கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை திகட்டாத கருத்துகளால் வழங்கி, மக்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்க வைக்கவும் செய்தார். நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு, பிறர் மனதை புண்படுத்தாமல், சீர்திருத்த கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக்கூறிய அற்புத கலைஞர். அந்த காலத்தில் நடிகர்களை 'கூத்தாடிகள்' என்று அழைத்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலை இருந்தது. அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், சமூக அந்தஸ்தும் கிடைக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் முதல் காரணம். தன் இயல்பான நகைச்சுவையால் அந்த நிலையை மாற்றினார். என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை. தாயார் இசக்கியம்மாள்.
மரண தருவாயிலும் உதவி கேட்டவருக்கு தன்னிடம் இருந்த வெள்ளிக்கூஜாவை வழங்கினார். கொடைவள்ளல் என புகழப்பட்ட எம்.ஜி.ஆர். ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் எனக்கு வந்ததற்கு காரணம் அண்ணன் என்.எஸ்.கே.வுடன் பழகியது தான் என்று குறிப்பிட்டார்.
கலைவாணர் தன் வாழ்நாளின் இறுதி காலத்தில் உடல் நலமின்றி படுக்கையில் இருக்கும்போது அவரை பார்க்க எம்.ஜி.ஆர். வருகிறார். பேசி முடித்து விட்டு புறப்பட்டு செல்லும்போது, அவர் என்.எஸ்.கே.வுக்கு தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்ப எத்தனிக்கிறார். இதை அறிந்து கொண்ட கலைவாணர், தம்பி! ராமச்சந்திரா வைக்கிறது...வைக்கிற... இப்படி ஆயிரமா வைச்சா எப்படி? 100 ரூபாயா சில்லரை மாத்தி வைச்சின்னா உதவி கேட்டு வருகிறவர்களுக்கு கொடுக்க வசதியா இருக்குமே! என்று கூறவும் எம்.ஜி.ஆர். கண்கலங்கி விட்டார்.
1944-ம் ஆண்டு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக நடிகர் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். 26 மாத சிறைவாசத்துக்கு பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கலைவாணர் சிறையில் இருந்து மீண்டபின்பு பழைய உற்சாகத்துடன் நடிக்கத்தொடங்கினார். 1957 ஆகஸ்டு 30-ம் தேதி உடல்நல குறைவால் தனது 49-வது வயதில் மரணம் அடைந்தார்.
தமிழக அரசு சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva