·   ·  964 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சொந்தவீடு கட்டும் கனவை நனவாக்கும் முருகவழிபாடு

செவ்வாய்க் கிழமையில் முருக வழிபாடு செய்வது என்பது மிகவும் விசேஷமானது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் முருகனை முறையாக துதிக்கும் பொழுது முத்தான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. எல்லோருக்குமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். முருகனுடைய அருளைப் பெற்றால் சொந்த வீடு கனவு என்பது விரைவாகவே நிறைவேறும். தனக்கென ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற நியாமான ஆசையை நிறைவேற்ற கூடிய சக்தி பெற்றவர் முருகப் பெருமான். முருகப் பெருமான் வீற்றிருக்கும் சிறுவாபுரி ஸ்தலத்தில் செங்கல் வாங்கி வழிபட்டால் உடனடியாக வீடு கட்டும் யோகம் உண்டாகும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அத்தகைய அருளைக் கொடுக்கும் முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் முறையாக இப்படி வழிபடும் பொழுது வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நியதி. 

கந்தனை வீட்டில் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். முருகன் விக்ரகத்துக்கு தூய தண்ணீரால் முதலில் அபிஷேகம் செய்து விட்டு பின்னர் பால், தேன் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்ய வேண்டும். காய்ச்சாத பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்த பின், தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். விபூதி பிரியராக இருக்கும் முருகப் பெருமானுக்கு இறுதியாக விபூதியைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து விட்டு சந்தன, குங்குமம் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். முருகனுடைய வேல், முருகனுடைய நெற்றிப் பகுதி, கைகள், பாதம் என்று அத்தனை இடங்களிலும் பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் அவருக்கு பிடித்த முல்லை, செவ்வரளி மலர்கள் அல்லது கதம்பம் அல்லது வாசனை மிகுந்த மலர்களால் மாலை சாற்றி வைக்கலாம். விக்ரஹம் இல்லாதவர்கள் படத்திற்கு இது போல் பொட்டு வைத்து பூ சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். 

முருகனுக்கு உகந்த நைவேத்யம் சாம்பார் சாதம் ஆகும். உங்களுக்கு விருப்பமான பல காய்கறிகளை கொண்டு மணம் மிக்க சாம்பார் செய்து அதில் நெய் ஊற்றி நிவேதனம் வையுங்கள். பின்னர் கற்கண்டு படையுங்கள். சித்தரன்னம் என்று சொல்லப்படும் கலவை சாத வகைகளைக் கூட நிவேதனம் வைக்கலாம். அது உங்கள் விருப்பம் தான். பின்னர் ஆறு விளக்குகள் வைத்து அதற்கும் சந்தன, குங்கும திலகமிட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். ஆறுமுகனுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடும் பொழுது நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நியதி. பிள்ளைவரம் எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் இது போல் ஆறு விளக்கு ஏற்றி, சாம்பார் சாதம் நெய்வேத்தியம் வைத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து, முருகனுடைய மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வந்தால் விரைவாக பிள்ளைப்பேறு உண்டாகும். அவருடைய வேலுக்கும் இது போல் அபிஷேகம் செய்து வழிபடும் பொழுது நிறைய பலன்கள் கிடைக்கும். வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் பொழுது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கும். பகைவர்களின் தொல்லைகள் ஒழியும். தொழில் மற்றும் வியாபார விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

  • 297
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்