கண்டி அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும்
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீனந்தாராம விகாராதிபதி தெனிகே ஶ்ரீ சிரினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி மல்வத்து அனுநாயக்க தேரர் வண.திம்புல்கும்புரே விமலதர்ம தேரரின் தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கௌரவ நாமத்தை வழங்கி வைத்தார்.
இதன் போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர். அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலையானது மத்திய மாகாணத்திற்கு மிகவும் விசேடமானது.நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நான் கூறுகின்றேன். நான் நேற்று மாத்தறை சென்றிருந்தேன். இரண்டு மணி நேரத்தில் கடவத்தையை அடைய முடிந்தது. கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் போது 4 மணித்தியாலங்களுக்கு மேல் செல்கிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை பாராட்டுகிறேன்.
இந்த வீதிகள் குறுகலாக இருப்பதால், அவற்றை முந்திச் செல்லக்கூட முடியாது. கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்க நான்கு மணி நேரம் ஆகும். ஒருவேளை இன்னும் அதிகமாக இருக்கலாம். எனவே எமது மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உறங்குகிறார்களா என கேட்கிறேன். பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில், தலைநகர் கொழும்பு என்பது போல இரண்டாவது தலைநகராக கண்டி உள்ளது ஆனால்எங்கே எமக்கு வீதி என்று கேட்கிறேன். பின்னால் வரிசையாக சசெல்லும் பாதை தான் நம்மிடம் உள்ளது. எனென்றால் வீதி சிறியது. எனக்கு இப்போது எண்பத்தி ஒன்று வயதாகிறது.
எனவே, நாங்கள் இறப்பதற்கு முன் நெடுஞ்சாலையை நிர்மாணியுங்கள். கண்டி நெடுஞ்சாலையில் எனக்கு பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை. கண்டியில் இருந்து கொழும்பு வரை அதிவேக நெடுஞ்சாலையை அமையுங்கள். எனக்கு செல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது பொதுமக்களுக்காக நெடுஞ்சாலை அமைக்க வேண்டும். இந்த விடயத்தை நாம் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துகிறோம் என்றார்.