












மக்களுக்கு நன்மை செய்ய முடியாத அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்
இலங்கையின் மிக முக்கிய துறைகளான விவசாயத்துறை, தேயிலைத்துறை உள்ளிட்ட துறைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உறம் இன்றி இன்று அவர்கள் பல்வேறு பிரிச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இரசாயன உரம் வரவழைத்தால் மக்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறி இன்று அரசாங்கம் இரசாயன உரத்தினை நிறுத்திவிட்டு சீனாவிலிருந்து பற்றீரியாக்களை இறக்குமதி செய்துள்ளது.
இது விவசாயத்துறைக்கு மாத்திரமின்றி மனித குளத்திற்கே அழிவினை ஏற்படுத்தக்கூடியன. அது மத்திரமின்றி இன்று வெளிநாட்டு கப்பல்களை வரவழைத்து அதில் எண்ணெய் கசிவினை ஏற்படுத்தி கடல் தொழில் ஈடுபடுபவர்களை பாதிக்கச் செய்துள்ளது. இந்த நாட்டுக்கு காலம் காலமாக அன்னிய செலவாணியினை ஈட்டித்தந்த தேயிலை துறையினையும் பாதிப்படைய செய்து வெளிநாட்டிலிருந்து ஒரு காலமும் இல்லாதவாறு தேயிலை இறக்குமதி செய்து எமது சிலோன் டீ என்ற நாமத்திற்கிருந்த நற்பெயரினையும் களங்கப்படுத்தியுள்ளது. ஆகவே மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிவந்த அரசாங்கம் மக்களுக்கும் பல்வேறு இன்னல்களையும் துரோகத்தினையும் செய்து அந்நிய நாடு ஒன்று கூட செய்யாத அளவுக்கு மக்களை துன்பப்படுத்தி வருகிறது. ஆகவே மக்களுக்கு நன்மை செய்ய முடியாத அரசாங்கம் உடனே முடிந்தவர்களுக்கு கொடுத்து விட்டு வீடு செல்ல வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி சொந்த நிதியில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் கூம்மூட் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் நிர்மானிக்கப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.