சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகள்

மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான  சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதுடன்  சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப்  பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்கமையினால் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதி விபத்து மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதுடன் சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சடல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்புகளாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கூட நியமிக்கப்படாத நிலைகானப்படுகின்றது.

இவ்வாறு மல்லாவி ஆதார வைத்தியசாலை காண சட்ட வைத்திய அதிகாரி இன்மை பிரதுசத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொள்வதில் உறவினர்கள் பெரும் இடர்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இப் பிரதேசத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது மாவட்ட பொது வைத்திய சாலையில் சிரமங்களின்றி உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்று கொண்டு வருவதற்கும் கிட்டத்தட்ட ட்டத்தட்ட 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலங்களை கொண்டு சென்று மீளவும் 110 கிலோமீற்றர் துரத்திற்கு கொண்டு வந்து உறவினர்கள் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் பெரும் பெரும் பண செலவை எதிர்கொள்வது என்பதுடன் உறவினர்கள் குடும்பத்தினர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர் இதேவேளை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பல மடங்கு துன்பங்களை அனுபவித்து வருகிறன.

எனவே குறித்த மல்லாவி வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியை நியமிக்குமாறும் குறித்த பிரதேசங்களுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேசமாக பொதுமக்களும் பொது அமைப்புக்களும் கோரியுள்ளனர்.

  • 510
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads