Feed Item
Added a news 

நேற்று முன்தினம்(26-01-2022) கிளிநொச்சி கண்டாவளை பொறுப்பு வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்த அதே சமயம் இரண்டு வாகனத்தில் சென்ற நபர்களும் அவரை அச்சுறுத்திய நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் (28-01-2022) பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நேரடியாகச் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் பிரஜைகள் குழு இன்று பிற்பகல் 4 மணிக்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் சேவையாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில் இவ்வாறானவர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கும் பொருட்டு வருகை தருகின்ற போதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அவர்களை வெளியேற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சி என்பது இந்த மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 493