சினிமா செய்திகள்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இன்ஸ்டாகிராம் காதலால் மருத்துவனை சிகிச்சையில் காதலன்

கோவையை அடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் நவ இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு இருந்ததால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனக்கு 18 வயது ஆகிறது என்றும், கல்லூரி மாணவி என்றும் கூறியுள்ளார்.

 

முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் இதயத்தை பரிமாறும் முன்பாக தங்களுக்குள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் தனது நண்பர்களான விக்கி, பாலா, ஜோயல், முத்து ஆகியோரையும் அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

அந்த வாலிபருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அது என்னவெனில், அந்த இளம்பெண்ணுக்கு 25 வயது என்பதும், ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் நிம்மதி இழந்த அந்த வாலிபர், இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறி அழுதுள்ளார். அதற்கு அவரது சகோதரி இப்படித்தான் இன்ஸ்ட்கிராம் காதல் எல்லாம் இருக்கும். நல்லவேளை திருமணத்துக்கு முன்பாக தெரிந்து விட்டதே, அதற்காக நீ சந்தோஷப்படு என்று ஆறுதல் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

 

ஆனால் அந்த பெண், கல்லூரி மாணவி என்று கூறி, அந்த வாலிபரிடம் கறக்க வேண்டியதை எல்லாம் கறந்து இருக்கலாமே. அவனும் காதல் மயக்கத்தில் கையில் உள்ளதெல்லாம் தந்து விட்டு கடைசியில் காணாமல் போய் இருப்பானே, நாம் கைப்பற்றியதை சுருட்டிக்கொண்டு ஆளை மாற்றி இருக்கலாமே, ஆனந்தமாக வாழ்ந்து இருக்கலாமே என்று நினைத்த ஆசையில் மண் விழுந்து விட்டதே என்று நினைத்தவளாய், ஆத்திரம் அடைந்தாள். தனது வில்லித்தனத்தை காட்டுவதற்கு முடிவு செய்தாள். அந்த வாலிபரைத்தான் வளைக்க முடியவில்லை. தனது வஞ்சக வேடத்தை அறிந்து விட்டானே. ஆனால் இந்த விஷயம் அவனது நண்பர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று எண்ணினாள்.

 

அந்த இளம்பெண், கோவைக்கு வந்தாள். அந்த வாலிபரின் நண்பர்களான விக்கி உள்ளிட்டோரை சந்தித்த அவள், உங்களது நண்பர் என்னை காதலித்து விட்டு தற்போது பேச மறுக்கிறார். இது உயிருக்கு உயிராக காதலித்த என்னை உயிர் எடுக்க பார்க்கிறது. எனக்கு இப்போது ஆறுதல் சொல்ல ஆளில்லை. எனக்கு நீங்கள்தான்தான் இருக்கிறீர்கள் என்று, ஒரு அனுதாப நெருப்பை பற்றவைத்தாள். விக்கி உள்பட நான்கு பேர், அந்த பெண்ணின் பேச்சைஉண்மையாக நினைத்து, இது குறித்து சரியாக விசாரிக்காமல், அந்த இளம்பெண்ணுடன் சென்று, வாலிபரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதில் காயமடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் அந்த இளம்பெண் மற்றும் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த வாலிபர் மட்டும் அல்ல, அவரது நண்பர்களும் பரிதாபமாக விழிக்கின்றனர். 

  • 573
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads