Feed Item
Added a news 

தமிழ்நாட்டில் இன்று 1,02,068 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 30 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் என 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. 

  • 495