·   ·  968 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படேலுக்கே பாடம் புகட்டிய காமராஜர்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் வல்லவாய் படேல். அவரை கண்டாலே எல்லா தலைவர்களும் நடுங்கினார்கள். அத்தகைய படேலுக்கே ஒருதடவை பெருந்தலைவர் காமராஜர் பாடம் புகட்டினார்.
1948-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும், புருஷோத்தமதாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள்.
அச்சமயம் நேரு மந்திரிசபையின் கொள்கைகளை குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலாக இருந்தது. இதனால் தாண்டன் வெற்றியை காமராஜர் விரும்பவில்லை.
தாண்டன் வெற்றி பெற்றால் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும், நேருவுக்கும் இடையே ஒற்றுமை இருக்காது. தகராறுகள் வளரும். இதனால் நேரு பிரதமர் பதவியில் இருந்தே விலகக்கூடும். 
இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேரு மந்திரி சபைக்கும், அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக்கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்கு பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம் என்று எண்ணினார் காமராஜர்.
அதனால் பட்டாபிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாக பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
கடைசியாக தலைவர் தேர்தலில் ஓட்டுக்களை எண்ணிப்பார்க்கும்போது பட்டாபிக்கே வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க பாடுபட்டவர் காமராஜர்தான் என்பதை நேரு புரிந்து கொண்டார். 
இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாக காமராஜர் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 
அச்சமயம் படேல் காமராஜரை பார்த்து "உங்களுக்கு என் மீது என்ன கோபம்?'' என்று கேட்டார்.
"உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?'' என்றார் காமராஜர். "பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?'' என்றார்.
அதற்கு காமராஜர் "தமிழ்நாட்டில் பட்டாபிக்குஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!'' என்றார்.வல்லபாய் படேலால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்தபடி சென்று விட்டார்.
  • 382
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்