Category:
Created:
Updated:
மகிந்த ராஜபக்சவுக்கு மாலதீவில் அடைக்கலம் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என இலங்கையில் தற்போதுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு மகிந்த தனக்கும் தனது குடும்பத்தவர்களிற்கும் மாலதீவில் அடைக்கலம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை – மாலதீவு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் மாலதீவில் உள்ளன, என தெரிவித்துள்ள அவர் மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான விடயம் நான் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.