Support Ads
 ·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

திருவாதிரை களியின் வரலாறு

சேந்தன்  என்னும் எழை விறகு வெட்டி ஒரு பெரிய சிவபக்தன். சேந்தனார் சில சிவ பக்தர்களுக்கு உணவளித்த பின்னரே உணவு உண்பவர். ஒரு நாள் மோசமான வானிலை காரணமாக அவரால் சரியான உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேகரிக்க முடியவில்லை. அதனால் கேழ்வரகு களி தயாரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. சிவனடியாருக்கு உணவு தயாரித்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.

சிவபெருமான் அவனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டார். தன் பக்தன் தன்னிடம் எவ்வளவு நேர்மையானவன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் சிவபக்தர் போல் வேடமணிந்து செந்தனாரின் குடிலுக்குச் சென்று அவருக்கு உணவாகக் கொடுத்ததை உண்டு மகிழ்ந்தார். மறுநாள் காலை பிரமாண்டமான சிதம்பரம் நடராஜர் கோவில் திறக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள், களி வளாகம் எங்கும் சிதறியதைக் கண்டனர். இதுவரை இந்த உணவை இறைவனுக்கு படைத்ததே இல்லையே எப்படி இங்கு வந்தது என்று குழம்பிப்போனார். மன்னருக்கு செய்தி போனது, அன்று மன்னர் கனவில்,  நடராஜ பெருமான் சேந்தனின் பக்தியையும், களியின் ருசியையும் தெரிவித்தார். இவ்வாறு செந்தனாரின் பக்தியைப் புரிந்துகொள்ள வழிவகுத்தன, அதன்பிறகு அவருக்கு அனைத்து மரியாதையும் வழங்கப்பட்டது. சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். இந்த சம்பவம் மார்கழி திருவாதிரையில் நடந்துள்ளது. அதனால்தான் இந்த புனித நாளில் திருவாதிரை களி ஒரு முக்கியமான பிரசாதமாக அமைகிறது.

திருவாதிரை நாளை (20/12/2021) திங்கட்கிழமை

திருவாதிரை விரதம் இருக்கும் முறை

திருவாதிரை களி

திருடியாவது திருவாதிரை களி தின்ன வேண்டும் என்று கூறுவார், திருவாதிரை களிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவுக்கு களி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது திருவாதிரை களி நமது வீட்டில் எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்)

பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 3 / 4 கப்

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பாசி பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.

பின்பு அரிசியும் நன்கு வறுக்கவும்.

மிக்ஸியில் பருப்பு, ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.

நன்கு கரைந்ததும் வடிகட்டி, கொதிக்க விடவும்.

பின்பு, 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும்.

தீயை குறைத்து கட்டி சேராமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும்.

ரவை வெந்ததும் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான திருவாதிரை களி தயார்.

  • 625
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்