ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படம் என சொல்லிக்கொள்ளும் படி ஒருபடமும் அமையவில்லை என வருத்தத்தில் இருந்த சூர்யாவிற்கு சூரரை போற்று படம் பெரிய வெற்றி பெற்றுத்.
வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். சூர்யாவிற்கு சூரரைப்போற்று மிக பெரிய திருப்பத்தை கொடுத்தது. தொடர்ந்து வரிசையாக படம் நடித்து வருகிறார் சூர்யா.
ஜெய்பீம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெய்பீம் தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஒருபடம் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா, சூர்யா இணையும் படத்திலும், வாடிவாசல் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் இருவரும் சூரரைப்போற்று படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- 368