Ads
எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது - பிரதமர் கிண்டல்
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால் இது போன்ற அதிசயங்கள் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நேற்று ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கே காய்ச்சல் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads