- · 5 friends
-
I
நினைத்த வரம் அருளும் கரிக்ககம் சாமுண்டி கோவில் பற்றி தெரிந்துக் கொள்வோமா?
🔵‘கரிக்ககம்’ என்ற இடத்தில் உருவானது தான், "தேவி கரிக்கத்தம்மா" என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில்.
🔵பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சி காலத்தில்,தாங்கள் ஆண்டப் பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர்.
🔵முன்னதாக மகா விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர்,சேர நாட்டில் 108 சிவாலயங்களையும்,108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார்.பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே ‘கேரளம்’என்று அழைக்கப்பட்டது.
🔵பிற்கால சேரர்கள்,சிவன் கோவில்களுடன்,பராசக்தியை பகவதி அம்மனாக,சாமுண்டி தேவியாக பற்பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
🔵இவ்வாறு ‘கரிக்ககம்’என்ற இடத்தில் உருவானது தான்,‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில்.
🔵இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக,ரத்த சாமுண்டி தேவியானவள்,சத்தியத்தை நிலை நாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள்.
🔵இது பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.
🔸தல வரலாறு🔸
🟢வேதவிற்பன்னர் ஒருவர்,யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும்,அருள்வாக்கும் அருளினார்.
🟢யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார்.
🟢அவர் முன்பு அன்னையானவள்,சிறுமி உருவத்தில் தோன்றினாள்.அந்த சிறுமியை குருவும்,சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,பச்சைப் பந்தல் அமைத்து சிறுமியை குடியமர்த்தினர்.
🟢உடனே அச்சிறுமி,அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள்.
🟢இதையடுத்து குருவின் ஆலோசனைப் படி,யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார்.அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள்.
🟢இந்த அம்மனை பராசக்தி,பகவதி,பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர்.
🟢ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.
🟢சாமுண்டி தேவி,
ரத்த சாமுண்டி தேவி,
பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
🟢இதில் ரத்த சாமுண்டி,பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர்.இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.
🟢முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில்,சாமுண்டி தேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது.நாளடைவில் பக்தர்கள்,தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர்.
🟢அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது.தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர்.அமைதி வாழ்வுக்கும்,தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
🟢இந்த அம்மனுக்கு பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது.
🟢ரத்த புஷ்பார்ச்சனை,சுயம்வரார்ச்சனை,சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது.பால் பாயசம்,பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்.
🟢காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும்,உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும்.
🟢நினைத்த காரியம் நிறைவேறவும்,தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக் கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.உடல்நலனுக்காகவும்,பயம் நீங்கவும் ‘கறுப்புக் கயிறு’ ஜெபித்துக் கட்டப்படுகிறது.
🟢இந்த தாயத்து,தேவியின் பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.
🟢இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி,உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள்.
🟢முன் காலத்தில் இருந்தே,இந்த அன்னையின் சன்னிதியில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது.
🟢அந்த காலத்தில் நீதிமன்றம்,போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்கார’(பகைமை அழிக்கும்)பூஜையாகும்.தோஷங்கள்,தடைகள் அகலவும்,புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும்,கண் திருஷ்டி நீங்கவும்,செய்வினை தோஷம்,பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
🛣️அமைவிடம்🛣️
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, "கரிக்ககம் சாமுண்டி தேவி" ஆலயம்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·