- · 5 friends
-
I
பத்ராசலம் ராமர் கோவில் பற்றி தெரிந்துக் கொள்வோம்....
ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடத்தில் உள்ள ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார்.
அவர் ராமனுடைய வரலாற்றை முழுவதுமாக படித்து ராம நாமத்திலேயே இருப்பார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப்பட்ட போது மக்களிடம் வரியாக வசூலித்த பொற்காசுகள் இருந்தது.
அந்தப் பொற்காசுகளை அப்படியே கோவில் கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா என்னிடம் அனுமதி வாங்காமல் வரிப்பணத்தை எடுத்து நீ எப்படி கோவில் கட்டலாம் என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்தான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமர் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார்.
தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பொற்காசுகளை கொடுத்தது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது கோபண்ணாவுக்கு தெரிந்தது. ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். இன்றும் ஆந்திராவில் உள்ள ஒரு மியூசியத்தில் ராமர் நவாப்பிடம் கொடுத்த அந்த பொற்காசுகள் நவாப்பின் பொற்காசுகள் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் (Sri Sita Ramachandraswamy temple) (Telugu: శ్రీ భద్రాచలం సీతారామచంద్ర స్వామి వారి దేవస్థానము) இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட இந்து சமயக் கோவிலாகும். பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது [1].
பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
பத்திராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
மூலவர்: வைகுண்ட இராமர்
உற்சவர்: புராண பெயர்: பத்ராச்சலம், பத்திரகிரி
கட்டிய காலம்: 1674
பாடியவர்கள்: இராமதாசர்
தல விருட்சம்:
தீர்த்தம்: கோதாவரி ஆறு
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோவில் விழாக்கள்: வக்கீயக்கார மகோத்சவம், ஸ்ரீ இராம நவமி பிரம்மோத்சவம்,
அமைவிடம்: பத்ராச்சலம்
மாவட்டம்: பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்
மாநிலம்: தெலுங்கானா, இந்தியா
பத்ராசலம் கோயிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. கோயில் அருகிலேயே தங்கும் விடுதிகளும் உள்ளன. ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமகேந்திரவரம், அனகாபல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. செகந்திராபாத்தில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·