- · 15 friends
-
S
அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடாத்தும் ஒரு ஏழைக் குடும்பத்தின் குமுறல்.
கஸ்ரப்பட்டு ஒரு நாளைக்கு ஐந்து கட்டு விறகு விற்றால் தான் நாங்கள் சாப்பிட முடியும், விறகு விற்காவிட்டால் சாப்பாடில்லை இந்த கொரோனாவால் வந்த பயணத்தடை ஏழைகளாகிய எங்களின் வயிற்றில் அடித்து விட்டது.
இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிராமத்தில் அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடாத்தும் ஒரு ஏழைக் குடும்பத்தின் குமுறல்.
கடந்த முற்பது வருட கால யுத்தத்தம் உயிரிழப்புக்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியதுமட்டுமல்லாது யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது
.யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றக்கிராமங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்ற அதிகளவான மக்கள் அன்றாடம் உணவிற்கே அல்லாடுகின்ற நிலை காணப்படுகின்றது.குறிப்பாக பெண் தலைமைத்துக்குடும்பங்கள் முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் எனப்பல தரப்பட்டவர்கள் இவ்வாறான நெருக்குதல்களுக்கு முகங்ககொடுத்து வருகின்றனர்.
இலங்கையின் இருபத்தி ஐந்து மாவட்டங்களிலும் வறுமை நிலையில் முதல் மூன்று நிலைகளிலும் உள்ள மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பல குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையில் வறியவர்களாவே வாழ்ந்து வருகின்றனர்.
ஏ-9 வீதியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பனிக்கன்குளம் கிராமத்தின் ஏ-9 வீதியின் இரு மரங்கிலும் வழமையாக ஆங்காங்கே விற்பனைக்காக விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும்.
அதன் அருகில் பெண்கள், சிறுவர்கள் முதியவர்கள், வறுமையின் கோடுகள் விழுந்த முகத்துடன் வீதியால் செல்லும் வாகனங்களை பார்த்து இவர்கள் விறகு வாங்குவார்களா? அடுத்து வருபவர்கள் வாங்குவார்களா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள்.இந்தக்கிராமத்தில் வாழுகின்ற மக்களில் அதிகளவானோர் வறிய குடுமப்ங்களாகவே காணப்படுகின்றன.
இவர்கள் காடுகளில் கூலிக்கு மணல் அகழ்வுகளில் ஈடுபடுதல், விறகுகளை வெட்டுதல், போன்ற கடின வேலைகளை மாத்திரம் செய்ய முடிவதாகவும் வேறு எந்தக்கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாது.
காரணம் கூலி வேலை செய்யக்கூடிய விவசாயக்கிராமங்கள் அல்லது வேலை வாய்ப்புக்கள் இந்த கிராமத்தினை அண்மித்த பகுதிகளில் இல்லை.இங்கிருந்து வேலை தேடிச்செல்வதாயின் பயணத்திற்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபா செலவழித்து வேலைத்தேடிச்செல்ல வேண்டும்.அங்கு வேலை கிடைக்காவிட்டால் திரும்புவதற்கு பணம் இன்றி சிரமப்படவேண்டும்.
இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வரும் அன்றாடம் விறகுவிற்று வாழ்க்கை நடாத்தும் குடும்பத்தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில்; நாங்கள் அன்றாடம் காடுகளுக்குள் சென்று விறகுகளை வெட்டி வந்து வீதியில் வைத்து அதை விற்றால் தான் ஒரு வேளையாவது சாப்பிடமுடியும்,விறகு விற்காவிட்டால், அயலர்வகளிடம் கடன் வாங்கவேண்டும். அப்படிக்கடன் வாங்குவதற்கும் அவர்களிடமும் ஏதும் இருக்கவேண்டும்.ஆனால் இங்கே வாழ்கின்ற பலர் எங்களைப்போன்றே வாழ்கின்றார்கள்.
பலருக்கு சமுர்த்தி நிவாரணம் இல்லை. அரசாங்க உதவிகள் இல்லை. வீட்டுத்திட்டங்கள் இல்லை.இதனால் இங்கிருப்பவர்கள் கஸ்ரப்பட்டவர்களாவே இருக்கின்றனர்; எனக் குறிப்பிட்டதுடன், நாங்கள் ஒரு நாள் முழுதும் காட்டிற்குச்சென்று விறகு சேகரித்து வீதியில் வைத்து விற்றால் தான் அரைவயிற்றையேனும் நிரப்பமுடியும், அதற்கும் பெரும் கஸ்ரம்.
காடுகளுக்குள் சென்று விறகுகளை எடுப்பதற்கு வனவள அதிகாரிகள்; பிடிப்பார்கள், காட்டு யானை கரடி போன்ற விலங்குகளுக்குப்பயம் இவற்றையெல்லாம் தாண்டி விறகை வெட்டிவந்து வீதிகளில் வைத்தால் இப்போது காஸ்அடுப்பு கரண்ட் அடுப்பு பென்றெல்லாம் வந்து சமையல் இலகுவாகிவிட்டதால், விறகு வாங்குபவர்கள் குறைவு எனவும் தெரிவித்தார்.
இந்தக்கிராமத்தில் மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக்காட்டி கடன்களை வழங்குன்ற நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிடுகின்றனர்.இதைக்கட்டமுடியாது பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கிலிருந்து சுமார் இருபது கிலோ மீற்றர் தூரத்திற்கும் அப்பால் தினமும் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடாத்தும் மானிக்கம் கிட்டினன் என்ற 60 வயது முதியவர் தான் அன்றாடம் விறகு வெட்டி விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்வதாகவும் துவிச்சக்கர வண்டியில் தினமும் அதிகாலை வேளை ஏ-9 வீதியால் கொக்காவில் காட்டிற்குச்சென்று விறகு வெட்டிக்கொண்டு வந்து கிளிநொச்சியின் பல கிராமங்களுக்குள் கொண்டு சென்று 700 அல்லது 800 ரூபாவிற்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப்பெற்று வாழ்க்கைச்செலவை கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இப்போது கொரோனா என்று ஊடங்கு பயணத்தடை என மாதக்கனக்கில் போக்கு வரத்து இல்லை தொழில் வாய்ப்பு இல்லை ஏழைகளாகிய எங்களின் வயிற்றில் அடித்து விட்டது.இவ்வாறு அன்றாடம் ஒரு நேர உணவிற்கே அல்லற்படுகின்ற கிராமங்களும்; உணவின்றி வீடின்றித்தவிர்க்கும் மக்களும் ஏராளம்; இவர்களின் குறைகள் தீர்க்க உரிய வழிவகைகள் கண்டறியப்பட்டு இவர்களின் பஞ்சம் போக்கப்படவேண்டும்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·