Category:
Created:
Updated:
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.
நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.