Ads
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரை 1,332 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 511,372 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12,530 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads