Ads

தமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்தமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்

  • 2273
  • More
  • 870
  • More
  • 865
  • More
  • 913
  • More
  • 870
  • More
  • 931
  • More
  • 886
  • More
Comments (1)
    Login or Join to comment.
    Added a post 
    தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 15 ஆம் தேதி மேஷம் -ராசி: நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். அலுவலகத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்ரிஷபம் ராசி:  கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை மிதுனம் -ராசி:  பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்கடகம் -ராசி:  முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதங்களுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்சிம்மம் -ராசி: வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்  கன்னி -ராசி:  கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்விருச்சிகம்- ராசி:  திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  தனுசு -ராசி:  குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு சாதகமாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மகரம் -ராசி: சவாலான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கும்பம் –ராசி: பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புமீனம் -ராசி: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
    • 207
    Added a post 
    சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 28.3.2024. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.44 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 05.28 வரை சுவாதி. பின்னர் விசாகம். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை வியாழன் மதியம் 1:30 to 3 PM காலை 6 to 7:30 AM காலை 9 to 10:30 AM
    • 217
    Good Morning...
    • 229
    Added a news 
    போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.இருந்தபோதும் , அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
    • 350
    Added article 
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் பிக்பாஸில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பூர்ணிமா நினைத்தபடியே பிக்பாஸ் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது. இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தது.அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாடினார். அந்த சீசனில் 96 நாள் விளையாடி 5 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு அவர் வெளியேறினார்.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள “வளையம்” என்கின்ற வெப் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார் பூர்ணிமா.இதில் பிரபல நடிகர் கதிர் நடிகை திவ்யா பாரதி உள்ளிட்டோர் கமிட் ஆகியுள்ளனர். இது தவிர தற்போது, பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடரிலும் பூர்ணிமா ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
    • 349
    Added article 
    தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர் அமலா பால். இதை தொடர்ந்து, விஜய், ஆர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த அமலா பால், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இயக்குனர் விஜய் குடும்ப வழக்காடியும், நடிகை அமலா பால் வீட்டின் குடும்ப வழக்கப்படியும் இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர், இயக்குனர் ஏ.எல். விஜய் குடும்பத்தினர் கண்டிஷனுக்காக திரையுலகில் இருந்து விலகிய அமலா பாலுக்கு, 'பசங்க 2' மற்றும் 'அம்மா கணக்கு' போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டியது.மேலும் அமலா பாலின் திரையுலக ஆசை... அவரது குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க, அமலா பால் - ஏ.எல்.விஜய் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். விவாகரத்துக்கு பின்னர் ஏ.எல்.விஜய் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பம் - குழந்தை என சந்தோஷமாகி வாழ்ந்து வருகிறார். ஆனால் அமலா பால் விவாகரத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது... அமலா பால் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். முழுக்க முழுக்க தன்னுடைய கர்ப்பகாலத்தை கணவருடன் செலவழித்து வருவதோடு, தனக்கு பிடித்த வற்றை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் பக்கத்தில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது நடந்து வருவது போல் எடுக்கப்பட்ட BTS வீடியோ ஒன்றை அமலா பால் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
    • 350
    Added article 
    சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.சமீப காலமாக, சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. சிலர் ஒரே சீரியலில் ஹீரோ - ஹீரோயினாக நடிக்கும் போது, இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நிஜமாகவே ஒர்க் அவுட் ஆகி, அந்த காதல் திருமணத்தில் முடிகிறது.சுந்தரி, இலக்கியா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ், கடந்த சில வருடங்களாக திருமகள் சீரியல் ஹீரோயின் ஹரிகாவை காதலித்து வந்தார்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில், கடந்த ஆண்டு... இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். இதை தொடர்ந்து ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் இன்று கேரள முறைப்படி நடைபெற்றுள்ளது. ஹரிகா சிவப்பு நிற பட்டு புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்க, அரவிஷ் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையில் மாப்பிள்ளையாக கெத்தாக இருக்கிறார். இவர்களின் திருமணம் குறித்த வீடியோவை இருவருமே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
    • 351
    Added a post 
    இன்று காலை ஒரு கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு...வழக்கம் போல ஹிந்தியில் ஆரம்பித்தார்கள்... நானும் வழக்கம் போல (ஹிந்தி தெரிந்தும்) தமிழில் ஆத்திசூடி சொன்னேன்... மறுபடியும் வழக்கம் போல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்கள்... ஆனால் வழக்கம் போல நான் ஆங்கிலத்தில் பேசவில்லை (சமீபகாலமாக பல நம்மூர் பெரியவர்கள் ஆங்கிலம் தெரியாமல் இத்தகைய கஸ்டமர் கேர் அழைப்பு களில் அவதிப்படுவதை பார்த்த பின் முடிந்தவரை தமிழிலேயே கஸ்டமர்கேரிடம் பேசுகிறேன்)இறுதியாக"ராஜகோபாலன் சார்...விச் லாங்குவேஜ் யூவார் கம்ஃபடபிள் வித்" என்றது எதிர்க்குரல்"ஐம் கம்ஃபடபிள் ஒன்லி வித் தமிழ் என்றேன்" ஒரு வித குழப்பத்தில் ஃபோன் கட் செய்தார்IT அலுவலகத்தில் ஆங்கிலம் தானே பேசுகிறீர்கள் என நீங்கள் வாதம் வைக்கலாம்IT அலுவலகத்தில் மொழி இல்லா சமவெளி...க்ளோபல் கம்யூனிகேஷன்... இங்கு பொதுமக்கள் தொடர்பு கிடையாது... பப்ளிக் சர்வீஸ் இல்லைஆனால் இத்தகைய கஸ்டமர் கேர், நம் மண்ணின் சொத்து எடுத்து நம் மக்களின் பணத்தை வைத்து வியாபாரம் செய்யும் பெரு முதலாளிகளின் முகம்... இந்த மண்ணின் கஸ்டமர்களுக்கு கேர் என சொல்லிவிட்டு இந்த மண்ணின் மொழி தெரியாத ஆட்களை பணியில் அமர்த்துவது எவ்வளவு பெரிய கயவாலித்தனம்... இவனுங்க காசு வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஏற்றவாறு நாங்க மாற மாட்டோம், எங்கள் மொழியில் தான் இவர்கள் பேச வேண்டும் என்கிற திமிர்.திமிர் க்கு திமிர் தான் காட்ட வேண்டும்.அதுக்கு தான் யார் எடுத்தவுடன் ஹிந்தியில் பேசினால் நான் ஆத்திசூடி சொல்லி அவர்களை நல்வழி ப்படுத்த முயற்சி ப்பேன்இப்படி இருக்க மறுபடியும் அதே கஸ்டமர் கேரிடமிருந்து கால்.... இம்முறை செந்தமிழில்வணக்கம் சார் என்று ஆரம்பித்து எதிர்க்குரல்பேசி முடித்தபின்"ஏன்ங்க முன்னாடி தமிழில் பேசாமல் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பேசினாங்க" என்றேன்"சார் ஆங்கிலம் ஹிந்தி அதிகம் பேர் கஸ்டமர்கேரில் இருக்காங்க சார்... தமிழ்ல குறைவுதான் " என்றார்நாம இந்த பெரு முதலாளிகளின் திமிர் க்கு திமிர் காட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் நாம நினைத்தால் இங்கே நம்மூரில் பலருக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும் என்றே தோன்றியதுஎந்த கஸ்டமர்கேர், வங்கிகள், இன்சூரன்ஸ் என எந்த கால் வந்தாலும் தமிழில் இல்லையெனில் "தமிழ் வேண்டும்" என சொல்லி துண்டித்து விடுங்கள்.. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்து இருந்தாலும்... இப்படி பெரும்பாலானவர்கள் செய்தோம் என்றால் தமிழ் பேசக்கூடிய பலரை அவர்கள் பணியமர்த்த தான் வேண்டும் அந்த கட்டாயம் ஏற்படும்... இதை ஒரு உறுதிமொழியாக எடுத்து செய்வோம்....மறவாதீர்கள் நீங்கள் துண்டிக்கும் ஒவ்வொரு ஆங்கில ஹிந்தி அழைப்பும் வேலை இல்லா ஒருவர் க்கு வேலை வாங்கி தர முடியும் ...இதல்லாமல், எதாவது காசு போட்டுட்டு இல்ல சாமான் வாங்கி போட்டுட்டு ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தால் தான் உங்களுடைய வேண்டியவை கிடைக்கும் என அநீதி இழைக்கப் படும் ஒரு மூதாட்டி க்கு நல்லது செய்தது போலவும் ஆகும் .மற்றவர்களிடமும் இந்த வேண்டுகோளை வையுங்கள்...
    • 351
    Added a post 
    ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...●X: சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன? Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! ●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! ○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...
    • 422
    Good Morning
    • 422
    Added a post 
    ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர், அப்போது மனைவிக்கு திடீரென ஒரு சந்தேகம்..."நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன் ஒரு கேள்விக்கு கூட பதிலை காணோமே, இவருக்கு என்னாச்சு!" ஒருவேளை தன்னுடைய கணவனுக்கு காதுதான் கேட்கவில்லையோ காலையில் நன்றாகத்தானே இருந்தார் என்று? பயந்தவள் ஆனால் அதை... தன் கணவனிடம் நேரடியாக கேட்க அவளுக்கு கொஞ்சம் தயக்கம், உடனே தன்னுடைய செல்போனை எடுத்து இந்த விஷயத்தை அவளின் உறவுக்கார பெண் டாக்டருக்கு மெசேஜ் எழுதி அனுப்பினாள்...அந்த டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...இருபது அடி தூரத்தில் நின்றுகொண்டு உங்கள் கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,... அவரின் காதில் விழவில்லையா? அல்லது கேட்காதது போல் நடிக்கிறாரா! என்று அவர் கண்களை உற்றுப் பாருங்கள்,.... மேலும் சந்தேகம் எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்...அதற்கும் பதில் வரவில்லை எனில் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லுங்கள், காது கேட்காதது போல் நடித்தாலும் சொன்னதையே திரும்ப சொன்னால் யாருக்கேனும் கோபம் வரும்தானே? அதுவும் பிடிபடவில்லை எனில்... அவரை என் கிளினிக்கு அழைத்து வாருங்கள்...குழப்பத்தில் இருந்தவள், டாக்டர் சொல்லியதை செய்து பார்க்க... எழுந்து வீட்டு வாசலில் நின்று உள்ளிருந்த கணவனிடம்... இன்று பசங்களுக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்...பதில் எதுவும் இல்லை...பின் வீட்டு வரவேற்பறையில் நின்று அதே கேள்வியைக் திரும்ப கேட்டாள்... அதற்கும் பதில் ஒன்றும் வரவில்லை... மீண்டும் ஹாலில் நெருங்கி வந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்... ம்ம்ஹும்ம்...மறுபடியும் சமையலறை வாசலில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்... கணவரிடமிருந்து எந்தவொரு பதிலுமே வரவில்லை..."அய்யய்யோ... போச்சு என் புருசனுக்கு ரெண்டு காதுமே கேட்கவில்லையே என்ன செய்வேன், என்று புலம்பியவள்... வேகமாக ஓடிவந்து கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் காது அருகே சென்றுச் சத்தமாக மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.... படார் என தலையை திருப்பிய கணவன் தலையை சொரிந்தபடியே எழுந்து கோபத்துடன்...”ஏன்டீ லூசு ! இப்படி காதுல வந்து கத்துற, எத்தனை தடவைதான் கேட்ட கேள்வியே திரும்பத் திரும்ப கேட்ப... நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்..."அவன் மனைவி அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய்விடுகிறாள்...........ஓ... என்று தலையை சொரிந்தவள் மயங்கி கீழே விழுகிறாள்...உண்மையில் காது கேளாமல் போனது அவன் மனைவிக்குத்தான்............!இப்படித்தான் பலர் பிரச்சனையை தன்னிடம் வைத்துக்கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்,
    • 449
    Added article 
    தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன்தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.அதேபோல் பாடல்களில் தனது தனித்திறமையின் மூலம் ஒருசில மாற்றங்களை செய்து அதில் வெற்றியும் கண்ட டி.எம்.சௌந்திரராஜன், தனது இளம் வயதில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். 23 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டி.எம்.எஸ், குடும்ப வறுமை காரணமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் சுதர்சன் என்ற படத்தை தயாரித்துக்கொண்டிருந்த ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.அங்கு ஒருமுறை பி.யூ.சின்னப்பா தனது சக நடிகர்களுடன் சீட்டு விளையாடிக்கொண்டிருக்க, அருகில், டி.எம்.எஸ். பாடல் பாடிக்கொண்டிருந்தார். இதை கேட்ட சின்னப்பா நண்பர்கள் இவன் எதற்காக இப்படி கத்திக்கொண்டிருக்கிறான் என்று கேட்க, அவன் என் பாடலை பாடிக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் பெரிய ஆளா வருவான் பார் என்று பி.யூ.சின்னப்பா கூறியுள்ளார். அதன்படி பல தடைகளை தாண்டி பாடகராக மாறிய டி.எம்.எஸ்.தனது குரலின் மூலம் பல நடிகர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளார்.அதேபோல் தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் கொண்டிருந்த டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி சிறிய நடிகர்கள் வரை பலருக்கும் அவர்களை போலவே பாடல் பாடியுள்ள டி.எம்.எஸ் எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு பாடுவது தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆருக்கு பாடுவது கஷ்டமா அல்லது சிவாஜிக்கு பாடுவது கஷ்டமா என்று கேட்டபோது, பதில் அளித்த டி.எம்.எஸ் சிவாஜிக்கு பாடுவது தான் கஷ்டம். எம்.ஜி.ஆருக்கு பாடுவது சாதாரணமாக பாடினால் போதும். ஆனால் சிவாஜிக்கு பாடும்போது அடிவயிற்றில் இருந்து பாட வேண்டும். அவர் பேசும்போதே அப்படித்தான் பேசுவார் அதனால் அவருக்கு பாடுவது தான் கஷ்டம் என்று கூறியுள்ளார்.
    • 471
    Added a post 
    தேவையானவை:பூண்டு - 100 கிராம்,சின்ன வெங்காயம் - 20,சாம்பார் பொடி. - 2 டேபிள்ஸ்பூன்,காய்ந்த மிளகாய். - ஒன்று,தாளிக்ககடுகு,வெந்தயம்,கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,புளி - எலுமிச்சைப் பழ அளவு,எண்ணெய் - 4 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு.செய்முறை: பூண்டைத் தோல் உரித்து இரண்டாக மூன்றாக நறுக்கவும். (முழுதாகவும் போடலாம் ).வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்கவும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.அதனோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.அதன்பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது சாம்பார் பொடி போட்டு கரைத்து வைத்தப் புளியைக் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.காய்கறிகள் இல்லாதச்சூழலுக்கும் குழந்தைகளுக்கும் உகந்த குழம்பு.
    • 535
    Added a post 
    தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 14 ஆம் தேதி மேஷம் -ராசி: குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம் ராசி:  தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மிதுனம் -ராசி:  வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு செயல்படவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைகடகம் -ராசி:  குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம்சிம்மம் -ராசி: குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  கன்னி -ராசி:  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உதவி செய்யும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதுலாம் -ராசி: மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். பயணங்களின் போது விவேகம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்விருச்சிகம்- ராசி:  நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசு -ராசி:  உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.  நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மாற்றம் பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மகரம் -ராசி: எதிலும் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புகும்பம் –ராசி: முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமீனம் -ராசி: எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சில பணிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
    • 563
    Added a post 
    2009 ஆம் ஆண்டு.தாய்லாந்து நாட்டின் ரேயாங் காட்டில் உள்ள ஒரு யானை உயிருக்குப் போராடியவண்ணம் பெருந்துயருடன் இருந்தது.31 வயதான பிளாய் தான்க் என்ற பெயருடைய அந்த யானைக்கு Parasitic என்ற ஒட்டுண்ணியின் தாக்குதலால் Trypanosomiasis என்ற கொடிய ஒட்டுண்ணித் தாக்குதல் நோய் வந்திருந்தது.Sleeping sickness காரணமாக அவதியுற்ற அந்த யானை கடுமையான காய்ச்சலுக்கு ஆளானது.பசியின்மையும், முகம் கழுத்து வயிற்று வீக்கத்தாலும், கால்கள் மரத்துப் போன தன்மையாலும், இரத்தசோகையும் ஏற்பட்டு மரணவாசலின் நுழைவாயிலில் தான்க் நின்று கொண்டிருந்தது.அத்தகைய சூழலில் அந்த யானையைக் கண்டார் Dr.Pattrapol எவ்வாறேனும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்று Lampang என்ற‌ இடத்தில் உள்ள Forest Industry Organisationக்கு எடுத்துச் சென்றார்.அங்கிருந்த மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள், தேசிய பூங்கா பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோர் துணையுடன் தொடர்ந்து சிகிச்சையளித்தார்.சில மாதங்கள் தொடர் கவனிப்பின் விளைவாக அந்த யானை நோயின் பிடியிலிருந்து வெளியேறியது. மீண்டும் அதைக் கொண்டு போய் ரேயாங் வனப்பகுதியில் விட்டு விட்டனர்.அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்பு Dr.Pattrapol வழக்கம் போல் வனப்பகுதியில் தன்னுடைய ரோந்துப் பணியினை மேற்கொண்டிருந்தார்.திடீரென்று மரங்களுக்கு இடையில் இருந்து ஒரு பிளிறல் சத்தம் கேட்டது. அது யானைகள் வழக்கமாகச் செய்கின்ற பிளிறல் ஒலியினைப் போன்று இல்லை."ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் ; உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்" என்ற கண்ணதாசனின் பாடல்வரியைக் கேட்டுள்ளீர்களா? ஊருலகிற்கான பொதுப்பார்வையைத் தவிர்த்து ஒரேயொருவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பார்வையைப் போல அந்த ஒலி தனக்கே தனக்கான அழைப்பொலி என்பதை உணர்ந்தார் டாக்டர்.வண்டியை நிறுத்தி காட்டினுள் நோக்கினார். அவரை நோக்கி பிளிறியபடி வந்து கொண்டிருந்தது ஒரு யானை. அடையாளம் கண்டு கொண்டார் Dr.Pattrapol. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பிளாய் தான்க் தான் அது.பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த யானை டாக்டரைப் பார்த்தவுடன் மறக்காமல் நினைவில் வைத்திருந்து அவரை நோக்கி விரைந்து ஓடிவந்தது.ஓடிவந்த தான்க்கை நோக்கி கையை நீட்டினார் மருத்துவர். அதுவும் தன்னுடைய தும்பிக்கையை நீட்டி அன்பினையும் நன்றியையும் வெளிப்படுத்தியது.ஒன்றல்ல... இரண்டல்ல... நூறு மொழிகளில் தன்னுடைய அன்பினை எவரேனும் வெளிப்படுத்தி கேட்டிருக்கிறீர்களா நீங்கள்?ஒன்றல்ல... இரண்டல்ல... கோடி சொற்களில் பாசத்தைப் பகிர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?பாவம்... அந்த யானைக்குப் பிளிறி கத்துவதைத் தவிர வேறேதும் தெரியாது. ஆயினும் நீட்டிய தும்பிக்கையால் மருத்துவரின் கைகளைத் தடவியபோது அதன் கண்களில் வழிந்த கண்ணீரில் கலந்திருந்த அன்பினையும் நன்றியையும் விவரிக்க ஆயிரம் கவிதைகளாலும் முடியாது."அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"
    • 552
    Added a post 
    சோபகிருது வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 27.3.2024. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.38 வரை துவிதியை. பின்னர் திருதியை. இன்று மாலை 03.47 வரை சித்திரை. பின்னர் சுவாதி. சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.. கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை புதன் மதியம் 12:00 to 1:30 PM காலை 7:30 to 9 AM காலை 10:30 AM to 12
    • 570
    Good Morning...
    • 561
    Added a news 
    கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்ப்பில் நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில் ரூ.14,000 பணமும், ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த தவணை முறை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும்.அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • 630
    Added a news 
    18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  தற்போது நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி திமுக இடம்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான இட  ஒதுக்கீடு கையெழுத்தாகி, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், நேற்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின்போது மீனவர் வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது. தற்போது தூத்துக்குடி பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர், சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மக்களவை தேர்தல் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று பேசினார். மேலும், கடந்த கால அதிமுக ஆட்சியின் வைக்கப்பட்ட கரும்புள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டிருக்க்றது. அப்போது தமிழ் நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது என்று கூறினார்.
    • 630
    Added a post 
    பொதுவாக நாம் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவைகளை செய்து ருசித்து இருப்போம் ஆனால் இன்று ஒரு கிழங்கை வைத்து அதே ஆட்டுக்கால் சுவையில் சூப் செய்வது எப்படி?முடவாட்டுக்கால் கிழங்கு:இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை பிரதேசங்களில் பாறைகளுக்கு இடையில் விளையக்கூடியது. மேலும் இது 15 டிகிரி குளிர்ச்சியில் தான் விளையும்.பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும் .தேவையான பொருட்கள்:முடவாட்டுக்கால் கிழங்கு =1 kgமிளகு =1 ஸ்பூன்சீரகம் 2 ஸ்பூன்மஞ்சள் தூள் =தேவையான அளவுஉப்பு சிறிதளவுஇஞ்சி =1/2 இன்ச்பூண்டு =2 பள்ளுகிழங்கு பொடி செய்யும் முறை :முடவாட்டுக்கால் கிழங்கை நன்கு காய வைத்து பவுடர் ஆக்கிக் கொள்ள வேண்டும், அரைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம், மஞ்சள் தூள் தேவையான அளவு மற்றும் உப்பை வறுத்து சேர்த்து பொடி செய்து கொள்ளவும் .இவ்வாறு சேர்த்து நன்கு பவுடராக்கி ஒரு கண்ணாடி டப்பாவில் அடைத்து வைக்கவும் .நமக்கு தேவைப்படும்போது இதை பயன்படுத்தி சூப் செய்து குடிக்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளலாம்.சூப் செய்முறை:இரண்டு கிளாஸ் தண்ணிருக்கு இரண்டு ஸ்பூன் வீதம் சேர்த்து அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டையும் தட்டி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக மாலை வேளையில் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும், மேலும் இரவில் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மூட்டுகளுக்கு தேவையான சுரப்பியை தூண்டச் செய்யும். சிறந்த வலி நிவாரணியாகவும், உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். நாம் மலை பிரதேசங்களுக்கு செல்லும்போது மலிவான விலையில் வாங்கி இதுபோல் பவுடர் ஆக்கி வைத்து குடித்து வரலாம்.
    • 630
    Added article 
    விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன.இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய லொள்ளு சபாவின் இயக்குனர் ராம் பாலா இந்த செய்தியை உறுதிப்படுத்தியதோடு, “இது என் குடும்பத்தில் ஒரு மரணம் போன்றது. சமீபத்தில் லொள்ளு சபாவின் அனைத்து நடிகர்களையும் மீண்டும் விஜய் பார்க்கில் கூட்டினார் சேசு.கடந்த 20 வருடங்களாக நாங்கள் தொடர்பில்லாமல் இருந்ததால், சேசு எங்களை ஒன்றாக இணைத்தார். இப்போது, அவர் போய்விட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.
    • 628
    Added a news 
    வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடக ஆளுமை, ரூமி அல்கஹ்தானி சவுதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். திங்களன்று இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அல்கஹ்தானி, “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது.” என்று தெரிவித்தார்.அல்கஹ்தானி, உலகளாவிய அழகுப் போட்டிகளில் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல.அவர் இதற்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற மிஸ் & மிஸஸ் குளோபல் ஏசியன் நிகழ்வு போன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
    • 630
    Added a news 
    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஜனநாயக அம்சமாகும். இந்நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, கற்பழிப்பு என்பது பெண்ணின் மீதான அத்துமீறல் மட்டுமே. ஆனால் புதிய திருத்தங்கள் மூலம், பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தைப் நிறைவேற்ற முடியும். இங்கு, சட்டப்பூர்வமாகப் பிரிந்த மனைவிக்கு கணவன் செய்யும் பாலியல் வன்முறை கற்பழிப்பாகக் கருதப்படுகிறது. பொலிஸ் காவலில், சிறை அல்லது வேறு ஒருவரின் காவலில் இருக்கும் போது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களுக்காக வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், இளவயதினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு சுமார் நான்கு ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் பின்னரே முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட மூலத்தை எதிர்த்து சில தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இது தவிர தேர்தல் திருத்த சட்ட மூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.1994 இல் திருமதி சந்திரிக்கா ஜனாதிபதி வேட்பாளராக மூன்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையை நீக்குவது. ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர்களை தெரிவு செய்யவும் அங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்ட போதிலும், தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தது. அதுவரை, ஜனாதிபதி ஒரு கொலை செய்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடர முடியாமல் இருந்தது. ஆனால் 19 ஆவது திருத்தம் அந்த நிலையை மாற்றியது. அதன்படி இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், ஊழலை தடுக்க சட்ட அதிகாரம் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முதல் கீழ்நிலை அதிகாரி வரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது. அந்த ஆணைக்குழு தொடர்பான பல திருத்தங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஊழல் கண்காணிப்பு ஆணைக்குழுவை ஒரு சுதந்திரமான நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதே இதன் நோக்கமாகும்.1994 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒவ்வொரு தலைவர்களும் இது தொடர்பாக வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அந்த தலைவர்கள் யாரும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த ஆண்டு விகிதாசார தேர்தல் முறை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தேர்தல் முறைகளில், தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொகுதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் செனட் சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.பாராளுமன்றத் தேர்தலில் திறமையானவர்களைக் காட்டிலும் பிரபலமானவர்கள்தான் அதிகமாக பாராளுமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் செனட் சபை முறையின் ஊடாக பிரபலமில்லாத திறமையானவர்களை பாராளுமன்றத்துக்கு நியமிக்கலாம்.இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும்” என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
    • 629
    Added a news 
    வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று( 26) மாலை முதல் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.சைபர் தாக்குதலின் பின்னர் ஹேக்கர்களால் அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இணைய விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு வகையான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சைபர் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
    • 627
    Added article 
    நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நாடகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தவர் செந்தில். கவுண்டமணி எப்படி படிப்படியாக முன்னேறினாரோ அப்படி செந்திலும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், கவுண்டமணி அளவுக்கு செந்தில் பிரபலமாகவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் சில படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க அது ரசிகர்களை கவர்ந்து அவர்களிடம் வரவேற்பை பெற்றது.அதன் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவுண்டமணி – செந்தில் இருவரின் காமெடி காட்சிகள் தங்களின் படங்களில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். அப்படி பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். ‘அண்ணே. அண்ணே’ என செந்தில் பேசும் ஸ்டைலையும், ‘டேய் கோமுட்டி தலையா, தேங்காய் தலையா’ என கவுண்டமணி அவரை அழைப்பதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.பல வருடங்கள், பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒருமுறை ‘என்னால்தான் உங்கள் காமெடியை மக்கள் ரசிக்கிறார்கள். நான் இல்லையேல் உங்கள் காமெடி வேலைக்கு ஆவாது’ என்கிற ரேஞ்சுக்கு செந்தில் பேசிவிட ‘சரிடா ரெண்டு பேரும் தனித்தனியாக படம் பண்ணுவோம். பாப்போம்’ என கவுண்டமணியும் சவால் விட்டார். அதன்பின் இருவரும் பல படங்களில் தனித்தனியாக நடித்தனர்.கவுண்டமணி ஹீரோக்களுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகன் போல நடிக்க துவங்கினார். எனவே, அவரை மக்கள் ரசித்தனர். ஆனால், செந்தில் தனியாக நடித்த படங்களில் அவரின் காமெடி பெரிதாக் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, செந்தில் தனது தவறை புரிந்துகொண்டார். அதேபோல், கவுண்டமணியின் காமெடியை மக்கள் ரசித்தாலும் ‘செந்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என ரசிகர்கள் பேச கவுண்டமணியும் அதை புரிந்துகொண்டார்.ஒருகட்டத்தில் கவுண்டமணியிடம் செந்தில் சரணடைந்து ‘உங்க கூட சேர்ந்து நடிச்சாதான் என்னையே ரசிப்பாங்க’ என சொல்லி, அதன்பின் அவருடன் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.அதன்பின் பல படங்களில் ஒருவரும் ஒன்றாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். இப்போது இருவருமே திரைப்படங்களில் நடிப்பதில்லை. இன்னமும் கூட அவர்களின் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 650
    Added article 
    "அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்.சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக,அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்: “ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்.” ”நாலாயிரமா? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தயக்கத்தோடு கேட்க,"அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன்.என்கிற ஒரு பாடகர் புதுசா வந்திருக்கிறார். அவரை வேணும்னா கேட்டுப்பாருங்கள்.” சௌந்தரராஜனா?யார் அவர்?எங்கே இருக்கிறார்?திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். இரண்டாயிரம் ரூபாய்தான் தர முடியும்.ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று தயாரிப்பாளர் கேட்க,ஒரு கணம் சிந்தித்தார் டி.எம்.எஸ்.இறைவன் ஒவ்வொரு வேளைகளிலும், நம் எல்லோருக்காகவும், ஏதோ ஒரு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டே காத்திருக்கிறான்.ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சம்மதித்தார் டி.எம்.எஸ். காரணம், அந்த கால கட்டங்களில், மதுரை பஜனை மடங்களில் பாட்டு பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி, காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது.ஆனால் டி.எம்.எஸ்.சின் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.“தூக்குதூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்: "‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும். அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க..பார்த்தார் டி.எம்.எஸ்..! சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார் :“நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்” அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை, அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். சிவாஜிக்கு ஒரே சந்தோஷம் : “அட, என் குரல் மாதிரியே பாடி இருக்காரே. நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க” ‘பெண்களை நம்பாதே…’, ‘ஏறாத மலைதனிலே…’ என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்.டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை அதிர்ஷ்டம் என்பதா ? தைரியம் என்பதா ?ஒன்று மட்டும் உறுதி.அதிர்ஷ்டம் எப்போதும் தைரியசாலிகளை மட்டுமே காதலிக்கிறது.(மார்ச் 24 - டி. எம். சௌந்தரராஜன் பிறந்தநாள்)
    • 649
    • 673
    எதார்ததமாக கேட்டால்.........எடுபட்ட பயலே..... என பதில் வருகிறது...(சிரிப்பதற்கு மட்டும்)
    • 687