Feed Item
Added a news 

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76 வது  கூட்டத்தில்  உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார்.

சினேகா தூபே கூறியதாவது, பாகிஸ்தானின்  பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களைத் தூண்டி, இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சிக்கிறார். ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும்.

பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தானின் அரசுக் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் வளர்க்கிறது. இந்தியா மட்டுமல்ல உண்மையில் அவர்களின் கொள்கைகளால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையால்  பயங்கரவாத செயல்களை மறைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார்.

  • 580