ஜெய்சங்கர் என்னும் அற்புதமான நடிகர்

ஜெய்சங்கர் நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்க அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர் வந்திருந்தார்...
அவரை எப்படியும் கவர்ந்து விட வேண்டும் என்று ஜெய்சங்கர்  ஆவலுடன் நினைத்திருந்தார்...
அன்று நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கருக்கு ராஜா வேஷம்... ஒரு வசனத்தை பேசிவிட்டு சிம்மாசனத்தில் அமர வேண்டும் ஆனால் அந்த சிம்மாசனத்தில் ஒரு கால் உடைந்து இருந்தது.. 
இதை கவனிக்காமல் ஜெய்சங்கர் அதில் சென்று அமர , நிலை தடுமாறி கீழே விழுந்தார்..
 அரங்கமே சிரித்தது....
சட்டென்று சுதாரித்துக்கொண்ட ஜெய்சங்கர் சமயோசிதமாக அவையை பார்த்து இப்படி சொன்னார், 
என்னை  எப்படியாவது வீழ்த்திவிட எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று...
 நான் அஞ்சமாட்டேன்..  என்றார்..
அரங்கம் அதிர கைதட்டுகள் கேட்டன..
அதில் முதல் கைதட்டு எம்ஜிஆர் உடையது..
பின்னர் பல  முயற்சிகளுக்குப் பின் சினிமாவில் முதல் பட வாய்ப்பு  பகலும் இரவும் மூலம் இவருக்கு கிடைத்தது...
வெறும் சங்கர் ஆன இவரை அந்த பெயருக்கு முன் ஜெய் என்று சேர்த்து ஜெய்சங்கர் ஆக அறிமுகப்படுத்தியவர் அந்த படத்தின் இயக்குனர் ஜோசப் அவர்கள்...
சரி.. முதல் மூன்று படங்களும் வெற்றி....
அப்போதைய சூப்பர் ஸ்டார்களான  எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் வயது  கிட்டத்தட்ட 50...
ஜெய்சங்கருக்கு அதில் பாதி வயதே ஆகியிருந்தது..
மிக இளம் வயது நாயகனாக களத்தில் இருந்தார்...
அவர் சரியாக. தன் வளர்ச்சி குறித்து மட்டும் சிந்தித்து இருந்தால்...  அதை திட்டமிட்டு, 
அதனை செயல்படுத்தி இருந்தால் அடுத்த ஏழு எட்டு ஆண்டுகளில் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இணையான இடத்தில் இருந்திருப்பார் ....
அதற்குரிய அழகும், திறமையும், வசீகரமும் அவரிடத்தில் இருந்தது...
ஆனால் அவரது பார்வையை வேறு பக்கம் இருந்தது.
பொதுவாக சினிமா துறை உட்பட எந்த துறையாக இருந்தாலும் அதில் மூன்று அடுக்குகள் இருக்கும்..
ஒன்று மேல்தட்டு இன்னொன்று நடுத்தட்டு
இன்னொன்று கீழ்தட்டு
சினிமாவில்,  எம்ஜிஆர் , சிவாஜி , ஜெமினி ஆகிய மூவரும் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு களில் மட்டுமே புழங்கி  கொண்டிருந்தார்கள்..
கீழ்தட்டு என்ற ஒரு பெரும் கூட்டம் அனாதையாக நின்று கொண்டிருந்தது..
தனது ஆசையான சினிமாவை  விட முடியாமல்  , அதே சமயம் அதில் பிழைக்கவும்  வழிதெரியாமல் ,  நடிகர்கள்,  தொழில்நுட்ப கலைஞர்கள்,  இயக்குனர்கள், கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து வகையிலும் மூன்றாம்  பிரிவைசேர்ந்த பெரும் கூட்டம் வறட்சியோடு இருந்தது..
பணக்காரனுக்கு,  வசதி படைத்தவனுக்கு ஏழையை பற்றி எந்த கவலையும் இல்லை என்ற ஒரு பொது சித்தாந்தம் இருக்கிறது..
ஜெய்சங்கர் அதற்கு நேர்மாறாக இருந்தார்.. சிந்தித்தார்..
அந்தப் பெரும் கூட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்..
அந்தக் கூட்டமும் தங்களுக்கு கிடைத்த ஒரே பிடிமானமாக ஜெய்சங்கரை எண்ணி இறுகப் பற்றிக் கொண்டது...
அன்றைய தேதியில் தமிழ் சினிமா கதாநாயகனின்  அதிகாரம் என்னவெனில்.., 
அவரை காலை மாலை இருவேளை வணங்கவேண்டும் அவருக்கு முன் நாற்காலியில் அமரக்கூடாது சத்தமாக பேசக்கூடாது உரக்க சிரிக்க கூடாது என இந்த லிஸ்ட் பெரிதாக இருந்தது...
அதை முதல் முறையாக ஜெய்சங்கர் உடைத்தார் ..
அரங்கத்திற்குள் நுழையும் பொழுதே  அவர் எல்லோருக்கும் ஹாய் , ஹாய், என்று ஆங்கில பாணியில் வணக்கம் வைத்தார்..
சிறியவன் பெரியவன் பேதமின்றி எல்லோரிடமும் நண்பனைப் போல் பழகினார் அன்போடு அணைத்துக் கொண்டார் அவர்கள் தோள்களில் கைபோட்டு பேசினார்.... அவர்கள்  குடும்பங்களைப் பற்றி விசாரித்தார் ...
தனக்கென்று எந்த மரியாதையையும்  எதிர்பார்க்கவே இல்லை...
இதனால் அவருடன் பணியாற்றிய எளிய கலைஞர்கள் பூரித்துப் போனார்கள்..
 மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிற்குள் இவரது புகழ் பரவத் தொடங்கியது..
இரண்டாவது ஆண்டிலேயே அவருக்கு தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்டு என்ற பெயர் கிடைக்கும் அளவுக்கு அவர் புகழ் வளர்ந்தது
அந்தப் பெயரை மேலும் வளர்த்துக் கொள்ளவோ,  தனது சம்பளத்தைக் கூட்டிக் கொள்ளவோ, அந்தக் கலைஞன் சிறிதும் முயற்சிக்கவில்லை... 
மாறாக,  தனது சம்பளத்தை, தனது படத்தின் பட்ஜெட்டை அந்த எளியவர்களுக்காக இன்னும் சுருக்கிக் கொண்டார்  குறைத்துக்கொண்டார்..
தனது படங்கள் தோல்வி அடைந்தால் அதன் சம்பளத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்கும் முறையை  தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்தவர் ஜெய்சங்கர் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
அந்தப் பெரும் கூட்டத்திற்கு தீனி போட இவர் பெரும் உழைப்பை தர வேண்டியிருந்தது அவர் சிறிதும் சளைக்காமல் அதை செய்தார்..
எந்த அளவிற்கு  எனில் வருடத்திற்கு 15 முதல் 20 படங்கள் படங்களில் நடித்தார்..
பலசமயங்களில் வாரத்திற்கு ஒரு படம் வெளியாகும் என்றால் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்..
அவருக்கு வெள்ளிக்கிழமை நாயகன் என்ற ஒரு பட்டமும் உண்டு...
ஜெய்சங்கர்  பத்தி ஒருத்தர் ரொம்ப எளிமையா ஒரு கதை சொன்னார் அதை சொல்றேன்..
உதாரணத்துக்கு நீங்க அவருடைய ஷூட்டிங்ல ஒரு லைட்மேனா  வேலை செய்கிறீங்கன்னு வச்சுப்போம்... 
இப்ப நீங்க போயி அவர்கிட்ட ,
சார் உங்கள வச்சு நான் ஒரு படம் எடுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..
அவர்,  அப்படியா தராளமா எடுத்திடலாம் எவ்வளவு பணம் வச்சிருக்க..?
நீங்க தலையைச்சொறிவீங்க ..
அவர் புரிந்து கொண்டு..
சரி பணம் இல்ல கதையாவது இருக்க...?
நீங்கள் மீண்டும் தலையை சொறிய..
சரி விடு கம்மி பட்ஜெட்டில் காமெடி கலந்த ஒரு குடும்ப படம் ஓகேவா..
நீங்கள் வேகமாக சரி என்று தலையாட்ட..
அவர் தன் மேனேஜரிடம் திரும்பி கதாசிரியர்  கிட்ட
இவருக்கு ஏத்த மாதிரி ஒரு சின்ன பட்ஜெட்டில் கதை எழுதச் சொல்லுங்கள் என்பார்..
கதை ரெடியானதும் அதில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிடமும் சம்பளம் வாங்காமல் வேலை செய்யச் கேட்டுக்கொள்வார்...
அவர் மீதிருக்கும் அன்பால் , நம்பிக்கையால் மறுபேச்சின்றி அனைவரும் உடன் படுவார்கள்..
படம் தயாராகி பிசினஸ் ஆனவுடன் அதில் பணிபுரிந்த அனைவருக்கும் சம்பளம் முறையாக செட்டில் செய்யப்படும்...
இப்போது நீங்கள் சாதாரண நிலையிலிருந்து தயாரிப்பாளர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டீர்கள்...
 உங்களிடம் இப்போது கணிசமான தொகையும் இருக்கும்..
இதைத்தான் ஜெய்சங்கர் பல படங்களில் செய்து கொண்டிருந்தார்...
இவருக்கு முன்னும் சரி,  இவருக்கு பின்னும் சரி , 
யாரிடத்திலும் இப்படி ஒரு நிகழ்வை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது....
ஆரம்பத்தில் எம்ஜிஆரின் மீது இருந்த ஈர்ப்பால் அவரின் ஏதேனும் ஒரு படத்தில் அவருடன் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ..
அதற்காக நீண்டகாலம் காத்திருந்தார்..
பின் இவர் படு பிஸியாக இருந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது...
ஆசையோடு நடிக்கப் போனார்..
ஆனால் அந்த படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கே மூன்று மணி நேரம் தாமதமாக தொடங்கியது.. ஜெய்சங்கர் மனம் கலங்கினார்..
காரணம் அப்போது கிட்டத்தட்ட 20 படங்களில் அவர் ஒப்பந்தமாகியிருந்தார் ..
அனைத்தும் சிறு தயாரிப்பு... அவருடைய ஒவ்வொரு மணிநேரமும் விலைமதிப்பு மிக்கது..
தன் விருப்பத்திற்காக அவர்கள்  பலிஆவதை  அவர் விரும்பவில்லை....
அந்த எளிய மனிதர்களுக்காக மிக கடினமான ஒரு முடிவை அவர் எடுத்தார் முதல் நாளிலேயே இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்..
தமிழ் சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எம்ஜிஆரின் கோபத்தை இதன்மூலம்  சம்பாதித்தார்..
பின்னாளில் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்ததன் மூலமும்,  அதனால் பத்திரிக்கைகளிலும் பொது வெளியிலும் உருவான வதந்திகளாளும் இன்னும் கூடுதலாக எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளானார் என்பது செவிவழி செய்தி...
அவருக்கு இதைப் பற்றிய கவலையோ அச்சமோ சிறிதும் இருந்ததாக தெரியவில்லை... தன்னைப்பற்றி சுயநலமாக சிந்திக்கும் ஒருவனுக்குத் தான் இதுவெல்லாம் தோன்றும்..
அவர்  தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்..
கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்தார்..
அவர் நடிக்க வந்தபோதே கலர் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன ...
ஆனால் இவர் நடித்த 95 சதவீத படங்கள் கருப்பு வெள்ளை படங்களாகவே இருந்தன...
காரணம் அனைத்தும் சிறு தயாரிப்புகள்..
இவர்களுக்காக தொடர்ந்து தன்னை பலி கேட்டுக்கொண்டே இருந்தார் ஜெய்சங்கர்..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மட்டும் வள்ளல்  அல்ல.. ஜெய்சங்கரும் தான் ...
இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், 
 எம்ஜிஆர் அவர்கள் எல்லோராலும் எளிதில் நெருங்க முடியாத ஒரு உயரத்தில் இருந்தார்...
 ஆனால் ஜெய்சங்கர் எல்லோராலும் எளிதில் நெருங்கக் கூடிய ஒரு இடத்தில் இருந்தார்.. 
அதேபோல் தமிழ்சினிமாவில் எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களால் நஷ்டமடைந்து 
நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் உண்டு..
ஆனால் ஜெய்சங்கரால் நஷ்டமடைந்த ஒரு தயாரிப்பாளர் கூட இருக்க முடியாது..
 மாறாக நடுத்தெருவில் இருந்த பல தயாரிப்பாளர்களை தூக்கி நிறுத்திய சான்றுகள் இங்கு ஏராளம்...
அவர் வீட்டில் இருந்த ஒரு பீரோ முழுவதும் திரும்பி வந்த காசோலைகள் இருந்ததாம்..
அதுகுறித்து அவர் எந்த தயாரிப்பாளரிடம் சண்டை போடவும் இல்லை.. நீதிமன்றத்திற்கு போகவும் இல்லை.... பிழைக்கத் தெரியாத பெரிய மனுஷன் இவர்...
இன்று ஒரு காசோலை திரும்பி வந்தால் அந்த  படத்தையே நிறுத்துகிறார்கள்..
இன்றும் கோடம்பாக்கத்தின் வீதிகளில் ஏதேனும் ஒரு பழைய கலைஞரிடம் ஒரு அரை மணி நேரம் நீங்கள் பேசிப்பாருங்கள்..
அந்த அரைமணி நேரத்திற்குள் அந்த வயதானவர் ஜெய்சங்கர் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வார்..
அதுவே ஜெய்சங்கர் அவர்கள் சினிமாவில் நிகழ்த்திய மாபெரும் சாதனையாகும்...
மக்கள் கலைஞர் என்ற பெயர்தான் இவருக்கு எத்தனை பொருத்தமானது..
  • 136
  • More
சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு