
உலகளவில் தரவரிசையில் இடம்பிடித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
துடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் முறையாக கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 1,000 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்திய இளங்கலை பொறியியல் திட்டத்தினால், இப்பல்கலைக்கழக தரவரிசை மதிப்பீட்டிற்கு தகுதியுடையதாக மாறியுள்ளது. தரவரிசையில் 561-570 இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசை இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்கும் நிறுவனங்களை மட்டுமே மதிப்பிடுகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்ற சூழலில், இந்த ஆண்டு 22 இந்திய கல்லூரிகள் முதல் 1,000 பட்டியலில் உள்ளன. கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர் மற்றும் மெட்ராஸ் ஐஐடி இந்த தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.
ஜே.என்.யூ முதன்முறையாக 1000 உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் நுழைகிறது. இந்த தரவரிசையில் ஐ.ஐ.டி பம்பாய் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் உலக தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 177 வது இடத்தை பிடித்தது.