சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இன்ஸ்டாகிராம் காதலால் மருத்துவனை சிகிச்சையில் காதலன்

கோவையை அடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் நவ இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு இருந்ததால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனக்கு 18 வயது ஆகிறது என்றும், கல்லூரி மாணவி என்றும் கூறியுள்ளார்.

 

முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் இதயத்தை பரிமாறும் முன்பாக தங்களுக்குள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் தனது நண்பர்களான விக்கி, பாலா, ஜோயல், முத்து ஆகியோரையும் அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

அந்த வாலிபருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அது என்னவெனில், அந்த இளம்பெண்ணுக்கு 25 வயது என்பதும், ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் நிம்மதி இழந்த அந்த வாலிபர், இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறி அழுதுள்ளார். அதற்கு அவரது சகோதரி இப்படித்தான் இன்ஸ்ட்கிராம் காதல் எல்லாம் இருக்கும். நல்லவேளை திருமணத்துக்கு முன்பாக தெரிந்து விட்டதே, அதற்காக நீ சந்தோஷப்படு என்று ஆறுதல் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

 

ஆனால் அந்த பெண், கல்லூரி மாணவி என்று கூறி, அந்த வாலிபரிடம் கறக்க வேண்டியதை எல்லாம் கறந்து இருக்கலாமே. அவனும் காதல் மயக்கத்தில் கையில் உள்ளதெல்லாம் தந்து விட்டு கடைசியில் காணாமல் போய் இருப்பானே, நாம் கைப்பற்றியதை சுருட்டிக்கொண்டு ஆளை மாற்றி இருக்கலாமே, ஆனந்தமாக வாழ்ந்து இருக்கலாமே என்று நினைத்த ஆசையில் மண் விழுந்து விட்டதே என்று நினைத்தவளாய், ஆத்திரம் அடைந்தாள். தனது வில்லித்தனத்தை காட்டுவதற்கு முடிவு செய்தாள். அந்த வாலிபரைத்தான் வளைக்க முடியவில்லை. தனது வஞ்சக வேடத்தை அறிந்து விட்டானே. ஆனால் இந்த விஷயம் அவனது நண்பர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று எண்ணினாள்.

 

அந்த இளம்பெண், கோவைக்கு வந்தாள். அந்த வாலிபரின் நண்பர்களான விக்கி உள்ளிட்டோரை சந்தித்த அவள், உங்களது நண்பர் என்னை காதலித்து விட்டு தற்போது பேச மறுக்கிறார். இது உயிருக்கு உயிராக காதலித்த என்னை உயிர் எடுக்க பார்க்கிறது. எனக்கு இப்போது ஆறுதல் சொல்ல ஆளில்லை. எனக்கு நீங்கள்தான்தான் இருக்கிறீர்கள் என்று, ஒரு அனுதாப நெருப்பை பற்றவைத்தாள். விக்கி உள்பட நான்கு பேர், அந்த பெண்ணின் பேச்சைஉண்மையாக நினைத்து, இது குறித்து சரியாக விசாரிக்காமல், அந்த இளம்பெண்ணுடன் சென்று, வாலிபரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதில் காயமடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் அந்த இளம்பெண் மற்றும் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த வாலிபர் மட்டும் அல்ல, அவரது நண்பர்களும் பரிதாபமாக விழிக்கின்றனர். 

  • 721
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads