Support Ads
Main Menu
 ·   · 833 posts
  •  · 5 friends
  • I

    9 followers

காரைநகர் எனப்படும் காரைதீவு


காரைதீவு என்ற பெயர் 12 /09/1923 அன்று உத்தியோக பூர்வமாகக் காரைநகர் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயர் மாற்றத்தின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. 



இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் முதற்தீவாகிய அருள் வளம் ,பொருள் வளம் ,தெருள் வளம் நிறைந்த  காரைநகர் இலங்கைத்தீவின் தலையாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கின்றது .



 ஏராளமான காரைச்செடிகள் வளர்ந்து நின்ற காரணத்தினாலே  காரைதீவு எனப்பெயர் பெற்றதாக சில குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது . 



புத்த சாதகக் கதைகளில் இவ்வூரின் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம் எனப் பெரியோர் கூறுவர் . அதேபோன்று மணி மேகலையில் சொல்லப்படும் மணி பல்லவம் என்ற  தீவும் காரைநகர் தான் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களால் சொல்லப்படுகிறது. 



யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் இந்தியாவின் காரைக்குடியில் இருந்து வந்தமக்கள் காரைதீவில் குடியேறினார்கள் என்று  கூறுகிறது .இதனை மேற்கோள் காட்டும் சிலர் காரைக்குடியில் இருந்து வந்து மக்கள் குடியேறியதால் தான் இவ்வூருக்கு காரைதீவு என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள் . 



காரைநகரை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1869 ஆம் ஆண்டில் அப்போது யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையின் ஆணையின் பேரில் பொறியியலாளர் ஆம்ஸ்ரோங் அவர்களால் பொன்னாலைக் கடலூடாக அமைக்கப்பட்டதாக குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன .இப்பாலம் அமைக்கப்பட்டால் தான்  மக்கள் காரைதீவைக் காரைநகர் என அழைக்கத்தொடங்கினர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.



 தட்சிண கைலாசபுராணம் பதிப்பித்த சிவசிதம்பர ஐயர் என்பவர் 1887 ல் காரைநகர் என்ற பெயரைத் தமதுரையில்  பயன்படுத்தியுள்ளார் என அறியவருகின்றது  . 



இவருக்கு முன்பே இவரின் தந்தையார் ஆகிய  கார்த்திகேயப்புலவர் தான் இயற்றிய திண்ணபுரத்திரிபந்தாதி என்னும் நூலின் காப்புச் செய்யுளில் காரைநகர் என இவ்வூரின் பெயரை குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம் . எனவே பொன்னாலைப் பாலம் அமைப்பதற்கு முன்பே காரைநகர் என்ற சொல் பயன்பட்டிருப்பதனை அறியக்கூடிய உள்ளது.



எனினும் 12-09-1923 முதலே  அரச ஆணைப்படி இவ்வூர் காரைநகர் என அழைக்கப்படுகிறது. இந்த அரசாணைக்குக்  காரணமாக 1922 ல் சேர். பொன். இராமநாதன் அவர்கள் இங்கு மேற்கொண்ட வருகை இருந்ததாக சில பெரியோர் கூறுவர். 



எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் இடையில் பெயர்காரணமாக தபால் துறையினரின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தவிர்ப்பதற்காக யாழின் காரைதீவு காரைநகராகப் பெயர்மாற்றம் பெற்றதாகக் கருதுவோரும் உள்ளனர்.



எது எப்படி இருந்தாலும் ஏறத்தாழ நூறு வருடங்களாக ( 1923 இல் இருந்து) காரைதீவு என்பது காரைநகர் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதைக் காணலாம்.



ஆலயங்களும், மடங்களும் ,வயல்களும் , தோட்டங்களும் ,தோப்புகளும், குளங்களும், கேணிகளும் நிறைந்த அதாவது கடல் வளமும், நீர் வளமும், நிலவளமும் நிறைந்த காரைநகர் விருந்தோம்பலிற்குப் பெயர் போனது . காரைநகரின் விருந்தோம்பலை 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்  மிக்க கவிஞரான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் பின்வருமாறு கூறுவதைக் காணலாம் 



"காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும்
ஊராருக் கன்றி மற்றையோர்க் குவப்பில்லை-பார்மீதில்
தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம்
எங்கே போய்க்காண்பேன் இனி"



விருந்தோம்பலிற் சிறந்து விளங்கிய காரைநகர் மக்கள் வணிகத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள் .இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் வணிகர்களாக விளங்கினார்கள் இன்றும் விளங்குகிறார்கள் . பேரிடர் வந்த போதும் போரிடர் வந்த போதும் பஞ்சம் வராமல் பொருட்களுக்கு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டதில் இவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.



இலங்கையில் மட்டுமல்லாது  தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கூட சிறந்த வணிகர்களாக விளங்குகிறார்கள். பல வெற்றிகரமான நிறுவனங்கள் இவர்களால் இயக்கப்படுகின்றன.



வணிகத்துறையில் மட்டுமல்லாது கல்வி கேள்விகளிலும் சிறந்து  விளங்கினார்கள், விளங்குகின்றார்கள்  .பல கல்விமான்கள் , அறிஞர்கள் ,கலைஞர்கள், புலவர்கள் , வித்துவான்கள் ,பண்டிதர்கள் ,நிர்வாக அதிகாரிகள் ,பொறியியலாளர்கள் ,மருத்துவர்கள் சட்டத்தரணிகள் ,நீதியரசர்கள் , ஆசிரியர்கள் , ஏனையவகை அதிகாரிகள் ,முகாமையாளர்கள் ,விஞ்ஞானிகள் ,மெஞ்ஞானிகள் ,அரசியலாளர்கள் என்று பலரும் இவ்வூரில் இருந்து தோன்றினார்கள் இன்றும் தோன்றுகின்றார்கள் .



இலங்கையில் மட்டுமல்லாது உலகம் பூராவும் இவர்கள் பணியாற்றினார்கள் , இன்றும் பணியாற்றுகின்றார்கள் .இத்தகையவர்கள் காரணமாக கரைநகரானது இன்றும் தன் புகழ் மங்காது இருப்பதைக் காணலாம்.


-காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்களின் ஆக்கத்தை பிரதி செய்யபட்டது

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 192
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் விலக எளிய தீர்வு
    கண் திருஷ்டி, நெகட்டிவ் எனர்ஜி மூலம் ஒரு மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியுமென்றால், எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கம
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 24, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 24, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 7ஆம் திகதி மேஷம்Aries வாகனங்களைச் சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.9.2023.  சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.10 வரை நவமி
    ராகு கேது பெயர்ச்சி பலன் 2023  . கோடி கோடியாக செல்வத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
    நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் தீபாவளிக்கு
    வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைக்க ஏற்ற மரங்கள்
    வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டமைப்பில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க மர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கதவு நிலைகள், ஜன்னல் பிரேம் ஆகியவற்றை
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 23, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 23, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 6ஆம் திகதி மேஷம்Aries குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவ
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 23.9.2023.   சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 08.10 வரை அஷ்டமி.
    முதுமை வயதை எட்டினாலும் இளமையுடன் காட்சியளிக்க....
    உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ ந
    நாம் மகிழ்ச்சியுடன் வாழ ஆரோக்கியமே அவசியம்
    தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 22, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 22, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 5ஆம் திகதி மேஷம்Aries உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வரு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.9.2023. சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.42 வரை சப்தமி
    பாட்டி வைத்தியம்
    நாளொன்றுக்கு  ஐந்து  அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி  குணமாகும்.
    செய்யும் தொழிலே தெய்வம் (குட்டிகதை)
    செருப்பு கடைக்கு ஒருவர் சென்றார்!!பணியாளர் அவரை அமர வைத்து அவர் கேட்ட செருப்பை ஒன்று ஒன்றாக காலில் அணிவித்தார்!!சற்றே அசௌரியமாக இருக்க அந்த நபர்! ஐயா
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 21, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 21, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 4ஆம் திகதி மேஷம்Aries ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வே
    ஆழ் மனது (Subconscious mind)
    ஒரு எண்ணத்தை ஆழ் மனதில் சரியான முறையில் பதிவு செய்தால், பிரபஞ்சத்தோடு இணைந்துசெயல் வடிவாக ஆக்கம் பெறும்.Wave Theory.இது குறித்து ஒரு நல்ல பதிவு மிகவும
    Ads