Support Ads
 ·   ·  980 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிந்திப்போமா?

நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அதன் பின்னாலேயே காலமெல்லாம் ஓடுவார்கள் சிலர். அதை அடைந்தும்விடுவார்கள். 

ஆனால், வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தால், அவர்கள் இழந்ததும், அனுபவிக்கத் தவறியதும் ஏராளமானதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம் வேண்டும்தான்; அதை அடையவேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது. ஒரு மனிதனின் பிறந்தநாள், அவன் ஒரு வருடம் மூப்படைந்துவிட்டான் என்பதை உணர்த்தும் நாள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதன் ஓட்டத்தோடு இயைந்து மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துவிட வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது. 

அவர் ஒரு பிசினஸ்மேன். சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்... என விரிந்திருந்தது. நகரத்தில் பெரும் செல்வந்தர், கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையெல்லாம் பெற்றுவிட்டார். அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள். ஆனாலும் அவருக்கு நேரமில்லை. யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை. விடிவதற்கு முன் தொடங்கிவிடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில்தான் அவருக்கு முடிகிறது. மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, பல நேரங்களில் சேர்ந்து சாப்பிடவோகூட நேரமில்லாமல்தான் அவர் `பிசினஸ், பிசினஸ்...’ என்று அலைந்துகொண்டிருந்தார். 

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்கக் காத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை. வீட்டுப் பணியாளர்தான் கதவைத் திறந்தார். அவர் முகக்குறிப்பை உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்... ``ஐயா... அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு. ஹாஸ்பிட்டலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க. ரூம்ல தூங்குறாங்க...’’   

``ஏன்... என்ன ஆச்சு?’’ 

``பிரஷர்னு டாக்டர் சொல்லியிருக்காங்க... ஆனா, பயப்படத் தேவையில்லையாம். மருந்து மாத்திரை சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடுமாம்.’’ 

``எனக்கு போன் பண்ணிச் சொல்லவேண்டியதுதானே?’

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். `ஸ்விட்ச்டு ஆஃப்’னே வந்துச்சாம்.’’ 

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு தன் மொபைல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது. அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். அந்தப் பெண்மணி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவர், மனைவியின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தார். `சே... இவளை கவனிக்காமல் விட்டுவிட்டோமே!’ என்கிற வருத்தம் எழுந்தது. அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்திருந்த நாள்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே! தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்தே வெகு நாள்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்ததும் அவருக்கு `திடுக்’கென்று இருந்தது. அறையைவிட்டு வெளியே வந்தார். அடுத்த அறைக் கதவைத் திறந்து பார்த்தார். அவருடைய இரு மகன்களும் படுக்கையில் படுத்திருந்தார்கள். சத்தமில்லாமல் கதவை மூடினார். மாடியிலிருந்த தன் தனி அறைக்குப் போவதற்காகப் படிகளில் ஏறினார். 

``ஐயா... சாப்பிட ஏதாவது வேணுமா?’’ பணியாள் கேட்டார். 

``வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார். 

உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தார். `இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோசனம்... நாம் யாருக்காக வாழ வேண்டும்... பிள்ளைகள்,மனைவி இவர்களோடுகூட நேரத்தைச் செலவழிக்க முடியாமல் அப்படி என்ன பிசினஸ்...’ என்னென்னவோ யோசனை வந்தது. கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். `இன்றுதான் கடைசி. இன்றோடு பிசினஸிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். இனிமேல் வாழ வேண்டும். எனக்காக, என் மனைவிக்காக, என் குடும்பத்துக்காக...’ 

அப்போதுதான் கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. `கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டுத்தானே வந்தோம்..! இது யார்... எப்படி உள்ளே வந்தார்?’ 

யார் நீங்க... எப்படி உள்ளே வந்தீங்க?’’ என்று கேட்டார்.

அந்த உருவம் சொன்னது... ``நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.’’ 

அவர் திடுக்கிட்டுப் போனார். ``ஐயா சாமி... நான் இப்போதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ போய் என்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கீங்களே..! கொஞ்சம் அவகாசம் கொடுங்க!’’ - அவர் எவ்வளவோ பேசி, மன்றாடிப் பார்த்தார். தன் செல்வத்தையெல்லாம் கொடுப்பதாகச் சொல்லிப் பார்த்தார். மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. அங்கிருந்து நகராமல், அவரை அழைத்துச் செல்ல ஆணியடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்திருந்தது. 

``ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. என் மனைவி, குழந்தைகளுக்கு நான் செய்யவேண்டிய கடமைகள் இருக்கு. அதை முடிச்சிடுறேன். ரொம்ப நாள் பார்க்காம இருந்த என் நண்பர்கள், உறவினர்களை பார்த்துடுறேன்...’’ என்று கேட்டார். 

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார்... ``சரி... ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீங்களா? உலகத்துக்கு நான் ஒரு குறிப்பு எழுதணும்...’’ 

மரண தேவதை ஒப்புக்கொண்டது. 

அவர் இப்படி எழுதினார். `உங்களுக்கான நேரத்தை சரியான வழியில் செலவழித்துவிடுங்கள். என்னுடைய அத்தனை சொத்துகளை ஈடாகக் கொடுத்தாலும்கூட எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை. இது ஒரு பாடம். எனவே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்துவிடாமல் அனுபவித்து வாழ்ந்துவிடுங்கள்!’ 

அப்போது யாரோ கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் திடுக்கிட்டு கண்விழித்தார். விடிந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய்க் கதவைத் திறந்தார். பணியாள்தான் வெளியே நின்றுகொண்டிருந்தார். ``ஐயா... ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க. நீங்க திறக்கலையா..? பயந்துட்டேன். அதான் கொஞ்சம் பலமாகத் தட்டிட்டேன்.’’ 

அவர் அவசரமாகத் திரும்பி தன் பெட்டுக்கு அருகேயிருக்கும் மேஜையைப் பார்த்தார். அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. பேனாவும், எழுதப்படாத வெள்ளைத் தாளும்தான் இருந்தன.

  • 328
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்