Feed Item
Added a news 

கிளிநொச்சி  பூனகரி அன்பு புரம்  பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா அன்பு புரம் கிராமத்தில் கூடுதலாக குடிநீர் கிணறுகள் உவர் நீராக காணப்படுவதனால் இந்தப் பிரதேச மக்கள் தமக்குத் தேவையான குடிநீரை வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

அந்த வகையில் தற்போது குறித்த பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த குடிநீர் வினியோகமானது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் ஏனைய நாட்களில் குடிநீர் இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீரானது ஓரிரு நாட்களுக்கு தேவையான நீராக இருப்பதாகவும் ஏனைய நாட்களில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • 558