சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு

இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து திறந்து வைக்கப்பட்டது.

இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்து வைத்தார். இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தின் வணிக சேவை பிரிவினுள் இந்த விசேட ஏற்றுமதி பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் பொது முகாமையாளராக கடமையாற்றும் D.P.K.குணசேகர இலங்கை வங்கியின் சிரேஷ்ட வங்கி சேவையாளர் என்ற விருதை பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த,

அரச நிதிக் கொள்கைக்கு அமைய அந்தந்த அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு எப்போதும் உறுதியாக செயற்படும் இலங்கை வஙகி, தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்துடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை கட்டியெழுப்புவதற்காக ´திவி உதான´ கடன் திட்டத்தையும், சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ´சஷ்ரிக´ கடன் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளோம்.

இலங்கை வங்கியின் முதலாவது தலைவர் சேர் எர்னஸ்ட் த சில்வா அவர்களின் சொகுசு இல்லத்திலேயே பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை அலரி மாளிகையில் கொண்டாடுவதற்கு பிரதமர் அனுமதி அளித்தமைக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

2014 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகக் காணப்பட்டது. அரச வங்கி வட்டி விகிதம் 8-9 சதவீதம் என்ற ஒற்றை இலக்கத்திலேயே காணப்பட்டது. சிறந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்ட நாடொன்றையே கடந்த அரசாங்கம் பொறுப்பேற்றது. எனினும் 2019ஆம் ஆண்டளவில் வங்கி வட்டி வீதம் 15-16 சதவீதம் வரை அதிகரித்து 2014ஆம் ஆண்டில் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட வரி விகிதமும் 15 சதவீதமாக அதிகரித்தது.

இன்று ஆரம்பித்த விசேட ஏற்றுமதி பிரிவு நாட்டின் சிறு, நடுத்தர மற்றும் பாரியளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் நிதிசாரா அனைத்து வசதிகளையும் வழங்கி அரசாங்கத்தின் உள்ளூர் ஏற்றுமதியாளர்களை மேம்படுத்தும் செயற்பாட்டிற்கு இலங்கை வங்கி உறுதியாக விளங்கும் என காஞ்சன ரத்வத்த தெரிவித்தார்.

  • 910
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads