ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகள்
மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதுடன் சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதி விபத்து மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதுடன் சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சடல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்புகளாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கூட நியமிக்கப்படாத நிலைகானப்படுகின்றது.
இவ்வாறு மல்லாவி ஆதார வைத்தியசாலை காண சட்ட வைத்திய அதிகாரி இன்மை பிரதுசத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொள்வதில் உறவினர்கள் பெரும் இடர்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது மாவட்ட பொது வைத்திய சாலையில் சிரமங்களின்றி உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்று கொண்டு வருவதற்கும் கிட்டத்தட்ட ட்டத்தட்ட 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலங்களை கொண்டு சென்று மீளவும் 110 கிலோமீற்றர் துரத்திற்கு கொண்டு வந்து உறவினர்கள் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் பெரும் பெரும் பண செலவை எதிர்கொள்வது என்பதுடன் உறவினர்கள் குடும்பத்தினர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர் இதேவேளை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பல மடங்கு துன்பங்களை அனுபவித்து வருகிறன.
எனவே குறித்த மல்லாவி வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியை நியமிக்குமாறும் குறித்த பிரதேசங்களுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேசமாக பொதுமக்களும் பொது அமைப்புக்களும் கோரியுள்ளனர்.