Support Ads
 ·   ·  970 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

காரைநகர் எனப்படும் காரைதீவு

காரைதீவு என்ற பெயர் 12 /09/1923 அன்று உத்தியோக பூர்வமாகக் காரைநகர் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயர் மாற்றத்தின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. 
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் முதற்தீவாகிய அருள் வளம் ,பொருள் வளம் ,தெருள் வளம் நிறைந்த  காரைநகர் இலங்கைத்தீவின் தலையாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கின்றது .
 ஏராளமான காரைச்செடிகள் வளர்ந்து நின்ற காரணத்தினாலே  காரைதீவு எனப்பெயர் பெற்றதாக சில குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது . 
புத்த சாதகக் கதைகளில் இவ்வூரின் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம் எனப் பெரியோர் கூறுவர் . அதேபோன்று மணி மேகலையில் சொல்லப்படும் மணி பல்லவம் என்ற  தீவும் காரைநகர் தான் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களால் சொல்லப்படுகிறது. 
யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் இந்தியாவின் காரைக்குடியில் இருந்து வந்தமக்கள் காரைதீவில் குடியேறினார்கள் என்று  கூறுகிறது .இதனை மேற்கோள் காட்டும் சிலர் காரைக்குடியில் இருந்து வந்து மக்கள் குடியேறியதால் தான் இவ்வூருக்கு காரைதீவு என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள் . 
காரைநகரை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1869 ஆம் ஆண்டில் அப்போது யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையின் ஆணையின் பேரில் பொறியியலாளர் ஆம்ஸ்ரோங் அவர்களால் பொன்னாலைக் கடலூடாக அமைக்கப்பட்டதாக குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன .இப்பாலம் அமைக்கப்பட்டால் தான்  மக்கள் காரைதீவைக் காரைநகர் என அழைக்கத்தொடங்கினர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
 தட்சிண கைலாசபுராணம் பதிப்பித்த சிவசிதம்பர ஐயர் என்பவர் 1887 ல் காரைநகர் என்ற பெயரைத் தமதுரையில்  பயன்படுத்தியுள்ளார் என அறியவருகின்றது  . 
இவருக்கு முன்பே இவரின் தந்தையார் ஆகிய  கார்த்திகேயப்புலவர் தான் இயற்றிய திண்ணபுரத்திரிபந்தாதி என்னும் நூலின் காப்புச் செய்யுளில் காரைநகர் என இவ்வூரின் பெயரை குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம் . எனவே பொன்னாலைப் பாலம் அமைப்பதற்கு முன்பே காரைநகர் என்ற சொல் பயன்பட்டிருப்பதனை அறியக்கூடிய உள்ளது.
எனினும் 12-09-1923 முதலே  அரச ஆணைப்படி இவ்வூர் காரைநகர் என அழைக்கப்படுகிறது. இந்த அரசாணைக்குக்  காரணமாக 1922 ல் சேர். பொன். இராமநாதன் அவர்கள் இங்கு மேற்கொண்ட வருகை இருந்ததாக சில பெரியோர் கூறுவர். 
எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் இடையில் பெயர்காரணமாக தபால் துறையினரின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தவிர்ப்பதற்காக யாழின் காரைதீவு காரைநகராகப் பெயர்மாற்றம் பெற்றதாகக் கருதுவோரும் உள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் ஏறத்தாழ நூறு வருடங்களாக ( 1923 இல் இருந்து) காரைதீவு என்பது காரைநகர் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதைக் காணலாம்.
ஆலயங்களும், மடங்களும் ,வயல்களும் , தோட்டங்களும் ,தோப்புகளும், குளங்களும், கேணிகளும் நிறைந்த அதாவது கடல் வளமும், நீர் வளமும், நிலவளமும் நிறைந்த காரைநகர் விருந்தோம்பலிற்குப் பெயர் போனது . காரைநகரின் விருந்தோம்பலை 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்  மிக்க கவிஞரான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் பின்வருமாறு கூறுவதைக் காணலாம் 
"காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும்
ஊராருக் கன்றி மற்றையோர்க் குவப்பில்லை-பார்மீதில்
தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம்
எங்கே போய்க்காண்பேன் இனி"
விருந்தோம்பலிற் சிறந்து விளங்கிய காரைநகர் மக்கள் வணிகத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள் .இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் வணிகர்களாக விளங்கினார்கள் இன்றும் விளங்குகிறார்கள் . பேரிடர் வந்த போதும் போரிடர் வந்த போதும் பஞ்சம் வராமல் பொருட்களுக்கு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டதில் இவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
இலங்கையில் மட்டுமல்லாது  தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கூட சிறந்த வணிகர்களாக விளங்குகிறார்கள். பல வெற்றிகரமான நிறுவனங்கள் இவர்களால் இயக்கப்படுகின்றன.
வணிகத்துறையில் மட்டுமல்லாது கல்வி கேள்விகளிலும் சிறந்து  விளங்கினார்கள், விளங்குகின்றார்கள்  .பல கல்விமான்கள் , அறிஞர்கள் ,கலைஞர்கள், புலவர்கள் , வித்துவான்கள் ,பண்டிதர்கள் ,நிர்வாக அதிகாரிகள் ,பொறியியலாளர்கள் ,மருத்துவர்கள் சட்டத்தரணிகள் ,நீதியரசர்கள் , ஆசிரியர்கள் , ஏனையவகை அதிகாரிகள் ,முகாமையாளர்கள் ,விஞ்ஞானிகள் ,மெஞ்ஞானிகள் ,அரசியலாளர்கள் என்று பலரும் இவ்வூரில் இருந்து தோன்றினார்கள் இன்றும் தோன்றுகின்றார்கள் .
இலங்கையில் மட்டுமல்லாது உலகம் பூராவும் இவர்கள் பணியாற்றினார்கள் , இன்றும் பணியாற்றுகின்றார்கள் .இத்தகையவர்கள் காரணமாக கரைநகரானது இன்றும் தன் புகழ் மங்காது இருப்பதைக் காணலாம்.

-காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்களின் ஆக்கத்தை பிரதி செய்யபட்டது

  • 224
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்