Ads
வைத்தியசாலையில் இருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மரணம்
ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி இரண்டு முறை தப்பிச் சென்ற கோவிட் தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தொற்றாளர் 65 வயதுடைய ராகம இஹலகம பிரதேசத்தை சேர்ந்தவர் என ஹோமாகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி தப்பிச் சென்ற இந்த நோயாளி வீடு ஒன்றிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அன்றைய தினம் மாலை 3 மணியளவில் வைத்தியசாலை இருந்து மீண்டும் அவர் தப்பி சென்றுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைக்கமைய 500 மீற்றர் தூரத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads