Category:
Created:
Updated:
சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை தனியாரிடம் வழங்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை முடிவெடித்துள்ளதாக தகவல் வருகிறது.
தற்போது பங்குச்சந்தையில் மோசடி செய்தாதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியதால் பங்குகள் சரிவடைந்துள்ள அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட மொத்தம் 25 விமான நிலையங்கள் தனியாரிடம் வழங்குவதற்கான ஒப்பந்தம் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.