Feed Item
Added a news 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிட நிதியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமிக்ரோன் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,539 ஆக அதிகரித்துள்ளது.

மாநில பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக கொரோனா நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • 523