Support Ads
 ·   ·  982 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தானத்தில் சிறந்தவன் யார்?

ஒரு முறை தானத்தில் சிறந்தவன் யார் என்பதில் தர்மனுக்கும்,கர்ணனுக்கும் பெரும் போட்டி ஏற்பட்டது.
இது பரமாத்வான கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது.
உடனே இருவரையும் அழைத்தார்.இருவருக்கும் இரண்டு மலைகளைத் தந்தார்.அந்த மலைகள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.
தர்மனையும்,கர்ணனையும் அழைத்த கிருஷ்ணர்,தானம் தருவதில் யார் சிறந்தவர் என்பது தெரிய வேண்டுமானால் நீங்கள் இருவரும் இந்த இரண்டு மலைகளையும் இன்று மாலைக்குள் தானம் தந்துவிட வேண்டும் என்றார்.
தர்மர் உடனே களத்தில் இறங்கினார்.
மக்கள் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என ஊர்,நகரம்,நாடு முழுக்க,தண்டோரா போடச் சொன்னார்.
லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.மலையை முடிந்த அளவிற்கு வெட்டி தங்கத்தை அள்ளிச் சென்றனர்.
மாலை வந்தது.
தர்மரது மலை பாதி தான் குறைந்திருந்தது.
கிருஷ்ணரைப் பார்க்க தர்மர் அரக்க பரக்க ஓடி வந்தார்.
அங்கே கர்ணன் ஏற்கனவே வந்திருந்தார்.கர்ணனைப் பார்த்தால் பரபரப்பின்றி அமைதியாக இருந்தார்.
தான் நாடு முழுக்க தண்டோரா போட்டு அதனால் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து தங்கத்தை வெட்டி எடுத்துச் சென்றனர்.இவ்வளவு செய்த தன்னாலேயே பாதி மலையைக் தான் தர முடிந்தது.கர்ணனைப் பார்த்தால் எதையும் செய்தது போலத் தெரியவில்லை.அமைதியாக இருக்கிறான்.எனவே கர்ணன் போட்டியில் தோற்று விட்டான் போல என்ற எண்ணம் தர்மன் மனதில் உண்டானது.
அதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர்,
"தர்மா,போட்டியில் வென்றது கர்ணன் தான்.கர்ணன் தான் தானத்தில் சிறந்தவன்.நீ லட்சக்கணக்கான மக்களை அழைத்து மலையை வெட்டிக் கொள்ளச் சொன்னாய்.ஆனால் கர்ணனோ நான் தங்க மலையைத் தந்த அடுத்த கணமே தெருவில் சென்ற ஒருவனை அழைத்து முழு மலையையும் அவனுக்கே தானம் தந்துவிட்டு,இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று என்னிடம் வந்து விட்டான்.அதெப்படி முழு மலையையும் ஒருவருக்கே தருவது என்ற எண்ணத்தில் நீ இருந்தாய்.ஆனால் கர்ணனோ தானம் கொடுப்பது என்று வந்தபின் எவ்வளவு தந்தால் என்ன என்று நினைத்தான்.எனவே கர்ணனே தானத்தில் சிறந்தவன்...." என்று கிருஷ்ணர் கூறினார்.
  • 95
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்