Feed Item
Added article 

தெலுங்கு உலகின் மூத்த நடிகரான சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவர் தனது டுவிட்டர் பதிவில், 

 “முன்னெச்சரிக்கையாக இருந்தும் லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து விரைவில் நலம் பெற அவருக்கு, திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  • 358