Feed Item
Added a news 

டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் நான்கு இன்ச் மட்டுமே முடி வெட்ட சொல்லியுள்ளார். ஆனால் தவறுதலாக  மொத்தமாக வெட்டியுள்ளார். அதோடு தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தேசிய நுகர்வோர் ஆணையத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடிசி நிர்வாகம் அந்த பெண்ணுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

  • 618