Feed Item
Added article 

சுமார் 17 இலட்சத்திற்கு வீட்டை அழகாக மாற்றி வந்த நடிகையை அந்த வீட்டில் வேலை செய்பவர் மிரட்டி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எஸ். ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே போன்ற சில பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. இவரது உண்மை பெயர் மீரா சோப்ரா. 

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் காணாமல் போன சில நடிகைகளில் இவரும் ஒருவர். அப்படி இருந்த போதிலும்  இவருக்கு  பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஹிந்தியில் வெப்சீரிஸ் போன்றவை அதிகமாக எடுக்கப்படுவதால் அதில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து தான் சமீபத்தில் தன்னுடைய வீட்டை சுமார் 17 லட்சம் செலவில் வீட்டிற்குள் இருக்கும் இன்டீரியர் டிசைன்களை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக ஒரு டிசைனரிடம் சுமார் 17 லட்சம் பட்ஜெட்டில் வீட்டிற்கான பாதி பணத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டாராம்.

நடிகையை பார்த்து நன்றாக ஏமாற்றலாம் என முடிவு எடுத்த அந்த நபர் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி வீட்டை வேலை செய்து வந்துள்ளார். இதை கவனித்த நிலா அந்த நபரை திட்டித் தீர்க்க கோபமடைந்த அந்த நபர் நிலா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாராம்.

சொந்த வீட்டில் இருந்தே தன்னை வெளியே அவமானப்படுத்தி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் நிலா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெலுங்கு சினிமாவில் தேவையில்லாமல் வாய்விட்டு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்.

  • 486