Feed Item
Added article 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அப்போது கடந்த வாரம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை போட்டியாளர்களுடன் உரையாடுவதை கமலஹாசன் வழக்கமாக வைத்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறுபவரையும் கமலஹாசன் அறிவிப்பார். அந்த வகையில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 15 போட்டியாளர்களும் மிகுந்த பதட்டத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர்.

பிரபல மலேசிய மாடல் அழகியான நாடியா சாங் என்பவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் நாடியா சாங், இருக்கும் இடம் தெரியாமலே மறைந்துவிட்டார். அத்துடன் சுவாரசியம் குறைந்த போட்டியாளரும் அவராகத்தான் உள்ளார். கமலே சென்றவாரம் நாடியா சாங்கை பார்த்து, உங்களது குரல் வீட்டில் ஒலிக்க வேண்டும். அதை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் நாடியா சாங், கடந்த வாரம் முழுவதும் தன்னுடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இல்லாதது போன்றே தெரிந்தது. இரண்டு வாரத்தில் நாடியா சாங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் பெரும் குற்றச்சாட்டாகும்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லவிருக்கும் நாடியா சாங்கிற்கு டாடா காட்டி வழி அனுப்ப காத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • 350