே...  விலையென்ன..என்றேன்..!
சிறிதுநேர யோசனைக்குப்பின்
சிறு காயப் படுத்தும் சிரிப்போடு
 *வெங்காயமா* ..!? விலை நூறு என்றாள்.
விலை கேட்டு 
 *பெருங்காயப்* பட்டுப்போனேன்..!
உன் உள்ளக்காய் போலும்
உள்ளே ஒளித்துவைக்கும்..
அந்தக் காய் கிடைக்குமோ என்றேன்..
ஏய்...என்னது  . என்றாய்..
அட *கள்ளக்காயைக்* கேட்டேனென்றேன்
அதான.. எனச் சிரித்தாய்..!
இனிக்கும் காயேதும்
உண்டா என்றேன்...
 *சுண்டைக்காயும்* 
 *பாகற்காயும்** உள்ளதென்றாய்..!
ஆமாமாம் நீ கையோடு அள்ளித்தந்தால்
இனிக்காமல் என்னசெய்யும்  என்றேன்...!
 *தக்காளி* என்ன 
உன்னைப் போலவே அரைவெட்டாக
இருக்கிறதே.. என்றேன்
கண்கள் சிவக்க அவள்
காளியாவதைக் கவனித்தேன்..
சண்டையை முடித்துக் கொள்வோம்
காயா  பழமா என்றேன்...
 *பழம்* என்றாய்...!
நான் கொஞ்சம் கொஞ்சமாகக்
கனிந்து கொண்டிருந்தேன்...
--யாரோ
 *பாலில் விழுந்த பழமதைப்போல்,* 
 *தேனிலூறிய தேன்பலா போல்,* 
 *திகட்டா தீந்தமிழ் சொற்பதிவு 
 *காயில் ஆரம்பித்து கனியானது 
 *இனிப்பானது* !
 *களிப்பானது* !
 *நிறைவானது நெஞ்சம்!* 
 *வாழ்க தமிழ்!!*
  • 147
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்