- · 5 friends
-
I
சுகம் தரும் அசோகாஷ்டமி
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.
பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில்வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.
சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது. அதனால் அசோகாஷ்டமி என்று பெயர்.
அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர்செய்விக்கலாம்.
மருதாணிமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம்வரலாம். முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளை பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி வாயில்போட்டு மென்று சாப்பிடலாம்.
த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.
ஓ மருதாணி மரமே உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர்அல்லவா. மது என்னும் வஸந்தகாலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய்.
நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன்.
பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும் எனது துன்பங்களைவிலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் நீ என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள்.
இதைசொல்லி மருதாணி இலைகளை சாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.
மருதானி மரத்திற்கு வடமொழியில் அசோகம் என்றுபெயர். ராவணன் இலங்கையில் சீதையை மருதாணிமரம் அடர்ந்தகாட்டில் சிறைவைத்தான்.
அரக்கிகளை பாதுகாப்பிற்கு வைத்து அவளை பயமுறுத்தசொன்னான். இதனால் பதிவிரதையான சீதாதேவி பத்துமாதங்களும் மிகதுன்பத்தை அநுபவித்தாள். தனது துன்பங்களை சீதாதேவி இந்தமருதாணி மரங்களிடம்சொல்லி அழுதுகொண்டிருந்தாள்.
அந்த சீதாதேவியின் கதறலை கருணையோடு கேட்ட அசோக மரங்களும் தனது கிளைகளாலும் இலைகளாலும் சீதையை சமாதானபடுத்தின. மரங்களும் சீதையை துன்பத்திலிருந்து காப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்தித்தன.
இறுதியில் சீதாராமர் அயோத்திக்குவந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டார். அப்போது சீதை இந்த அசோகமரங்களை நோக்கி தங்களுக்கு என்ன வரம்வேண்டும் எனகேட்டார்.
பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்ததுன்பம் வேறு யாருக்கும் வரக்கூடாது, குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக்கூடாது எனக்கேட்க சீதாதேவியும் மருதாணி மரங்களான உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ , பூஜிக்கிறார்களோ, உன் இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, உன் இலைகளையார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும்நேராது என்று ஶ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள்.
ஆகவேதான்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அறைத்து கைகளில் பூசிகொள்கிறார்கள்.
சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.
மேலும் சைத்ர மாதம் சுக்லபட்ச அஷ்டமி நாளில், பவானியாக வெளிப்பட்டாள் அம்பிகை.
அந்த நாளே, பவானி ஜயந்தி என விசேஷமாக கொண்டாப்படுகிறது.
அந்த நாளில், பவானியை, அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
அவரை சோகம் அண்டாமல் வாழ்க்கை ஆனந்தமாக அமையும் என்கிறது காசி காண்டம்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·