·   ·  970 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நினைத்த வரம் அருளும் கரிக்ககம் சாமுண்டி கோவில் பற்றி தெரிந்துக் கொள்வோமா?

🔵‘கரிக்ககம்’ என்ற இடத்தில் உருவானது தான், "தேவி கரிக்கத்தம்மா" என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில்.

🔵பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சி காலத்தில்,தாங்கள் ஆண்டப் பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர்.

🔵முன்னதாக மகா விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர்,சேர நாட்டில் 108 சிவாலயங்களையும்,108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார்.பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே ‘கேரளம்’என்று அழைக்கப்பட்டது.

🔵பிற்கால சேரர்கள்,சிவன் கோவில்களுடன்,பராசக்தியை பகவதி அம்மனாக,சாமுண்டி தேவியாக பற்பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

🔵இவ்வாறு ‘கரிக்ககம்’என்ற இடத்தில் உருவானது தான்,‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில்.

🔵இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக,ரத்த சாமுண்டி தேவியானவள்,சத்தியத்தை நிலை நாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள்.

🔵இது பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.

🔸தல வரலாறு🔸

🟢வேதவிற்பன்னர் ஒருவர்,யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும்,அருள்வாக்கும் அருளினார்.

🟢யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார்.

🟢அவர் முன்பு அன்னையானவள்,சிறுமி உருவத்தில் தோன்றினாள்.அந்த சிறுமியை குருவும்,சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,பச்சைப் பந்தல் அமைத்து சிறுமியை குடியமர்த்தினர்.

🟢உடனே அச்சிறுமி,அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள்.

🟢இதையடுத்து குருவின் ஆலோசனைப் படி,யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார்.அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள்.

🟢இந்த அம்மனை பராசக்தி,பகவதி,பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர்.

 🟢ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.

🟢சாமுண்டி தேவி,

ரத்த சாமுண்டி தேவி,

பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

🟢இதில் ரத்த சாமுண்டி,பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர்.இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.

🟢முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில்,சாமுண்டி தேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது.நாளடைவில் பக்தர்கள்,தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர்.

🟢அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது.தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர்.அமைதி வாழ்வுக்கும்,தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.

🟢இந்த அம்மனுக்கு பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது.

🟢ரத்த புஷ்பார்ச்சனை,சுயம்வரார்ச்சனை,சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது.பால் பாயசம்,பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்.

🟢காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும்,உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும்.

🟢நினைத்த காரியம் நிறைவேறவும்,தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக் கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.உடல்நலனுக்காகவும்,பயம் நீங்கவும் ‘கறுப்புக் கயிறு’ ஜெபித்துக் கட்டப்படுகிறது.

🟢இந்த தாயத்து,தேவியின் பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.

🟢இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி,உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள்.

🟢முன் காலத்தில் இருந்தே,இந்த அன்னையின் சன்னிதியில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது.

🟢அந்த காலத்தில் நீதிமன்றம்,போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்கார’(பகைமை அழிக்கும்)பூஜையாகும்.தோஷங்கள்,தடைகள் அகலவும்,புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும்,கண் திருஷ்டி நீங்கவும்,செய்வினை தோஷம்,பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

🛣️அமைவிடம்🛣️

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, "கரிக்ககம் சாமுண்டி தேவி" ஆலயம்.

  • 827
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்