கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 34 அடி 1.5 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன் நான்கு வான் கதவுகள் இன்று காலை (28-11-2021)திறந்து விடப்பட்டுள்ளன
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 34 அடி 1.5 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன் நான்கு வான் கதவுகள் இன்று காலை (28-11-2021)திறந்து விடப்பட்டுள்ளன.
36 அடி நீர் கொள்ளளவு கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 34 அடி 1.5அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் 79 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
இன்று காலை 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன அதாவது இரண்டு கதவுகள் 12 அங்குலத்திலும் இரண்டு கதவுகள் 6 அங்குலத்திலும் திறந்துவிடப்பட்டுள்ளது
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 பாரிய மற்றும் நடுத்தர குளங்களில் அக்கராயன் குளம் தவிர்ந்த ஏனைய குளங்கள் அனைத்தும் அதன் நீர் கொள்ளவு அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய்கின்றன 25அடி நீர்கொள்ளவு கொண்ட அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 24 அடி 5 அங்குலம் ஆக உயர்வடைந்துள்ளது டன் அக்கராயன் பிரதேசத்தில் 38.9 மில்லி மீட்டர் மழையும் நாகபடுவான் பிரதேசத்தில்34.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.