Support Ads
 ·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சுகம் தரும் அசோகாஷ்டமி

சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.

பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில்வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது. 

சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது.  அதனால் அசோகாஷ்டமி என்று பெயர். 

அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர்செய்விக்கலாம்.

மருதாணிமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம்வரலாம். முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளை பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி வாயில்போட்டு மென்று சாப்பிடலாம்.

த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;

பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

ஓ மருதாணி மரமே உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர்அல்லவா. மது என்னும் வஸந்தகாலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய். 

நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன். 

பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும் எனது துன்பங்களைவிலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் நீ என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள். 

இதைசொல்லி மருதாணி இலைகளை சாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

மருதானி மரத்திற்கு வடமொழியில் அசோகம் என்றுபெயர். ராவணன் இலங்கையில் சீதையை மருதாணிமரம் அடர்ந்தகாட்டில் சிறைவைத்தான். 

அரக்கிகளை பாதுகாப்பிற்கு வைத்து அவளை பயமுறுத்தசொன்னான்.  இதனால் பதிவிரதையான சீதாதேவி பத்துமாதங்களும் மிகதுன்பத்தை அநுபவித்தாள். தனது துன்பங்களை சீதாதேவி இந்தமருதாணி மரங்களிடம்சொல்லி அழுதுகொண்டிருந்தாள். 

அந்த சீதாதேவியின் கதறலை கருணையோடு கேட்ட அசோக மரங்களும் தனது கிளைகளாலும் இலைகளாலும் சீதையை சமாதானபடுத்தின. மரங்களும் சீதையை துன்பத்திலிருந்து காப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்தித்தன.

இறுதியில் சீதாராமர் அயோத்திக்குவந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டார். அப்போது சீதை இந்த அசோகமரங்களை நோக்கி தங்களுக்கு என்ன வரம்வேண்டும் எனகேட்டார். 

பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்ததுன்பம் வேறு யாருக்கும் வரக்கூடாது, குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக்கூடாது எனக்கேட்க சீதாதேவியும் மருதாணி மரங்களான உங்களை யார்  ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ , பூஜிக்கிறார்களோ, உன் இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, உன் இலைகளையார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும்நேராது என்று ஶ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள். 

ஆகவேதான்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அறைத்து கைகளில் பூசிகொள்கிறார்கள்.

 சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.

மேலும் சைத்ர மாதம் சுக்லபட்ச அஷ்டமி நாளில், பவானியாக வெளிப்பட்டாள் அம்பிகை. 

அந்த நாளே, பவானி ஜயந்தி என விசேஷமாக கொண்டாப்படுகிறது. 

அந்த நாளில்,  பவானியை, அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். 

அவரை சோகம் அண்டாமல்  வாழ்க்கை ஆனந்தமாக அமையும்  என்கிறது காசி காண்டம். 

  • 313
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்