கிளிநொச்சி இராமநாத புரம் பகுதியில் நேற்று (09-05-2022) மாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சமயம் கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பற்றுடன தப்பியோடிய இளைஞனின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் பொலிசார்பேச்சு வார்த்தை மேற்கொண்டு அவற்றைப் பெற்றக் கொண்டர்
கிளிநொச்சி இராமநாத புரம் பகுதியில் நேற்று (09-05-2022) மாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சமயம் கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பற்றுடன தப்பியோடிய இளைஞனின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் பொலிசார்பேச்சு வார்த்தை மேற்கொண்டு அவற்றைப் பெற்றுக் கொண்டார்கள்.
கிளிநொச்சி இராம நாதபுரம் பகுதியில் தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராம நாதபுரம் பொலிஸ் காவல் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் அதிகாரிகள் மூவர் நேற்று (09-05-2022) பிற்பகல் கசிப்பு வைத்திருந்ததாக தெரிவித்து இளைஞர் ஒருவரைக் கைது செய்த நிலையில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளைஞன் கைவிலங்குடன் பொலிசாரி்ன் கைத்துப்பாக்கியையும் பறித்துக் கொண்டு தப்பியோடிய நிலையில் குறித்த பகுதியில் அதிகளவான பொலிசார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்ட போதும் குறித்த இளைஞரை கைது செய்ய முடியாத நிலையில் நேற்று மாலை இளைஞரின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தப்பியோடிய இளைஞரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பன பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.