·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள்

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் இன்று அவர்களை பெரும் பொருளாதார நெருக்களுக்குள் தள்ளியுள்ள அதே நேரம் சழூகத்தால் அவர்கள் மீது ஏற்படுத்தப்படுகின்ற உடல் உள ரீதியான நெருக்குதல்கள் தற்கொலை வரை கொண்டு செல்லுகின்றது.

இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து இவர்களை பாதுகாப்பதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் காணப்படுகின்றது. 2018ம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சுமார் 63 ஆயிரத்து 345 க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதாக கடந்த வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன. கடந்த கால யுத்தத்தினால் கணவணை இழந்த அல்லது காணாமல் போன. கணவனால் கைவிடப்பட்டவர்கள் என அதிகளவான இளம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என பெண்கள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் மட்டுமல்லாது பொதுவாகவே பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சுய பொருளாதாரத்தில் அவர்கள் தாங்கி நிற்கக் கூடிய ஒரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் இன்று வரைக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அல்லது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வருடந் தோறும் வழங்கி சென்ற போதும் அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்கள் அல்லது சந்தை வாய்ப்புகள் அல்லது சந்தை வாய்ப்புகளை ஏற்ப்படுத்திக் கொடுத்தல் என்பன இல்லாத காரணத்தால் பாரிய பின்னடைவுகளை சந்தித்து அவர்கள் மீளவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள்ளதள்ளப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

தற்போது ஒருஇலட்சத்து 47ஆயிரத்து 421 பேர் வாழ்ந்த வரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து 52 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.நீண்டகால யுத்த பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. ஒரு தனியார் துறையின் கீழ் வேலை செய்தல் என்பது பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு பாரிய பிரச்சனை அதாவது அவர்களுக்குரிய வேதனம் கிடைக்காமல் அல்லது அவர்கள் நீண்ட நேரம் வேலைக்கு அமர்த்தப்படுதல் என பல்வேறுபட்ட நெருக்குதல்கள் இவற்றுக்கும் மேலான அவர்கள் மீது உடல் உள ரீதியான பாலியல் துன்புறுத்தல்கள் என பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகின்றன.

இந்த நிலைகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு ஒவ்வொருவரிடத்திலும் வளர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுயமாக தங்களது சொந்தக்காலில் நிற்க கூடிய வகையில் அவர்களுக்கு ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு தொழில் முயற்சிகளை எடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக ஆடைகளை உற்பத்தி செய்தல் அல்லது ஆடைகள் தைத்தல் என உள்ளுர் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளுர் உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்தல். மா வகைகள் அரிசி மற்றும் தூள் வகைகள் என்பவற்றை உற்பத்தி செய்திருந்தாலும் அவற்றை சந்தைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்து பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெரும் தொழில் முயற்சியாளர்களாக தொழில் வாய்ப்பை வழங்குணர்களாக காணப்படுகின்றனர். தற்போதும் கூட கிராம மட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளோடு சில சிறு தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.  அதாவது காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றிற்குரிய சந்தை வாய்ப்பு கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறி.

ஒரு பெண் தலைமைத்துவ குடும்பம் தோட்டச்செய்கையில் உற்பத்தியாகின்ற மரக்கறிகளை கூட சந்தைப்படுத்த கூடிய வசதி கூட அவர்களது கிராமங்களிலே இல்லை.  அதாவது அவர்கள் அந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லுகின்ற போது மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்தல் அல்லது தரமற்ற பொருட்கள் என தட்டிக் கழித்தல் காணப்படுகின்றது. இவ்வாறு அதனை தட்டிக்கழிக்கும் போது அவர்கள் மனமுடைந்து அவர்கள் கொண்டு செல்லும் பொருளை அவர்கள் கேட்கின்ற விலைக்கே விற்பனை செய்கின்ற நிலை காணப்படும்.

இதனால் அந்த தொழிலை செய்வதற்கு அவர்கள் முயற்சிப்பதில்லை ஏனெனில் எங்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பது இல்லை. அப்படியானால் இவ்வாறு பொருட்களை உற்பத்தி செய்வதில் என்ன இலாபம் என்று கூட அவற்றை கைவிடுகின்றனர்.சில பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இன்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களாக இணைந்து நீண்ட காலமாக தொழில் செய்து அவர்கள் கிடைக்கின்றன சம்பளத்தை வைத்து ஏதோ தங்களுடைய குடும்ப பொருளாதாத்தை குடும்ப வாழ்க்கை செலவை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் மாதாந்தம் எடுக்கின்ற வேதனத்தை அவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் செலவுக்கு ஆகவே பயன்படுத்துகின்றார்கள்.  அவர்களுடைய எதிர்காலத்துக்கு அது போதாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்று பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது இதனால் அவர்களுடைய நாளாந்த வருமானம் அல்லது மாதாந்த வருமானம் அவற்றுக்கு செலவாகி விடுகிறது.

இது இவ்வாறு இருக்க இன்று பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் ஏனைய பிரதேசங்கள் பனை ஓலை பொருட்களை உற்பத்தி செய்து விட்டு அவற்றை கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது என குறித்த தொழில் முயற்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சேதனப்பசளை உற்பத்தி செய்கின்ற ஒரு செயற்பாட்டை ஊக்குவித்து தரமான சேதனப்பசளை உற்பத்தி செய்வதைக்கூட ஊக்குவிக்கலாம்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடு நகர் ஆகிய இடங்களில் அதிகளவான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன.  இவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். அண்மையிலே ஒரு காளான் உற்பத்தியில் ஈடுபடும் பெண் ஒருவரை தொடர்புகொண்டு அவரிடம் பேசிய போது அவர் சொன்ன விடயம் தன்னிடம் இருக்கின்ற காளானை வெளியில் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத ஒரு சூழல் காணப்படுகின்றது.

காரணம் வெளியில் கொண்டு சென்றால் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கின்றது ஆனால் அதை கொண்டு செல்வதற்கான வசதி தன்னிடம் இல்லை நாளாந்தம் தனது கிராமத்திலுள்ள அயலவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி வருவதாகவும் அது தன்னுடைய உற்பத்திக்கும் சந்தை வாய்ப்புக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுகின்றது என்று குறிப்பிட்டார். இது போல நீண்டகாலமாக கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற ஒருவரோடு தொடர்பு கொண்ட போது என்னால் இந்த கோழி வளர்ப்பை மேற்கொள்ள முடியவில்லை காரணம் சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. ஆகவே இதை பெரிய அளவில் செய்வதற்கு கஷ்டமாக இருக்கிறது.  இதற்காக நேரத்தைச் செலவழித்து அதில் வருகின்ற வருமானம் என்பது மிகக் குறைவு ஆகவே நானும் நாளாந்த கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதைவிட, மிளகாய் தூள் உற்பத்தி அரிசிமா என்பவற்றை மாவாக்கி அவற்றை பொதி செய்து விற்பனை செய்து அவற்றை இப்போது கைவிட்டுள்ள முயற்சியாளர் ஒருவரை தொடர்புகொண்டு வினவிய போது தனது உற்பத்திப் பொருட்களை உள்ளுர் கடைகளையே அவற்றை விற்பனை செய்ய முடியாது காரணம் உள்ளுர் உற்பத்திப் பொருள் என்பதால் அதனுடைய பொதி செய்தல் வடிவமைப்பு தரமில்லை ஆனால் மிகவும் தரமான பொருளாக இருக்கின்றது. தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற அல்லது வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு கவர்ச்சிகரமாக பொதி செய்யப்பட்டு இருக்கிறது அவற்றை மக்கள் வாங்கி பயன் படுத்துகிறார்கள். இந்தப் பொருட்களை யாரும் விரும்பி வாங்குவதில்லை நமக்கு உள்ளுரில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவித்தார்.

  • 674
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்