- · 5 friends
-
I
கோலம் --- ஒரு மங்கல சின்னம்.
நம் வீடுகளில் கோலம் போடும் ஸ்த்ரீகள் எல்லாருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.
தயவு செய்து கடைகளில் விற்கப்படும்/ வீதிகளில் கொண்டுவரும் மணல் கலந்த கோல மாவை வீட்டு வாசல் / பூஜை அறை / வீட்டின் ஹால் போன்ற இடங்களில் பயன் படுத்த வேண்டாம். இனிமேலும் பயன் படுத்துவதை முழுமையாக தவிர்த்திடுங்கள்.
பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தாரளா குணம் வெளிப்படும். அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்பு போன்ற ஜீவராசிகளின் பசியை போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதாவது தானம், தர்மம் செய்வதற்கு ஈடாக சொல்லப்பட்டு இருக்கு. மணல் கலந்த கோல மாவை உண்ணும் ஜீவராசிகளின் பாவத்துக்கு நாம் ஆளாக வேண்டாம்
அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம், சிவபெருமானையும் குறிக்கும். இவர்கள் இருப்பதால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருகிறாள். அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, எல்லாரும் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
தினமும் அரிசி மாவுகோலம் போடும் போது, வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு குறைவே ஏற்படாது
அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி செய்து ஜலம் தெளித்து அரிசிப் பொடியால் கோலம் போட வேண்டும்.
கணவனோ வீட்டில் உள்ளவர்களோ வெளியே செல்வதற்கு முன் வாடாலில் கோலமிட்டு இருக்க வேண்டும். குனிந்து நின்று கொண்டு கோலமிடுவது நல்லது.
சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது இரட்டைக் கோடுகள் கொண்டு கோலமிட வேண்டும்.
அமாவாசை, முன்னோர்களுக்கு சிரார்த்தம் ஆகிய நாட்களில் கோலமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஹிந்து மத சாஸ்திரங்கள் எல்லாமே அர்த்தமுள்ள வைதான். நாமும் அதன்படி நடந்து வருவோம்........
நல்லதே சொல்வோம்...
நல்லதே செய்வோம்....
நல்லதே நடக்கும்.....
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·