அப்பா வேடத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய எஸ்.வி. ரங்கா ராவ்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்பா கதாபாத்திரங்களை ஏற்க ஏராளமான நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், அன்பும் கண்டிப்பும் அரவணைக்க, பகடி இழையோடும் மெல்லிய நகைச்சுவையைப் படரவிட்டு, செல்வச் செருக்கை காட்டாத அப்பா கதாபாத்திரங்களுக்கு எஸ்.வி.ரங்கா ராவை விரும்பி அழைத்துகொண்டது தமிழ் சினிமா.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல எஸ்.வி.ஆர். என்று மூன்றெழுத்துகளால் அழைக்கப்பட்ட சாமர்லா வெங்கட ரங்கா ராவ் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நிஜாம்கள் அமைந்த புகழ்பெற்ற கோட்டை நகரான நுஸ்வித்தில் 1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து இந்துக் கல்லூரியில் படித்து இளங்கலையில் அறிவியல் பட்டம் பெற்ற ரங்கா ராவ், இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியவர்.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், எந்த வகை உணர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள், மந்திரப் புன்னகை, அலட்டல் இல்லாத அளவான உடல்மொழி, தெலுங்கையும் தமிழையும் சேதம் செய்யாமல் உச்சரிக்கும் மொழித்திறன் என இயல்பிலேயே அமைந்துவிட்ட அம்சங்கள் அவரை பிறவிக் கலைஞன் எனக் கூறச் செய்தன. தாம் ஏற்ற கதாபாத்திரங்களில் ரங்கா ராவ் என்றுமே நடித்ததில்லை; கூடு பாய்ந்திருக்கிறார். கதாபாத்திரமாகவே மாறிவிடும் மாயம் தெரிந்த மகா நடிகர். 25 ஆண்டு திரை வாழ்க்கையில் (தமிழ்ப் படங்கள் 53, தெலுங்குப் படங்கள் 109) அவர் பங்குபெற்ற 163 படங்களிலும் இந்த மாயத்தைக் காணமுடியும்.

ரங்கா ராவ் திரையில் அடிவைத்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் நாகி ரெட்டியின் தயாரிப்பில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1952-ல் வந்த ‘பெல்லி செஸ்ஸி சூடு’ படத்தில் தாராளம் மனம் கொண்ட கிராமத்து ஜமீன்தாராகத் தோன்றினார். ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்ற தலைப்புடன் தமிழில் வெளியான அந்தப் படத்தில் 60 வயதுத் தோற்றத்தில் சாவித்திரியின் தந்தையாக நடித்தார். ஆனால், அப்போது அவரின் உண்மையான வயது 34. அப்போது தொடங்கி அவரை அப்பா கதாபாத்திரங்களில் அதிகமும் முத்திரை குத்தின தெலுங்கு, தமிழ் சினிமாக்கள். ஆனால், ஏற்ற ஒவ்வொரு அப்பா கதாபாத்திரத்தையும் தனது தனித்த நடிப்பு பாணியால் வெவ்வேறாகத் தெரியும்படி செய்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.

1963-ல் வெளியான ‘நர்த்தன சாலா’ தெலுங்குப் படத்தில் பாண்டவர்களுடன் விராட நாட்டு அரண்மனையில் மறைந்துவாழும் திரௌபதியாக சாவித்திரி நடித்தார். பார்த்ததுமே இச்சை கொண்டு திரெளபதியை அடையத் துடிக்கும் கீசகனாக ரங்கா ராவ் நடித்தார். பல படங்களில் சாவித்திரிக்கு அப்பாவாக நடித்த ரங்கா ராவ், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதா என்று படம் வெளியாகும் முன்பே பத்திரிகை ஒன்று எழுதியது. ஆனால், அதே பத்திரிகை படம் வெளியானதும் “ சாவித்திரி திரௌபதியாகவும் எஸ்.வி.ஆர் கீசகனாகவும் மாறிவிட்டார்கள். அவர்களின் திறமை அவர்கள் உருவாக்கிய கண்ணியத்தைக் காப்பாற்றியது” என்று எழுதியது. ரங்கா ராவுக்கு தெலுங்கு சினிமா கதாநாயக வாய்ப்பை வழங்க முன்வந்தபோது அதை முற்றாக மறுத்த நடிகர் அவர். அதே நேரம் என்.டி.ஆர். நாகேஷ்வர ராவை விட சில படங்களுக்கு அதிக ஊதியம் பெற்ற ஒரே குணசித்திர நடிகர்!

நர்த்தனசாலா’ படத்தில் ஏற்ற கீசகன் கதாபாத்திரத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் படவிழாலில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர். ரங்கா ராவின் நடிப்பில் வெளிவந்த ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தன சாலா’ ஆகிய ஐந்து படங்கள் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றிருக்கின்றன. திரை நடிப்பில் தனித்து முத்திரை பதித்த வித்தகர் எஸ்.வி.ரங்கா ராவின் அஞ்சல் தலையை 2013-ல் வெளியிட்டுக் கௌரவம் செய்தது இந்திய அரசு.

  • 160
  • More
சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு