Support Ads
 ·   ·  980 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இராம நாமத்தின் மகிமை

ஒரு ராஜா இருந்தார். அவரு பெரிய  சக்கரவர்த்தி! அவர்தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனார். மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்!  அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டார்.

மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தார்.

அதுலே அவருக்கு ஒரு நிம்மதி!

காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும்  உடம்பு சோர்வாப் போச்சு!

கையிலே கொண்டு வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு! 

ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! ..... 

என்ன செய்யறதுன்னே தெரியலே.

அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா  ஒரு குடிசை தெரிஞ்சுது. 

ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த  குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'' அப்படீன்னார்.

ஆனா மந்திரி ராஜா கிட்டே, ""எனக்கும் பசிதான்! ஆனா நான் வரலே.இங்கேயே  இந்த மரத்தடியிலேயே நான் ராமநாமத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.அது என்னோட பசியை ஆத்திடும்!ராம நாமத்தைச் சொல்றவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.நீங்க போயிட்டு வாங்க.' அப்படீன்னார்.

ராஜாவுக்கு மந்திரி மேலே கோபமா வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நெனச்சுக்கிட்டு தூரத்துலே தெரிஞ்ச அந்த குடிசைக்கு நடந்து போனாரு. 

அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கே இருந்த ஒரு பாட்டி கிழிசல் புடவையைக் கட்டியிருந்தாள்! ஆனா நல்ல காலம்! அந்த பாட்டி ஒரு பானையிலே நிறையச் சோறு வெச்சிருந்தாள்.

ராஜாவுக்கு ஒரு தட்டிலே சோறும், குழம்பும், பொறியலும் கொடுத்தாள்! ராஜாவுக்கு அது தேவாமிர்தமா இருந்தது!  சாப்பிட்டுட்டு ராஜா தண்ணியும் குடிச்சாரு! ராஜாவுக்குப் பசி அடங்கிடுச்சு! 

அவரு பாட்டிகிட்டே, "பாட்டி என்னோட கூட ஒருத்தர் வந்திருக்காரு.அவரும் பசியோடதான் இருக்காரு.ஒரு தட்டிலே அவருக்கும் கொஞ்சம் சோறு கிடைக்குமா?'' அப்படீன்னு கேட்டார்.

அதுக்கென்ன, தாராளமா எடுத்துக்கிட்டுப் போ!.நான் வேறே சோறு வடிச்சுக்கறேன்!'' அப்படீன்னு சொல்லிட்டு, பாட்டி ஒரு தட்டிலே, சோறு, குழம்பு, பொறியல் எல்லாம் போட்டுத் தந்தாங்க!'' 

ராஜா அதை எடுத்துக்கிட்டு, ஓடோடி வந்து, பாட்டி வீட்டிலே நடந்ததை எல்லாம் சொல்லி,  மந்திரிகிட்டே உணவுத் தட்டைக் கொடுத்தாரு. மந்திரியும் அதைச் சாப்பிட ஆரம்பிச்சார்.

ராஜா மந்திரியைப் பார்த்து, "நீங்க சொல்ற ராம நாமமா உங்களுக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது?  என்னோட யோசனையால்தானே உங்களுக்கு இப்போ சோறு கிடைத்தது!'' அப்படீன்னார்.

மந்திரி ராஜாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "ராஜா, நீங்க சக்கரவர்த்தி!

 ஆனா நீங்க ஒரு சாதாரண ஏழைப் பாட்டிகிட்டே  கையேந்தி சாப்பாட்டுக்கு நின்னீங்க.அதனாலே உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுது!.ஆனா எனக்கு என்னோட பிரபு ஸ்ரீராமன், சக்கரவர்த்தியான உங்க கையாலே, நான் இருக்கும் இடத்திற்கே  கொண்டு வந்து கொடுக்கும்படியாச் செஞ்சுட்டார்!

இதுதான் ராமநாமத்தின் மகிமை!.' அப்படீன்னார்.

சக்கரவர்த்தியும் தன்னோட  தப்பை உணர்ந்து தலை குனிந்தார்..!

  • 180
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்