Category:
Created:
Updated:
ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கலைந்து போகும்படி போலீசார் கூறினர். எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.