Ads
Empty
Added a news
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அலெர்ட் செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமையாக வீசத் தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே சென்றால் முகம், உடல் எரியும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், கடலோர ஆந்திரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென் தமிழ்நாடு, வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 225
Added a news
தமிழ்நாட்டில் கடந்த சில சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் இன்று 24ந்தேதி ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
- 209
Added article
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.இந்நிலையில் சமீபத்தில் அவர் வித்தியாசமான உடையணிந்து எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
- 213
Added article
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.இப்போது ரைசாவின் கைவசம் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார். மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
- 213
Added a news
பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 222
Added a news
அதிபர், ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.அதிபர்,ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த நாட்டில் 2 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 16 ஆயிரம் அதிபர்கள் உள்ளனர்.ஆசிரியர் சேவை மற்றும் அதிபர் சேவையில் சம்பள பிரச்சியை காணப்படுகின்றது. அதிபர் – ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஏப்ரல் 18 ஆம் திகதி கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் செயலாளரின் கையொப்பத்துடன் கடிதமொன்று வெளியிடப்பட்டது.அதிபர், ஆசிரியர் சேவையில் சம்பளபிரச்சினை இல்லை என்றே அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பாரிய பிரச்சினையாகும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
- 234
Added a news
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமைப்பாகும்.அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் ஆரம்ப அங்கத்தவர்களில் ஒருவரும், சிரேஷ்ட கலாநிதியுமான கே.ஆரியசிங்கவிற்கு சிரேஷ்ட வளவாளருக்கான விருதும் ஏனைய வளவாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திர பண்டாரவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.பின்னர் ஜனாதிபதி அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்க நிறைவேற்றுக் குழு உறுபினர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டார்.
- 226
Added a post
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் தஞ்சாவூரிலும் வாழ்ந்திருந்தவர்.
- 248
Added a post
ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார்.ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.சில நாட்கள், அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்...சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் சிலர்,ஒரு நாள், வணிகரை நிறுத்தி, " என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு..? " என்றனர்." முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை...அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்...மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது..." என்றார்.இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம்.அதனால, நாம கொஞ்சம், " அட்ஜஸ்ட் " செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்; வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.
- 290
Added a post
ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு.அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு.-அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?""ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க, அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.-கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்?கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"-இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல்கடையை விட்டு வெளியேறுகிறார்.-அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,-"உங்களுக்கு ஒன்று தெரியுமா?முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"அதிர்ச்சியான முடி திருத்துபவர், "அது எப்படி சொல்வீர்கள்?நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."-"இல்லை....அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."-"முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"-"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான், கடவுள் என்பவர் இருக்கிறார்.மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"-இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.
- 287
Added article
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத்தும் ஒரு கொலுவில் தான் சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பெரிதாக பந்தா இல்லை. மிகவும் பணிவாக நடந்து கொண்டார். எம்பிஏ முடித்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸில் வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரை பார்த்தவுடன் மிகவும் பிடித்திருந்தது. அப்போது எனக்கு 21 வயது ஆகியிருந்தது. நான் அடுத்த நாளே, அவரைப்பற்றி வீட்டில் சொன்னேன். நான் அடுத்த நாளே வீட்டில் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம், நானும் அவரும் பழகிக்கொண்டு, காதலிக்கும் போது, எங்கேயாவது செல்வோம். அப்போழுது அதைப்பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் வெளியாகும். பத்திரிகைகளில் எழுதுவார்கள். அதுவெல்லாம் தேவையே இல்லை என்று சொல்லித்தான் நான் வீட்டில் சொல்லி விட்டேன். வீட்டில் பரத்தை பற்றி நான் சொல்லும் பொழுது, அவர் பிராமண பையன், நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார், நன்றாக படித்திருக்கிறார், நல்ல வேலையிலும் இருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால், எனக்கு அவரை கல்யாணம் செய்து வையுங்கள் என்றேன். கேட்ட என்னுடைய அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்ன வந்தாள், இவ்ளோ பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறாள் என்று, அவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் தான் இருந்தார்கள்.இதனையடுத்து அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்தார். என்னை விட மிகவும் சீக்கிரமாக, அவரை என்னுடைய பெற்றோருக்கு பிடித்து விட்டது. இதையடுத்து அவர் வீட்டில் என்னைப் பற்றி சொன்னார். ஜாதகம் பார்த்தார்கள்.என்னையும் பார்த்தார்கள் ஜாதகம் பொருத்தம் இருந்தது. என்னையும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னதான் அவரை எனக்கு பிடித்திருந்தாலும் காதல், டேட்டிங் என்பதிலெல்லாம் எனக்கு கொஞ்சம் பயம் உண்டு. அம்மாவிடம் சண்டை போட்டு, அவரை நான் இழுத்துச் சென்று ஓடும் அளவுக்கு, எனக்கு தைரியமும் கிடையாது. அதனால் அப்பா, அம்மா ஒத்துக் கொண்டால் திருமணம் செய்யலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அப்பா, அம்மா ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” என்று பேசினார்.
- 395
திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகளின் காலில் விழுந்து வணங்கினார். மக்கள் சிரித்தனர், ஆனால் அவர் கூறினார்:1. இது எனது குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும்.2. அவள் என் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருவாள்.3. அவள் என் பெற்றோரை மதித்து சேவை செய்வாள்.4. அவள் எனக்கு தந்தையான மகிழ்ச்சியைத் தருவாள்.5. தன் உயிரைப் பணயம் வைத்து எங்களின் குழந்தையைப் பெற்றெடுப்பாள்.6. அவள் எங்கள் வீட்டிற்கு அடித்தளமாக இருப்பாள்.7. அவளது ஆளுமையும் செயல்களும் சமூகத்தில் எனது நற்பெயரை உருவாக்கும்.8. அவள் என்னுடன் இருக்க தன் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறினாள்.9. என்னுடைய குடும்பத்தில் சேர அவள் தன் சொந்தக் குடும்பத்தை விட்டு வெளியேறினாள்.அப்படியென்றால், அவர்களுக்கு கொஞ்சம் மரியாதை காட்ட முடியாதா? என் பெண்ணை வணங்குவது ஒரு நகைச்சுவை, கேலியான விஷயம் என்றால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை.
- 391
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். -ஆபிரகாம் லிங்கன்
- 394
Added a post
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 11 ஆம் தேதி மேஷம் -ராசி: உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுத் திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திருப்பம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம் ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைமிதுனம் -ராசி: அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம் -ராசி: மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை செய்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனை மேம்படும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: பணி நிமிர்த்தமான அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்- ராசி: தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை தனுசு -ராசி: கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சில அனுபவங்களின் மூலம் மனதில் புதிய பாதை புலப்படும். நம்பிக்கையானவர்களின் ஆதரவு கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். பொதுப்பணிகளில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம் -ராசி:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சில விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம் –ராசி:வெளிவட்டாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மீனம் -ராசி: உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 430
Added a post
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 24.4.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.54 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று முழுவதும் சுவாதி நட்சத்திரம். சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 457
Added a poem
தலை குனிந்து வாசிக்கிறாய் உன்னை தலை நிமிர்ந்து வாழவைத்தேன் வரிகளை சுவாசித்து நெறிகளை கற்றுக்கொள்கிறாய் உன் அறிவு சிறையில் அகலம் காண்கிறாய் உணர்ந்தவர்கள் உணர்வு வளர்க்கிறார்கள் புரியாதவர்கள் பலியாகி விடுகிறார்கள் இறந்து போனது இயற்கை மட்டுமல்ல வாசிப்பும் அதன் நேசிப்பும்தான்
- 464
Added an event
கனடா கந்தசுவாமி கோவிலின் கார்த்திகேயன் விழா. June 22-23. இலவச நுழைவு மற்றும் இலவச வாகன நிறுத்துமிடம்.Canada Kanthaswamy Temple's Kaarthikeyan fest. Free entrance and parking.கனடா கந்தசுவாமி கோவில் திறந்த வெளி அரங்கில் மாபெரும் இசை பெரு விழா நடை பெற திருவருள் கூடியுள்ளது,இந்தியாஐரோப்பிய,கனேடிய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்,
- 621
Added a news
கியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இறுதிக் கிரியை பாராஜ் அல்லாஹ் ஜார்ஜோர் என்ற நபரே இவ்வாறு கியூபாவில் உயிரிழந்திருந்தார். தந்தையின் இறுதிக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு ஒருவரின் சடலமே கிடைக்கப் பெற்றது என குறித்த நபரின் மகளான மிரியம் ஜார்ஜோர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி மாரடைப்பு காரணமாக தமது தந்தை கியூபாவில் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 10000 டொலர்களை செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 649
Added article
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கலக்கிய நடிகை பிந்துகோஷ் கடைசி காலத்தில் தனது உடல்நல குறைவு காரணமாக வறுமையில் வாடி உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக உள்ளது.குண்டான உருவம், காமெடி நடிப்பு, குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் பிந்துகோஷ் . இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆக நடனமாடி உள்ளார். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிந்துகோஷ் நடித்தார்இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கோழி கூவுது என்ற திரைப்படத்தில் தான் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது காமெடி சூப்பராக எடுபட்டதையடுத்து பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். இவரது காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.விஜயகாந்த் நடித்த வெள்ளை புறா ஒன்று என்ற திரைப்படத்தில் பிந்துகோஷ், லூஸ் மோகனுடன் இணைந்து நடித்திருப்பார். லூசு மோகன் மிகவும் ஒல்லியான உடல்வாகுவாகவும் பிந்துகோஸ் குண்டான உடல்வாகு கொண்டவராக இருக்கும் நிலையில் இந்த ஜோடியை பார்த்து பலர் ஆச்சரியமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் லூஸ் மோகன் பிந்துகோஸ் ஆகிய இருவருக்கும் ஒரு டூயட் பாடல் உண்டு. அந்த பாடல் தான் பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் பெரிய பொண்ணு என்ற பாடல். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னை தசரதபுரத்தில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்த்தனர், அவர் ஆசை ஆசையாய் 10 நாய்களை வளர்த்தார். பங்களா, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது.தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு நாளைக்கு 16 மாத்திரைகளை அவர் சாப்பிடதாகவும் அந்த மாத்திரைகளால் சைட் எஃபெக்ட் காரணமாக மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருந்தார். அவரது வறுமை நிலையை கேள்விப்பட்ட விஷால் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார். அது மட்டும் இன்றி அவரது நடிகர் சங்க உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் ஆயுள் காலத்திற்கு புதுப்பிக்க அவர் தான் உதவினார்.இந்த நிலையில் நடிகை பிந்துபோஸ் இறந்துவிட்டதாக கூட வதந்தி வந்தது. ஆனால் ஆனந்த விகடனில் வந்த அவரது பரிதாபமான பேட்டி தான் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. நடிகை பிந்துகோஷ் மற்றும் கோவை சரளா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் அதனால் கோவை சரளா அவ்வப்போது வந்து பிந்துகோஷை நேரில் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வார்.தன்னுடன் நடித்த எந்த நடிகரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும் விஷால் கோவை சரளா உள்பட ஒரு சிலர் மட்டுமே அவ்வப்போது வந்து போவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்த போது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷம் இருக்கும்.இப்படி எல்லாம் நடித்த தன்னால் தற்போது எழுந்து கூட நிற்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருப்பதாகவும் இப்போது கூட எனக்கு உடல் நலம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார். நடிகை பிந்து கோஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர்களாக உள்ளனர்.
- 761